Ad Widget

பனாமா நாட்டு கப்பலுக்குள் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டு கப்பலில் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற குறித்த நால்வரும் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலணை, தொண்டமனாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts