- Wednesday
- April 24th, 2024
18 வயது வந்த பின்னர் தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 3 வருடங்களாக தன்னுடன் பழகி தன்னை ஏமாற்றிய இளைஞன் வேறொரு யுவதியை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக, பாதிக்கப்பட்ட யுவதி, திங்கட்கிழமை (12) இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். கீரிமலை சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியும் சில்லாலை பகுதியைச் சேர்ந்த இளைஞனும்...
தனது குழந்தையை கவனிக்காமல் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தாய் ஒருவர் தனது குழந்தையயை பறிகொடுத்துள்ளார். பிரித்தானியாவின் Yorkshire பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குழந்தை வீட்டின் அருகாமையில் உள்ள நீர்நிலை ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. இதையறியாத தாய் பின்னர் திடீரென தனது குழந்தையை காணவில்லை என அப்பகுதி முழுவதும்...
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழி சமூக வலைத்தளங்கள் விஷயத்தில் தற்போது உண்மையாகியிருக்கிறது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை திடீரென்று பலர் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாண நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளத் துவங்கினார்கள். அந்த காட்சி உத்தரப்பிரதேசத்தில் இருக்கும்...
சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் வேப்பமரத்தில் இருந்து பால் வடிகின்றது. அதைப் பெருமளவு மக்கள் பார்வையிடுவதோடு, பாலைப் போத்தல்களில் எடுத்தும் செல்கின்றனர். கடந்த வருடம் இந்தப் பகுதியில் உள்ள வேறொருவரின் வீட்டிலும் இவ்வாறு வேப்ப மரத்திலிருந்து 15 தினங்களுக்கு மேலாக பால்வடிந்ததது. மருத்துவ நிவாரணியான வேப்பம் பாலை மக்கள் ஆர்வத்துடன்...
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக் கான இந்திய வீட்டுத் திட்ட உதவியை வழங்குவதற்கு பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் திட்டத்தின் கீழான பயனாளிப் பெண் ஒருவரிடம் இருந்து பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் அந்தப் பெண் நேரடியாக...
பாணந்துறை நகரில் தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் முயற்சியில் தோல்விகண்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர தான் மொஸ்கோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவன் எனவும் , அதற்கான கட்டணம் செலுத்தவே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கிக்கு வந்த 35 வயதான சந்தேகநபர் கருமபீடத்துக்கு சென்று அங்கிருந்த காசாளரிடம் வங்கி...
சட்டக் கல்லூரி அனுமதி - 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தsrilanka law collegeமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில்...
யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் குறித்தும், அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியபோது தெரிவித்ததாவது: பாடசாலை மாணவர்கள் பகிரங்க இடங்களில் மது அருந்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன. அவ்வாறான மாணவர்களை சாராயப் போத்தல்களும் கையுமாகக் கைது செய்ய வேண்டும். மாணவர்கள் பாடசாலை நேரத்தில் சீருடையில் வீதிகளில் காணப்பட்டால் அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்....
யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டத்திற்காக சர்ச்சைக்குரிய ரங்கா அவர்கள் விழா இணைப்பாளராக நியமிக்கப்பட்டு ரங்காவை முன்னிலைப்படுத்துவதால் பழையமாணவர்சங்கம் விழாவினை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேளை இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வெளியிடப்பட இருந்த சிறப்பு மலரில் இணைப்பாளரின் வாழ்த்துச்செய்திகள் அடங்கிய பக்கங்கள் பழையமாணவர்களால் கிழித்தெறியப்பட்டு கல்லுாரி வீதி ஓரம் குப்பையில் வீசப்பட்டுள்ளது.முன்னதாக...
பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் 18 வயது முஸ்லீம் மாணவி ஒருவர் எல்லையைக் கடக்க முற்பட்டுள்ளார். அவரை முதலில் துப்பாக்கியால் குறிவைத்த இஸ்ரேலிய ராணுவத்தினர் குறித்த மாணவியை சுட எத்தணித்துள்ளார்கள். அருகில் உள்ள ராணுவ வீரர் ஒருவர் சுடவேண்டாம் என்று சைகை காட்டுகிறார். மாணவியின் பாடசாலைப் பைக்குள் என்ன இருக்கிறது என்று அவர்கள் கேட்டவேளை...
மோட்டார் சைக்கிளில் பயணித்த விசேட தேவையுடைய ஒருவரை, போக்குவரத்து பொலிஸார் நடைபாதையில் போட்டு புரட்டி, புரட்டி தாக்கிய சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கஹட்டகஸ்திகிலிய பொலிஸின் போக்குவரத்து பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் நேற்று முன்தினம் 22ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலைவேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீடியோ சமுக மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன....
கிளிநொச்சி நீதிமன்றில் இருந்து திருடி வந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய வவுனியா மாவட்ட நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி நீதிமன்றில் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அறை...
நாடாவை வெட்டிய இரண்டு பெண்களை கைது செய்த பொலிஸார் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சம்பவம் கடவத்தையில் இடம்பெற்றுள்ளது. கடவத்தை-கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைப்பதற்கு முன்னர், அங்குவந்த இரண்டு பெண்களும் வீதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை (நாடாவை) வெட்டியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியிருந்த இருவரும் 'மஹிந்தவுக்கு...
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சிலர் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா விண்கற்கள் பூமி மீது விழும் என நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர் அழிவின்போது தேவைப்படும் என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய...
பூகம்பம் ஏற்பட்ட நாடு என்னவென்று கூடத் தெரியாமல் நீர் எல்லாம் வரலாற்று ஆசிரியராக இருக்கின்றீர்களா? என்று அதிபர் ஒருவர் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியை ஒருவரை திட்டிய சம்பவம், யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பாடசாலையொன்றில் வியாழக்கிழமை (17) நடைபெற்றுள்ளது. சிலி நாட்டில் 8.30 ரிச்சர்ட் அளவில் புதன்கிழமை (16) பூமியதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் வரலாற்று...
போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப் படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப்...
நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள சங்கிலியன் சிலையில் சோடாவுக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களை பெரும் விசனமடையச் செய்துள்ளது. தமிழ் மக்களின் வீரத்தை வெளிப்படுத்திய சங்கிலி மன்னன் கையில் ஏந்தியிருக்கின்ற வாளில் சோட நிறுவனத்தின் விளம்பரச் சின்னம் மாட்டப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய மகோற்சவத்திற்கு வருகின்ற மக்களுக்கு தமது குளிர்பானம் தொடர்பில் விளம்பரம் செய்வதற்காக குறித்த நிறுவனத்தின்...
கடந்த வாரம் தொடக்கம் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர் அணிகளிடையே நடைபெற்று வந்த கருத்து மோதல்கள் பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் கொட்டன்கள் பைப்புகளுடன் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகமெங்கும் ஆர்ப்பரித்து திரியும் அளவுக்கு முற்றியது .காலையில் 4ம் வருட மாணவர்களால் 3ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் வைத்து தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதற்கு பழி தீர்க்கும் வகையில் இன்று (10.9.2015) காலை...
வாரியபொல பஸ்தரிப்பிடத்தில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவனை சராமாரியாக தாக்கும் வீடியோ வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலராலும் பேசப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனுக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத பணத்தை குறித்த பெண்ணுக்கு செலுத்துமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது....
மயக்கமடைந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக சிகிச்சைக்கு உட்படுத்தப்படாது காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று காரைநகர் வைத்திசாலையில் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்த வேளையில் பந்தைப் பிடிக்க ஒடிச்சென்ற வேளையில் இருவர் மோதிக்கொண்டதில்...
Loading posts...
All posts loaded
No more posts