Ad Widget

தனித்திருந்த வயோதிப தம்பதியினரிடம் ஆயுத முனையில் நகைகள் கொள்ளை

robberyயாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள வரணிப் பகுதியில் 9 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

நள்ளிரவு வேளை வீட்டின் புகைக்கூடு வழியாக உள்நுழைந்த திருடர்களைக் கண்ட வீட்டுக்காரர்கள் சத்தமிட முயன்ற போது திருடர்கள் வீட்டின் பெண்ணிண் தொண்டையில் துணியால் இறுக்கியதுடன் சத்தமிடாதவாறு கணவனின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு திருட்டை மேற்கொண்டுள்ளனர்.

திருட்டின் போது 15 பவுண் நகைகள், மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம், 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் வயது முதிர்ந்த கணவனும், மனைவியும் தனித்து வசித்து வருகின்ற நிலையில் இக்கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts