வடமராட்சி கிழக்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்தார். நேற்றைய தினம் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் 7 பிள்ளைகளின் தந்தையாரான 51 வயதுடைய சின்னத்தம்பி இராஜசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழில் 2,966 படகுகளுக்கு எரிபொருள் மானியம்

யாழ். மாவட்டத்தில் 2966 படகுகளுக்கு எரிபொருள் மானிய முத்திரை வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)
Ad Widget

வட மாகாண அஞ்சல் அதிகாரிகளுக்கு பதவியுயர்வு

வட மாகாண அஞ்சல் அதிகாரிகளுக்கு வருடாந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

‘வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்’;-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

தனித்திருந்த வயோதிப தம்பதியினரிடம் ஆயுத முனையில் நகைகள் கொள்ளை

யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள வரணிப் பகுதியில் 9 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழில் 15 வயது சிறுமியைக் கடத்திய இளைஞன், சிறுமியுடன் பொலிஸில் சரண்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்திய இளைஞன் சிறுமியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு சரணடைந்துள்ளார். பெணடிக் வீதியைச்சேர்ந்த 21 வயதான நபரே இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார். (more…)

குரும்பசிட்டியில் வீடுகள் இடிக்கப்படுவதாக மக்கள் புகார்

வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடிக்கப்படுவதாக பொதுமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் முறையிட்டுள்ளனர். (more…)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்க யாழ்.பல்கலை. கலைப்பீட மாணவர்கள் தீர்மானம்

கிழக்கில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு வெள்ள நிவாரணம் ஒன்றை மேற்கொள்ள யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. (more…)

புனர்வாழ்வு அமைச்சில் கடன் பெற 895 பேர் விண்ணப்பம்

புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்படுகின்ற கடன் திட்டத்திற்கு இதுவரை யாழ் மாவட்டத்தில் 895 பேர் விண்ணப்பித்துள்ளதாக புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான நிலையத்தின் இணைப்பு அதிகாரி மேஜர் ஜெகத்குமார தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் மின்தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் 30.01.2013 புதன்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (more…)

புனர்வாழ்வு பெற்றோருக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு பெற்றவர்களிற்கான பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு காரியாலயத்தின் இணைப்பாளர் மேஜர் ஜெகத் குமார தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கை இழிவானது: அமைச்சர் வாசுதேவ

யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கை இழிவானது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். (more…)

யாழில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டார்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

காணாமல் போன சிறுவன் யாழ். கந்தரோடை குளத்தில் சடலமாக மீட்பு

யாழ். கந்தரோரடை இக்கிராயன் குளத்தில் விளையாடச் சென்று காணாமல் போயிருந்த சிறுவன் குளத்திலிருந்து சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார். (more…)

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: கணவன் கைது

வீட்டுக்கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

உதயனுடன் சமரசத்திற்கு இடமில்லை – நீதிமன்றில் அமைச்சர் தேவானந்தா.

தனதும் தனது கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட அவதூறுச்செய்திக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடுத்த ஆயிரம் (1,000) கோடி ரூபா கோரும் மானநஷ்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. (more…)

யாழில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தால் கறவைப் பசுக்கள் கையளிப்பு

யாழ்ப்பாணத்தல் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் கறவைப் பசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 511ஆவது படைப்பிரிவினால் இந்த பசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. (more…)

மனித உரிமை மீறல்களை தடுக்கவும்: ஜூலி பிஷப்பிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

இலங்கையில் குறிப்பாக வடக்கில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள், இராணுவ நெருக்குவாரங்கள், மற்றும் சட்டவிரோதமான குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன. இவைகளை தடுத்துநிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப்பிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர். (more…)

உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜர்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் (ஈ.பி.டி.பி) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. (more…)

கை கொடுக்கும் நண்பர்கள் யாழில் அங்குரார்ப்பணம்

கைகொடுக்கும் நண்பர்கள் என்ற தொனிப்பொருளிலான சுமித்திராயோ தொண்டர் நிறுவனத்தின் யாழ்ப்பாணக்கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வும் அலுவலக திறப்பு நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts