வவுனியாவிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு பகுதியில் கூட்டு வன்புனர்வின் மூலம் படுகொலை செய்யப்பட்ட 18 வயது மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் ஒரு மணிநேரம் இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன் ஒன்று கூடிய மாணவர்களும் ஆசிரியர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், 'அரசாங்கமே...

உறவுகளை அஞ்சலிக்கக் கூடிய மக்களின் கண்ணீரால் தோய்ந்தது முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்நிலையில், மே 12 ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையான வாரத்தை தமிழின அழிப்பு வாரமாக - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...
Ad Widget

மூன்று தினங்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும்

இடை அயன ஒடுங்கல் வலயம், வடக்கு பகுதிக்கு மேல் காணப்படுவதால் தற்போது மழை வீழ்ச்சி காணப்படுகின்றது. இது தற்போது நாட்டை கடந்து செல்வதால் தொடர்ந்து மூன்று தினங்கள் இவ்வாறு சீரற்ற காலநிலை தொடரும் என்று திருநெல்வேலி பிராந்திய வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் நேற்றய தினம் தெரிவித்தார். இடை அயன ஒடுங்கல் வலயமானது தற்போது...

கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். பிதிர்க்கடன் நிறைவேற்றுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை. அது...

பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் குற்றச்செயல்கள் இடம்பெற ஏதுவாக அமைகின்றன! வடக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு!!

போர் முடிந்த பின்னர் சட்டத்தின் ஆதிக்கம் குறைந்து வருவதாகத் தென்படுகிறது. சில சமயங்களில் பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைந்து விடுகின்றன. - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். புங்குடுதீவில் உயர்தர மாணவி வித்தியா வன்புணர்வுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

தமிழருக்கு இன்று தேசிய துக்க நாள்! சுடர் ஏற்றி எமது உறவுகளை அஞ்சலிப்போம்!!

"இன்று மே 18ஆம் திகதி. இன்றைய நாள் தமிழரின் தேசிய துக்க நாளாகும் - போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாளாகும் - இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி - அஞ்சலி செலுத்தி நினைவுகூரும் நாளாகும். எனவே தமிழர்களாகிய நாம் அனைவரும் இதனைச் செய்வோமாக.'' - இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தரணியெங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று!

இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த நாள் (மே 18) இன்றாகும். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில்...

புங்குடுதீவு மாணவி மரணம்: மேலும் ஐவர் கைதால் பதற்றம்

புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி...

வன்புணர்வுகளுக்கெதிராக இளையவர்கள் போராட்டம்! நல்லுாரில் திரண்டனர்

த.தே.ம.மு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு தடை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் குறித்த நினைவு தினத்தை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அன்றையதினம் அதே பகுதியில் நினைவு தினத்தை நடத்தவுள்ளதால் இரு கட்சிகளுக்குள்ளும் முரண்பாடு ஏற்படலாம் என...

இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிரார்த்தனைகள்

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையில் உள்ள குழந்தைவேல் சுவாமிகள் ஆலயத்தில் 17, 18, மற்றும் 19 ஆகிய திகதிகளில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சைவ மகா சபையால் வெள்ளிக்கிழமை (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த...

செம்மணி விபத்தில் ஒருவர் சாவு!

செம்மணி வீதியில் இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் மோட்டார்சைக்கிளும் கலோட்ரஸ்ட் வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். விபத்தில் பு.துஷிதரன் (வயது-25) என்பவரே உயிரிழந்தார். இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சட்டவிரோத குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜர் ஆகக்கூடாது

சட்டவிரோத குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜர் ஆகக்கூடாது என யாழ்.பல்கலைக்கழக சமூகம் சபதம் எடுத்துள்ளது. புங்குடுதீவு மாணவியின் படுகொலை நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கண்டன போராட்டத்தின் பின்னரே யாழ்.பல்கலைக்கழக சமூகம் அவ்வாறு சபதம் எடுத்துக்கொண்டது. அத்துடன் அவ்வாறான குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆகும் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான மாபெரும்...

புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்கள் மூவருக்கு 21ஆம் திகதி வரை மறியல்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான லெனின் குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார்,ஜெயக்குமார், தவக்குமார்,ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 18...

பூங்குடுதீவு மாணவி கொலை: பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்

புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த கொலையாளிகளுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கண்டன போராட்டம் யாழ்ப்பாணப்...

ஈ-சற் பணப்பரிமாற்றம் மூலம் பலரிடம் மோசடி செய்தவர் சிக்கினார்!

ஈ-சற் பணப்பரிமாற்றம் மூலம் பலரை ஏமாற்றிய ஒருவரை இளவாலைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். பண்டத்தரிப்பை சேர்ந்த இருவர் சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் குறித்த சந்தேக நபருக்கு ஈ-சற் முறையில் பணத்தை அனுப்பி ஏமார்ந்தனர். அவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தை நீதிமன்றின் அனுமதியுடன் விசாரணைகளை நடத்தியே பொலிஸார்...

போரில் உயிர் நீத்தோருக்காக விளக்கேற்றி அஞ்சலிப்போம்! அனைத்து தமிழர்களுக்கும் கூட்டமைப்பு அழைப்பு!!

மே 18 ஆம் திகதி, போரில் உயிர் நீத்தோர் நினைவாக - அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக, விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், "உயிர் நீத்தோருக்கு ஈமக்கடன் செய்வதும், ஆன்ம ஈடேற்றத்துக்காகப்...

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய அரசுக்கு ஒத்துழைக்க மாடடோம்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு!!

"நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசு அமைவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கூட்டு அரசுக்கு இனி அவசியம் இல்லை. எனவே, பிரதான தனிக் கட்சியே ஆட்சியமைக்க வேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். "எமது பிரதான எதிரி ரணில் விக்கிரமசிங்க ஆவார். அவரை ஒன்றிணைத்து எதிர்கால அரசியலை மேற்கொள்ள முடியாது....

வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 2014 - 2015 ஆம் கல்வியாண்டில் வியாபார முகாமைத்துல இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும்...

கண்டெயினருடன் மோதிய யாழ் தேவி – ரயில் போக்குவரத்து பாதிப்பு

பிரதான ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ரயில் சேவைகள் தாமதம் அடைந்துள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குணுபிடிய பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டெயினர் ஒன்றுடன் யாழ் தேவி ரயில் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில், உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading posts...

All posts loaded

No more posts