Ad Widget

பஸ் மீது இரும்பினால் தாக்குதல்

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வியாழக்கிழமை (06) அதிகாலை சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ் மீது, மண்டான் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இரும்பு துண்டு ஒன்றால் தாக்குதல் மேற்கொண்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடிகள் முற்றாகச் சேதமடைந்தது. பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கு மேற்கொள்ளப்பட்ட இரும்புத் துண்டு, தனியார் பஸ்ஸின் உதிரிப்பாகம் என பருத்தித்துறை சாலை முகாமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையிருந்து நெல்லியடி மண்டான் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிய பஸ் சேவையானது மிக அண்மையிலேயே ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts