- Wednesday
- August 27th, 2025

கடந்த மாதம் 04.12.2022 ம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், அன்றையதினமும் மறுதினமும் யாழ் நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்டன. அத்துடன் குறித்த உணவகத்திற்கு வடை தயாரித்து வழங்கும் சமையற்கூடமும் இனங்காணப்பட்டது....

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் செலுத்தப்பட்டது. யாழ் மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் த.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. யாழ் மாவட்டத்திலுள்ள...

யாழ்.வலி,வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 108 ஏக்கர் பொதுமக்களின் காணி இம்மாத இறுதிக்குள் மக்களிடம் மீள வழங்கப்படும். என இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் உறுதியளித்துள்ளனர். மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் முப்படை தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் ,...

நாட்டில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது. இந்தநிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல் மற்றும்...

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளர்களின் எண்ணிக்கை 871 எனவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 846 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 224 நோயாளர்களும், கண்டியில் 190 நோயாளர்களும் இந்த வருடத்தின்...

யாழ்ப்பாணத்தில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை, தாயின் சகோதரியின் கணவனால் ( பெரியப்பா) துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால் , குழந்தையின் தாய் குழந்தையை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார். வைத்திய...

தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தினை சிறப்பிப்பதற்காக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லூர் சிவன் ஆலயத்தை வந்தடைந்தார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. அவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ். பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடக வளாகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த வீதி விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல்...

க.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது. ஆனாலும் இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில் தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில...

தமிழ் மக்கள் தேசியமாவீரர்களின் தியாகங்களுக்கு புறம்பாக செயற்படுகின்ற எவரோடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடாத்தவோ அல்லது இணைந்து செயற்படவோ போவதில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த...

கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இம்முறை தேசிய பொங்கல் விழா இடம்பெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (15) இரு விழாக்களில் கலந்து கொள்வதற்காக 14 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இம்முறை யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய இவ்வாரம்...

நாங்கள் பிரிந்து தேர்தலை எதிர்கொள்வது அணைவரும் இணைந்து ஒரு பலமான ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியாக இருக்கின்றது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இடம்பெற உள்ள...

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அங்கிருந்து பேரணியாகச் சென்று மகஜர்களை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத்த தினைக்களத்திலும், அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர்...

யாழ்.மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச விளையாட்டு மைதானத்தை கட்டும் பணிகளை மிக விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற...

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதென்றால் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்படப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அது மாத்திரமின்றி சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அனைத்து கொடுப்பனவுகளை இடைநிறுத்தினால் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது...

தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி என்பவற்றை ஐந்தரை பவுணில் செய்தவற்கு, சந்தேகநபரிடம் பணம் கொடுத்து , தாலி மற்றும் கொடியினை செய்து...

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் (வியாழக்கிழமை) செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. வலிவடக்கு பிரதேச சபை, வலிமேற்கு பிரதேச சபை, யாழ் மாநகர சபை சாவகச்சேரி நகரசபை, காரைநகர் பிரதேச...

முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளை(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்துச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கொழும்பு...

All posts loaded
No more posts