சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சி: 4 சந்தேக நபர்களுக்கும் பிணை!

எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த...

பாடசாலை மாணவிகளுக்கு இலவசம் – அடுத்த மாதமும் முதல் நடைமுறையில்

பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் நெப்கின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் நெப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது 10 முதல் 18 வயது வரையிலான மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்பில் இந்த நாட்டில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருடனும்,...
Ad Widget

யாழ்.வல்லையில் 3 பெண்களிடம் 10 பவுண் நகை வழிப்பறிக் கொள்ளை !

மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறிக் கொள்ளையிட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வல்லைவெளிப் பகுதியூடாக செவ்வாய்க்கிழமை (ஒக் 11) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை வழிமறித்த வழிப்பறி கொள்ளையர்கள், அந்தப் பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர்கள் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி உட்பட...

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு – ராஜித

நாட்டில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்துகள் இல்லை என்பதுதான் சோகமான நிலை. இந்த நாட்களில் நான் அந்த மருந்துகளை வாங்கப் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்தவர்கள், இந்த...

யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை, அபிவிருத்தி செய்யும் நகர மயமாக்கல் அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம்(10) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தன் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு நகர அபிவிருத்தி...

லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விலைகளை குறைத்துள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயாலும் ,5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5300 ரூபாயாகவும் 5...

பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை இம்மாத இறுதியில் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி, பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தினை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். குறித்த விமான சேவை தொடர்பில் இந்திய விமான...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள் -சுரேஷ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை 2 இலட்ச ரூபாயாக...

எங்களின் உயிர் அவர்களின் இரண்டு இலட்சத்திற்கு பெறுமதியா! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ள நிலையில் அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு காலக்கெடுவை விதிக்க வேண்டும் – சம்பந்தன்

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஐ.நா.விலும்...

2ஆம் லெப்டினட் மாலதிக்கு நினைவேந்தல்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீரச் சாவடைந்த முதல் பெண் போராளி 2ம் லெப்டினன்ட் மாலதி (பேதுருப்பிள்ளை சகாயசீலி)யின் நினைவேந்தல் இடம்பெற்றது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார். நேற்று மாலை 6 மணிக்கு மாலதி வீரச்சாவடைந்த இடத்தில் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது. வேலன்...

ஒரே நேரத்தில் சேவையில் இருந்து வெளியேறிய 249 விசேட வைத்திய நிபுணர்கள்

இலங்கையில் விசேட வைத்தியர்களின் தேவையில் 45 சதவீதம பற்றாக்குறை நிலவுகின்ற போதில் 249 விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே நாளில் ஓய்வு பெறவுள்ளனர். இதன் காரணமாக வைத்தியசாலை கட்டமைப்பு கடும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு பெறுவதால், மருத்துவப்...

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல் தொடர்பான அனைத்து கட்டணங்களும் உயர்வு!

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிட்டுள்ளார். அதன்படி, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தல் ஆகியவற்றுக்கான கட்டணம்...

யாழில் சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் திறந்து வைப்பு

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் நேற்று (ஞாயிற்க்கிழமை) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய அகில இலங்கை சைவமா சபையினால் உருவாக்கப்பெற்ற விபுலானந்தரின் திருவுருவச்சிலையினை தென் கையிலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் திறந்து வைத்தனர். அதேபோல் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடைய திருவுருவ...

பலாலி – சென்னை இடையே மீண்டும் விமான சேவை!!

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மூன்று வருடங்களுக்குப் பின்னர் அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த தகவலை கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ளது. பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை...

ரயில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில், ரயில்களில் பல கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பயணிகளை காயப்படுத்தும் வகையில் சில கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆதரவுடன் அவசர பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்....

யாழில் கூரிய வாள்களுடன் இளைஞன் கைது!

யாழில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் மூன்று கூரிய வாள்களுடன் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், தாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....

வங்கிகளுக்கு விடுமுறை – அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் வழமைபோன்று இடம்பெறும்

நாடளாவிய ரீதியில் உள்ள வங்கிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீலாதுன் நபி தினம் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என...

அவதானமாக செயற்படுங்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது எனவும்...

இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த மகிந்தவினால் ஏற்பட்ட பரபரப்பு

அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒன்றிணைந்து நிற்போம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று முனதினம்...
Loading posts...

All posts loaded

No more posts