- Monday
- May 11th, 2026
யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 28 ஆண்டு கால மனித நேய சேவை நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பூநகரி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முழங்காவில் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் விசேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது மருத்துவ உபகரணங்கள்...
நாட்டிலுள்ள சகல பிள்ளைகளும் சிறந்த கல்வியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதுடன் கிராம மற்றும் நகர்ப்புற பிள்ளைகள் அனைவருக்கும் சமமான வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிள்ளைகள் தமது கல்வி மற்றும் அனுபவத்தினூடாக எதிர்காலத்தை வெற்றிகொள்ளக் கூடிய வகையில் சிறந்த கல்வி முறையை நாட்டில் ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொட்டாஞ்சேனை...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான...
தமிழ்தேசிய மக்கள் முன்னணி இரு தேசங்கள் ஒரு நாடு என்னும் கொள்கை அடிப்படையில் தொடர்ந்தும் பயணிக்கும். மக்கள் தமிழ்தேசியத்தின் உயர்ச்சிக்கா? அழிவுக்கா? வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கவேண்டும். என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு...
ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து சொகுசு வாகனம் பெற்றமை உண்மையானதே என தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரித்தானியா தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார். தான் முன்னாள் போராளிகள் பற்றி குறிப்பிட்டது உண்மையல்ல என்றும் தான் கதைக்கும்போது எந்த ஊடகவியலாளரும் அங்கு இருக்கவில்லை என்றும் அந்த செய்தி வேண்டுமென்றே தமது கட்சி அங்கத்தவர்களாலேயே பரப்பப்படுவதாகவும் அந்த நேர்காணலில் தெரிவித்தார்....
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் யாழ் மாவட்டத்திலுள்ள எல்லா பொலிஸ் நிலையங்களையும் மூடி விடுவோம் என முன்னாள் யாழ் மாவட்ட உறுப்பினரும், உதவி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் கூறினார். பொலிஸ் நிலையங்கள் எல்லாம் மக்களின் காணிகளில் தான் இயங்குகின்றன அனைத்து பொலிஸ் நிலையங்களும் அகற்றப்பட்டு அவர்கள் தமது சொந்த கட்டிடங்களில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்...
இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியும் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. வேட்பாளர்களாக திருமதி விஜயகலா மகேஸ்வரன், ராஜலிங்கம் சிவசங்கர், சின்னத்துரை குலேந்திரராசா , செபஸ்ரியாம்பிள்ளை மரியதாசன், ரவீந்திரன் சுஜீபன், குமாரு சர்வானந்தா, இளையதம்பி நாகேந்திரராசா, முகமட் சுல்தான் ரகீம், வன்னியசிங்கம் பிரபாகரன், சின்னராசா விஜயராசா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பட்டியலில் மகேஸ்வரனின் தம்பி...
2015 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) சுப நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முதன்மை வேட்பாளராக முன்னிறுத்தி அவரது தலைமையில்...
வடமாகாணத்தின் முதலாவது பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா யாழ் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காக்கைதீவில் இன்று வெள்ளிக்கிழமை (10.07.2015) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். மனித ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை...
இதுவரையில் நடந்து முடிந்துள்ள ஒரு தேர்தலுக்கு முன்பாவது இதுவரையில் நாம் எமது மக்களுக்கு இதுவெல்லாம் செய்துள்ளோம் எனக் கூறி வாக்கு கேட்கத் தகுதியில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இனி செய்வோம் என்று கூறியே தொடர்ந்தும் வாக்குகளைக் கேட்டு வருகின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் எமது மக்களுக்கு எதுவுமே செய்யாமல், எமது மக்களை ஏமாற்றி, முடக்கி...
இலங்கையின் வடக்கு -கிழக்கு மக்களுக்கு உசிதமான ஒரு தீர்வு உருவாக உலகத்தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அமெரிக்காவில் அறைகூவல் விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன். ஓர் இனத்கை குறிவைத்து இனப்படுகொலை நடைபெறும்போது அதற்கு எதிர்த்தாக்குதல் அந்த இனத்தினால் நடத்தப்பட்டால்,இனப்படுகொலையில் ஈடுபட்ட இனம்தான் அதற்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், இருப்பினும் அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குத் தமக்கு அதிகாரமில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என பிரஜைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறப்பிட்டதாக தொழிற்சங்கத் தலைவர்...
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கி மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அவர்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி நெல்லியடி பிரதேசத்தில் அதிகாலை 4 மணியளவில் வீதி...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நாட்டில் அரசியல் பதற்ற நிலை அதிகரித்துவரும் வேளையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க நேற்றுப் பிரிட்டனுக்குத் திடீர் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய சகாவான சந்திரிகா குமாரதுங்க சமீபத்தில் இடம்பெற்ற மஹிந்த தரப்பு விடயங்கள் குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ளார் எனவும், இந்நிலையிலேயே அவர் பிரிட்டன் பயணமாகியுள்ளார்...
நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பா.உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரன் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தமிழ் தேசியத்தின் அடையாளம் தலைவர் பிரபாகரனும் போராளிகளுமே என தெரிவித்துள்ளார்இச்செவ்வியின் போது காணாமல் போனோர்கள் தொடர்பான விடயம் ஐ.நா சபையில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை தரும் என தெரிவித்துள்ள அவர் முன்னாள் போராளிகள்...
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைகள் குழப்பங்களின் மத்தியில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் ஆறு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்படி அந்தக்கட்சியின் சார்பில் மாவை.சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், சிறிதரன், அருந்தவபாலன் ஆகியோருடன் பெண் வேட்பாளராக மதினி நெல்சன் போட்டியிடுகிறார். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட இரண்டு...
பிரதான கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத கூட்டம் கூடுதல், வேட்புமனு தாக்கல் செய்வதை தடைசெய்தல், இடையூறு செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் தடை விதித்துள்ளதுடன் அதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
தலைக்கவசம் அணியாமல் வேகக்கட்டுப்பாட்டு இல்லாமல் மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞன் குருநகர் சேமக்காலைக்கு திரும்பு வளைவுடன் மோதுண்டதில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவத்தில் செல்வராசா றுபின் வயது 19 என்பவரே உயிரிழந்தவராவார். மேலும் இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் எவர் சென்றாலும் எக்காரணம் இல்லாமல் உடனடியாக அவர்கள்...
சுன்னாகம், புஸ்பமணியம் வீதியில் கஞ்சா நுகர்ந்த பூசகர் ஒருவரை, நேற்று வியாழக்கிழமை (09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசியப் பொலிஸார், பூசகர் மீது சந்தேகம் கொண்டு விசாரணை செய்த போதே, பூசகர் கஞ்சா நுகர்ந்தமை தெரியவந்தது. பூசகரை...
புலிப் போராளிகளுக்கு எதிர்வரும் தேர்தலில் ஆசனங்கள் ஒதுக்க இயலாது என புலிப் போர்வையாளிகள் கூறியுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றய தினம் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "புலிகள்...
Loading posts...
All posts loaded
No more posts
