Ad Widget

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: கணவன் கைது

body_foundவீட்டுக்கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் மத்தி சூசியப்பர் கோவிலடியிலுள்ள வீட்டு கிணற்றிலிருந்தே ஒரு குழந்தையின் தாயான கமலதீபன் கயல்விழி (வயது 23) என்பவரே இவ்வாறு இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களை அடுத்தே ஸ்தலத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார்
சடலத்தை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை கைது செய்துள்ளனர்.

சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts