Ad Widget

தேசிய அரசு அமைய அனைவரும் ஒன்றிணையுங்கள் ,மைத்திரி அழைப்பு

தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கண்டி எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்த அனைத்து மக்களுக்கும் முதலில் எனது...

கோத்தா , பசில் ,தொண்டமான் ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேறினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச, டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் எமிரேட்ஸின் ஈ.கே.349 விமானத்தில் தனது மனைவியுடன் சென்றுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான...
Ad Widget

கோட்டாவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடக்கும் என்கிறது புதிய அரசு!

அரச ஊழியராக இருந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, தேர்தல் சட்ட விதிகளை மீறும் விதத்தில் நேரடியாக அரசியலில் ஈடுபட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து விசாரணைகள் நடத்தப்படும். அரச ஊழியர்கள் எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையைத் தடுக்கும் நோக்கத்துடனேயே இது முன்னெடுக்கப்படுகிறது. - இவ்வாறு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரும் எம்.பியுமான ராஜித...

நான் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல மாட்டேன்: கே.பி.

தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி., தெரிவித்தார். தான் கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை...

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களின் மீது யாரும் கல்லெறியவில்லை

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னராக காலப்பகுதி மிகவும் அமைதியானதாக இருக்கின்றது. வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமையே காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ள இராணுவப்பேச்சாளர் ருவன் வணிகசூரிய, வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மீது கல்வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கில் எந்தவொரு இடத்திலேயேயும் விடுதலை புலிகளின் கொடி ஏற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வடக்கில்...

புதிய அரசிடமிருந்து எமக்குஅழைப்பில்லை – சம்பந்தன்

தேசிய அரசியலில் இணைவதற்கு புதிய அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர்கள் 60 பேர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரனுக்கு மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே...

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரானார் பஸ்நாயக்க

பாதுகாப்பு அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யு.டி பஸ்நாயக்க நேற்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பஸ் புதிய செயலராக நியமனம் பெற்ற பஸ்நாயக்க சுற்றுச்சூழல் விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவத்தளபதி...

புதிய வடக்கு மாகாண ஆளுநராக பள்ளிகக்கார நியமிக்கப்படலாம்!

புதிய  வடக்கு மாகாகண ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ் பள்ளிகக்கார நியமிக்கப்படவுள்ளார் எனக் கூறப்படுகிறது. எனினும் இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இவர்  மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியின் கீழ்  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றியதுடன் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதியாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில்...

அனந்தி மற்றும் சிவகரன் நீக்கப்பட்டார்கள் என்ற செய்தி உண்மை இல்லை

மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணித் தலைவர் சிவகரன் ஆகியோர் கட்சியில் இருந்தோ, மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தோ நீக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம்   தெரிவித்தார். எனினும் கட்சியின் முடிவுகளை மீறி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கட்சிக்கு நெருக்கடிகளை உருவாக்குவதாகவும், அது...

மத்திய வங்கி ஆளுநராக தமிழர் நியமனம்?

மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அர்ச்சுண மகேந்திரன் அல்லது இந்திரஜித் குமாரசுவாமி இருவரில் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.அருச்சுணா மகேந்திரன், ரணில் விக்கிரமசிங்கவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் முதலீட்டு அதிகார சபையின் தலைவராக கடைமையாற்றி இருந்தவர் என்பது...

இராணுவ, கடற்படைத் தளபதிகள் ‘அவுட்’! விமானப் படைத் தளபதிக்கு ஓய்வு!! பொலிஸ்மா அதிபர் பதவியில் தொடர்வார்!!!

புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக எதிர்வரும் 19 ஆம் திகதி - இன்னும் 9 நாள்களில் - ஓய்வுபெறவிருக்கின்றார். அதுவரை அவரை அப்பதவியில் தொடர அனுமதித்து, அதன்பின்னர் தமது நம்பிக்கையான...

பதவிப்பிரமாண செலவு ரூ.6,000

நாட்டின் ஏழாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். அந்த பதவிப்பிரமாண வைபவத்துக்காக 6,000ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புதிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக பூக்கொத்து வாங்குவதற்கு சிறுதொகையும் சுதந்திர சதுக்கத்துக்கான மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக...

புதிய அரசில் டக்ளஸ் இணைவதை கூட்டமைப்பு அனுமதிக்காது! சுமந்திரன்

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  கருத்துத் தெரிவித்துள்ளார் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரமுகர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் திட்டம்: விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

இரு முக்கிய அரசியல் பிரமுகர்களும், விடுதலைபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரும் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயல்கின்றனர் என்று வெளியான தகவல்களைத் தொடர்ந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். புலனாய்வு துறையினரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட மூன்று நபர்களும் பயன்படுத்தவுள்ள வாகனங்களின் விவரங்களும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் 41 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு இன்று மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண...

மகிந்தவின் தோல்வியை தாங்க முடியாமல் ஒருவர் சாவு

மகிந்த ராஜபக்சவின் தோல்வியை தாங்க முடியாமல் மாரடைபினால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று களனியில் இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமொன்றில் பணிப்பாளராக கடமையாற்றி வந்த இரு பிள்ளைகளின் தந்தையான நிமல்சிரி அபேவிக்ரம என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பொது வேட்பாளர் மகிந்த ராஜபக்ச...

தீர்வுக்கு புதிய அத்திபாரம் மைத்திரி – வடக்கு முதல்வர்

பெரும்பான்மையினரும் சிறுபான்பான்மையினரும் இணைந்து நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளோம். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு சிறந்த அத்திவாரம் மைத்திரிபால சிறிசேன என, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில் வடக்கு முதலமைச்சர் விடுத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....

வடக்கு- கிழக்கு, மலையக வாக்குகளிலேயே தோற்றுள்ளேன் – மகிந்த

இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்தும் மலையகத் தோட்டப் பிரதேசங்களிலிருந்தும் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மற்றபடி, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் மக்களை சந்தித்தபோது கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையிலிருந்து வெளியேறி...

பதவியேற்ற உடனேயே தமிழர்களை மறந்து போன புதிய ஜனாதிபதி! மனோ கணேசன் காட்டம்!!

"தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஆதரவைக் கோரிப் பெறுவது. தேர்தல் முடிந்ததும் தமிழர்களை உதாசீனம் செய்து உதறித் தள்ளுவது. - இதுதான் தென்னிலங்கை அரசுகளின் காலாகால பரவணிப் பழக்கம். அதை இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே செயலில் காட்டத் தொடங்கி விட்டீர்களே!" - என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி வீழ்ந்தார் ஜனநாயக மக்கள்...

சர்வதேச விசாரணைக்கு புதிய ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – டேவிட் கமரூன்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவை நான் வாழ்த்துகிறேன். நான் அந்த நாட்டிற்கு விஜயம் செய்த வேளை அந்த நாட்டில் பெரும் சக்தி...
Loading posts...

All posts loaded

No more posts