தேசிய மக்கள் சக்தி யாழ். மாவட்டத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது!

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் (வியாழக்கிழமை) செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. வலிவடக்கு பிரதேச சபை, வலிமேற்கு பிரதேச சபை, யாழ் மாநகர சபை சாவகச்சேரி நகரசபை, காரைநகர் பிரதேச...

ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?

முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளை(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்துச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கொழும்பு...
Ad Widget

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த...

வடக்கு கிழக்கில் அங்கஜன் தலைமையில் சுதந்திரக் கட்சி “கை” சின்னத்தில் போட்டி

வடக்கு கிழக்கில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் இராமநாதன் தலைமையில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் சகல கட்சிகளும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் முன்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி செயலாளரும் நாடாளுமன்ற...

தமிழரசுக் கட்சியை சிதைக்கப் பார்க்கின்றீர்களா..! ரெலோ, புளொட் மீது சம்பந்தன் பாய்ச்சல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டால் கூடுதலான ஆசனங்களை கைப்பற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆமோதித்து -...

கொடூரமாக தாக்கப்பட்ட நபரை காப்பாற்றிய இராணுவம்!

விஸ்வமடு தேராவில் இராணுவ முகாமிற்கு அருகில் பிரதேசவாசிகள் குழுவினால் இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், குறித்த நபர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், இராணுவ அதிகாரிகள் உடனடியாக இது குறித்து ​பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பொலிஸ் அதிகாரிகள் வருவதற்கு தாமதம்...

தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது – சுமந்திரன்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான நேற்றைய(செவ்வாய்கிழமை) பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தற்போதும் எமது மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள்...

இம்மாதத்திற்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் !

ரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பணிகள் நிறைவடையும் என்றும் அதன்பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு , சிவப்பு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகர சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. பருவ மழையினை அடுத்து யாழில் டெங்கு நுளம்பின் அதிகரிப்பு காரணமாக , யாழில். டெங்கு காய்ச்சலின்...

அச்சுவேலியில் மது போதையில் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது!

து போதையில் வீட்டுக்கு வந்து , மனைவியுடன் முரண்பட்டவர் , குடியிருக்கும் வீட்டினை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அச்சுவேலி பாரதி வீதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வீடு பகுதிகளவில் எரிந்துள்ளது. வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நிறை போதையில் வீட்டிற்கு வந்து , மனைவி ,பிள்ளைகளுடன்...

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக ம.பிரதீபன்!

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார். என பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் அமைச்சு ஒன்றின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிலையில் பதில் கடமையை மேலதிக அரசாங்க அதிபராக...

கூட்டணி குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு – செல்வம் அடைக்கலநாதன்

தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக டெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய...

யாழ். மாநகர மேயர் வேட்பாளராக மீண்டும் ஆர்னோல்ட்!! – மணிக்கும் வெற்றி வாய்ப்பு!!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மேயர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ. ஆர்னோல்ட் மீளவும் களமிறக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. இதேவேளை, மணிவண்ணன் தரப்புக்குக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரியவரும் நிலையில், மீண்டும் மாநகர மேயராக மணிவண்ணன் தெரிவாவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது....

திருத்தப்பட்ட மின் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்!!

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய கட்டணங்கள்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தனித்து களமிறங்குகின்றது தமிழரசு கட்சி!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது...

யாழ். கலாச்சார மத்திய நிலையத்தினை திறந்துவைக்கிறார் ஜனாதிபதி!

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். அடுத்த மாதம் 11ஆம் திகதி ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின்...

ஆயுதங்கள் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது. யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில்...

அரசாங்கத்திற்கு 7 நாட்கள் காலக்கெடு – தமிழ் தேசியக் கட்சிகள் அதிரடி முடிவு!

அரசியலமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாட்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அரசுடனான பேச்சிலிருந்து வெளியேறுவோம் என தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்றைய(செவ்வாய்கிழமை) சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கவுள்ளன. அரசுடனான இன்றைய சர்வகட்சிப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுப்பது என்பது தொடர்பில்...

மின் கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுங்கள் – மகிந்த

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவுளை,மின்சாரக் கட்டணங்களுக்கான செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை...

காணாமல்போன இரு பிரித்தானிய பிரஜைகள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உக்ரையில் தன்னார்வப் பணியைச் மேற்கொண்டிருந்த 28 மற்றும் 48 வயதுடைய இரு ஆண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இறுதியாக குறித்த இரு பிரித்தானிய பிரஜைகளும் வெள்ளிக்கிழமை சோலேடார் நகருக்குச் சென்றதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமீப நாட்களில் அங்கு...
Loading posts...

All posts loaded

No more posts