- Wednesday
- April 8th, 2026
யாழ். நகரில் சிறிலங்காப் படையினரின் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து சேதங்களுக்குள்ளாகியது. (more…)
இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் இன்று சுதந்திரதினம் கொண்டாட முடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவரது ஊடக இணைப்பாளர் எஸ்.ஜெயதீபன் தெரிவித்தார். (more…)
வடமராட்சி பிரதேசத்தில் உள்ள நெல்லியடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர். (more…)
யாழ், குருநகரில் காணாமற்போனதாக கூறப்பட்ட 17 வயது சிறுவன் ஞாயிறு இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அவரது சகோதரனினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். (more…)
யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 9 பேர் இலங்கையின் 65ஆவது சுதந்திரதினத்தையொட்டி திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (more…)
எரியுண்ட நிலையில் 19 வயது யுவதியொருவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (more…)
வடமாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)
'விஸ்வரூபம்'பெப்ரவரி 7ஆம் தேதி (வியாக்கிழமை) வெளியாகிறது. இதை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இது குறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் வியாக்கிழமை 7ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.நீதி சற்றே நின்று வந்தாலும் அன்றே ஆனவனவெல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்தமைக்கு மான்புமிகு முதலமைச்சர்க்கு நன்றி. (more…)
நாட்டின் 65ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் திருகோணமலையில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து படைகளின் தளபதிகளுக்கு முன்பாக நின்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (more…)
வன்னியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சென்.ஜோன்ஸ் கல்லூரியில் கல்விகற்கும் 450 மாணவர்களுக்கு கல்வி வசதிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக, A.E.மனோகரன் இசைக் குழுவினரால் இசை நிகழ்ச்சியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கிணற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீராவியடியைச் சேர்ந்த 54 வயதான அபூர்வசிங்கம் சிறிகாந்தனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. (more…)
பாடசாலை செல்லும் மாணவர்களின் பாதுகாப்பில் பெற்றோர், ஆசிரியர்கள் கவனம் செலுத்துமாறு யாழ். மாவட்ட பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. (more…)
யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு சிலிண்டர் மற்றும் வெள்ளிரும்பு ஒட்டும் இயந்திரம் மோடிவேசன் நிறுவனத்தினால் நேற்று கையளிக்கப்பட்டது. (more…)
யாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கு பின்புறத்தில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார். (more…)
வலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பாடாத பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை நடத்த வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பு தீர்மானித்துள்ளது. (more…)
மண்டையோடுகளுக்கும் வெடிபொருட்களுக்கும் மத்தியில் முள்ளிவாய்க்காளில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதும் வெடிபொருட்கள் அற்ற எங்கள் பிரதேசத்தில் ஏன் எங்களை அரசாங்கம் மீள்குடியேற்ற முடியாது?' என்று வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். (more…)
தமது வீடுகளை உடைக்க வேண்டாம் என்று படையினரிடம் கெஞ்சியபோதும் தமக்கு மேலிடத்து உத்தரவு கிடைத்துள்ளது எனத் தெரிவித்து வீடுகளை அவர்கள் இடித்து வருவதாக வலி.வடக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் முறைப்பாடு செய்தனர். (more…)
சனசமூக நிலையங்கள் ஊடாக அபிவிருத்தியை முன்னெடுத்தல்' என்ற கருப்பொருளில வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது. (more…)
யாழ். மாநகர சபைக்கு புதிய சுகாதார பணியாளர்களை நியமிப்பதற்கு ஆணையாளர் செ.பிரணவ நாதனினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை 14 வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் 2013 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாதாந்த பொதுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை யாழ். மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது, யாழ்.மாநகர ஆணையாளர்...
Loading posts...
All posts loaded
No more posts
