யாழில் வெடி குண்டு வீச்சு!!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர். குறித்த வெடி குண்டு வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்துள்ளது. அதனால் காரில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண...

மகனால் தந்தை அடித்துக் கொலை!!

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் மகனால் தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நேற்று (18) இரவு இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் 66 வயதுடைய முதியவர் ஒருவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Widget

சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கம்! இலங்கையில் அதிக வெப்பம் குறித்து வெளியான தகவல்

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கான காரணம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வெப்பத்திற்கு சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய காரணங்களாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர்...

அழகி, அழகன் தெரிவு, மரதன் ஓட்டப் போட்டி, சைக்கிளோட்ட போட்டிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பங்களையும் www.pmd.gov.lk இணைய பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அழகன், அழகிப் போட்டி “வசத் சிரிய புத்தாண்டு அழகன் / அழகி (திறந்த சுற்று) போட்டிகளுக்காக 03 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட...

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது குறித்த வழக்கு ஒத்திவைப்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என். சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம்...

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இருவருக்கு கொரோனா!

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக “தி இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது, ​​​​இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

யாழில் தற்கொலைக்கு முயன்ற பெண் பலி!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, ஏழாலை பகுதியில் உள்ள முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் (16) இரவு...

எரிபொருள் கோட்டாவின் அளவு அதிகரிப்பு !

பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டாவை மேலும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முச்சக்கர வண்டிகளுக்கு – 8 லீட்டரும், மோட்டார் சைக்கிள்களுக்கு – 7 லீட்டரும்பேருந்துகளுக்கு – 60 லீட்டரும், கார் – 30, லொரி – 75 லீட்டரும் வழங்கப்படும். அதேவேளை வேன்கள்- 30 லீட்டரும் land vehicles...

இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாண நீதி மன்றில் ஆஜராகுவதாக தீர்மானம்!!

இன்று (18) அனைத்து இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாண நீதி மன்றில் ஆஜராக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வணிக கழகத்தின் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார். நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்தித்தின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். சித்திரை புத்தாண்டு தினத்தன்று தீவக நுழைவாயிலில் நயினா தீவு அம்மனின் சிலை ஒன்று...

தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துமாறு கோரிக்கை!

தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால், உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும். அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். தினமும் 3 லீட்டர்...

அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?

அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின் விலைகள் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து குறித்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளமை காரணமாக இறக்குமதியானர்கள் இந்தக் கட்டணங்களை...

நிறைவுக்கு வந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம்!

தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் பழரசம் வழங்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் கையெழுத்துப் போராட்டமும் நல்லூரில் ஆரம்பமாகியது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்பாக நேற்று (16) காலை 9 மணி அளவில் இப்போராட்டம்...

நாகபூசணி அம்மன் சிலை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலை தொடர்பில் யாழ். நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை அவ்விடத்தில் அமைந்துள்ள வீதி வழிகாட்டி பலகையில் யாழ்ப்பாண பொலிஸார் ஒட்டியுள்ளனர். யாழ். பண்ணைச் சுற்று வட்டத்தில் திடீரென தோன்றிய நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்நிலையில், நீதிமன்றினால்...

யாழ் பல்கலையில் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!!

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (12.04.2023) புதன்கிழமை யாழ் பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின்...

பனாமா நாட்டு கப்பலுக்குள் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டு கப்பலில் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற குறித்த நால்வரும் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை, தொண்டமனாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நால்வரே...

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்து குண்டர்கள் தாக்குதல் : ஊழியர்கள் வைத்தியசாலையில்

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய...

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு நடவடிக்கையில் கடற்படை!

காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாவகச்சேரியில் இடம்பெற்ற கொடூர கொலை!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப்பகுதியில் வைத்து நேற்று மாலை ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் வசிக்கின்ற 20 வயதான இளைஞர் மனநல சிகிச்சைகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம்...

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளூராட்சி...

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம்?

எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பால் மாவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய...
Loading posts...

All posts loaded

No more posts