வல்வெட்டித்துறை விநாயகர் வித்தியாலயத்துக்கு அருகில், தேர்தல் விதிமுறையை மீறி கட்சி அலுவலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள், வணக்க ஸ்தலங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களுக்கு அருகில் தேர்தல் பிரசார அலுவலகங்கள் அல்லது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என தேர்தல் ஆணையாளரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த அறிவுறுத்தலை மீறிய வகையில் மேற்படி கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.