தெல்லிப்பழையில் முறையற்ற கர்ப்பம் அதிகரிப்பதாக புகார்

தெல்லிப்பழை பிரதேசத்தில் முறையற்ற கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பன இடம்பெற்றன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரையில் 30 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பா.நந்தகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்றபோது இவர் இவ்வாறு...

பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட நிதி கிடைக்காது!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி இல்லாதொழிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று (10) ஆரம்பமான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களுக்கான சேவையை அலட்சியம் செய்வோருக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி அவசியமில்லை என குறிப்பிட்ட பிரதமர் தமது பிரதேசத்தில்...
Ad Widget

சமூர்த்தி பயனாளிகளுக்கான வீட்டுக் கடனுதவி

சமூர்த்தி நிவாரணம் பெற்ற பயனாளிகளில் 80 பயனாளிகளுக்கான வீட்டு கடன் உதவி இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் மகேஸ்வரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்றது. சமூர்த்தி பயனாளிகளுக்கான காசோலைகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வழங்கி வைத்தார். 2014...

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் நோக்கி நடைபயணம் ஆரம்பம்

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி நடை பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. மனித உரிமை மீறல்களுக்கு உள்ளக பொறிமுறை பொருத்தமற்றது என்பதை சட்டிக்காட்டியும் சர்வதேச விசாரணையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும் வட மாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம்...

யாழ். மாவட்டத்தில் குடிநீர் போத்தல்களில் கலப்படங்கள் – வழக்குத் தாக்கல் செய்ய முடிவு

யாழ். மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை அதிகரித்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பாவணையாளர் அலுவல்கள் அதிகார அதிகாரி தனசேகரன் வசந்த சேகரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு குழு...

‘இலங்கை: நீதிக்கான தேடல்’ புதிய ஆவணப்படத்தால் இலங்கைக்கு தலையிடி!

இலங்கையின் போர்க்குற்றங்களை, சனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘இலங்கை: நீதிக்கான தேடல்’ (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் இந்த அரை மணிநேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில்...

மன்னார் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற கையெழுத்து வேட்டையில் வடமாகாணசபை அமைச்சரும் இணைந்தார்!.

யாழில் கடந்த 75 நாட்களில் வீதி விபத்துக்களில் 48 பேர் மரணம்!!

யாழ். மாவட்­டத்தில் வீதி விபத்­துக்­க­ளினால் 75 தினங்­களில் 48 பேர் மர­ண­ம­டைந்­துள்­ள­துடன் 4ஆயி­ரத்து 850 பேருக்கு எலும்பு முறிவும் 700 பேருக்கு தலையில் பாதிப்பும் ஏற்பட்டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கின்­றது. யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் புள்ளி விப­ரங்­களின் பிர­காரம் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திக­தியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் ஏற்­பட்ட விப­த்­துக்கள்...

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­களின் நல்­வாழ்­வுக்கும் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுப்பேன் – விஜ­ய­கலா

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பல்­லா­யி­ரக் ­க­ணக்­கான சிறு­வர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு எனக்கு புதிய அமைச்சின் மூலம் வழங்­கப்­பட்­டுள்­ளது.எனவே இந்­தப்­ப­ணி­யினை உரிய வகையில் நான் மேற்­கொள்­வ­துடன் தேசிய ரீதி­யிலும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்பேன் என்று சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார். இராஜாங்க அமைச்சராக அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கந்தையா குணரட்ணம் காலமானார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியும், பௌதிகவியல் துறை, கணினி விஞ்ஞானத் துறை ஆகியவற்றின் தாபகத்  தலைவருமாகிய வாழ்நாள் பேராசிரியர் கந்தையா குணரட்ணம் நேற்று (09-09-2015) காலை கொழும்பில் காலமானார். கொழும்பு பல்கலைக் கழக பௌதிகவியற்றுறைப் பட்டதாரியாகிய பேராசிரியர் குணரட்ணம், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் தனது கலாநிதி பட்டம் உட்பட பல...

முல்லை விவசாயிகளுக்கு விதைநெல் விநியோகம்

முல்லை மாவட்ட விவசாயிகள் 128 பேருக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து விதைநெல் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சிக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை (09.09.2015) இடம்பெற்ற நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு விதைநெல்லை விவசாயிகளுக்கு வழங்கிவைத்துள்ளார். உவர்எதிர்ப்பு நெல்லினமான ஏ.ரீ 362 மற்றும் நீரிழிவு...

வாரியபொல யுவதிக்கு ஒரு நீதி!! வித்தியாவுக்கு இன்னுமொரு நீதியா!!

வாரியபொல பஸ்தரிப்பிடத்தில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவனை சராமாரியாக தாக்கும் வீடியோ வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலராலும் பேசப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனுக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத பணத்தை குறித்த பெண்ணுக்கு செலுத்துமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது....

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா

நேற்று நடைபெற்ற அமைச்சு பொறுப்பேற்கும் நிகழ்வில் வடக்கு மக்களுக்கு நன்றிக்கடனாக விஜயகலா மகேஸ்வரனுக்கு அமைச்சுபதவி வழங்கப்பட்டது. சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை தமிழ் பெண்ணிடம் வழங்கப்பட்டுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர். சர்வதேச அரசுகளுடன் சேர்ந்து...

பிரபாகரனை உயிருடன் கொழும்புக்கு கொண்டு வந்திருந்தால் மகிந்த ராஜபக்ஸ அவரை ஒரு முதலமைச்சர் ஆக்கியிருப்பார்! – பொன்சேகா

முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் sarath fonseka-2015நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா அம்மான் என்கிற வினாயகமூர்த்தி முரளீதரன், இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இப்போது கூறப்படுவது போல பிரபாகரன் ஸ்ரீலங்கா இராணுவத்தினாரால் கொல்லப்படவில்லை, ஆனால்...

எமது வீட்டு வேலைகளை நாங்களே செய்து கொள்வோம் ! – ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருக்கு நெருக்கமான பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அந்த மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். சிறிது நேரம் ஜனாதிபதியுடன் உரையாடிய பின்னர், ஜனாதிபதியின் மனைவியிடம் பேச மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது...

முதலமைச்சர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது – சிவாஜிலிங்கம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுப்பது, என்ற பேச்சுக்கே இடமில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டால் மாத்திரமே கூட்டமைப்பால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அவ்வாறான எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார். 'வடமாகாண...

கோப்பாய் கோமகனின் சமாதி விடுவிப்பு

கீரிமலைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான 'கோப்பாய் கோமகன்' என்று அழைக்கபடும் கு.வன்னியசிங்கத்தின் சமாதியானது இராணுவத்தினரால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. கோமகனின் சாம்பலை வைத்து அமைக்கப்பட்ட இந்தக் கோவிலின் மேல் பகுதியில் சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டு, கவுணாவத்தை பூசகர் ஒருவர் பூசை வழிபாடுகளாற்றி வந்திருந்தார். இந்தச் சமாதியை கோமகனின் மனைவி கமலா அமைத்து...

ஐ.நா. கூட்டத்தொடரில் கையளிக்கும் பிரேரணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் செல்லும் போது, கூட்டத்தொடரிலும் அங்கத்துவ நாடுகளிடமும் கையளிப்பதற்காக, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளை வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிடம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட, 'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது' மற்றும் 'இலங்கையில்...

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க விரும்பும் அதிபர்கள் தங்கள் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் அதற்கான முன் அனுமதி பெற்று அதனைச் செயற்படுத்த முடியுமென வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (11) காலை 7 மணிக்கு நல்லூர் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய...

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் கைகலப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும் கனிஷ்ட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு, பல்கலைக்கழக நிர்வாக தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கனிஷ்ட மாணவர்கள் இடுப்புப் பட்டி அணிந்து வருவதற்கும் மரங்களின் கீழுள்ள பென்ச்களில் அமர்வதற்கும் சிரேஷ்ட மாணவர்கள் அனுமதியளிக்க மறுத்தனர். அதனையும் மீறி கனிஷ்ட மாணவர்கள் நடந்து கொண்டதாகக் கூறப்பட்டு, ஏற்பட்ட முறுகல் நிலை...
Loading posts...

All posts loaded

No more posts