Ad Widget

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா

எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே நாம் திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

newssss3

குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு மக்களுடன் நேற்றைய தினம் (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் இக் குடியிருப்பில் வாழ்ந்து வந்த மக்களாகிய நீங்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளுக்கு நாம் தீர்வினை கண்டுள்ள போதிலும் மேலும் பல தேவைப்பாடுகளுக்கு காணப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமக்கு ஆதரவையும் அரசியல் பலத்தையும் வழங்க வேண்டும்.

முன்னைய அரசுடனான நல்லுறவின் ஊடாகவே ஐந்துமாடிக் கட்டிடத் தொகுதிகளில் நவீன முறையில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தன. இன்றைய சூழலில் முக்கியமாக காணி உரிமங்களை பெற்றுத் தருவதற்கும் நாம் நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, உங்களது ஒளிமயமான எதிர்காலத்துக்காக தொடர்ந்து பணியாற்ற நாம் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதில் ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களான இரா.செல்வவடிவேல், திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் குகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts