- Tuesday
- May 14th, 2024
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் 25 பேர் முதுநிலை மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர். வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகை ஒப்பனை நிலையம் ஒன்றிலேயே அவர்கள் 25 மாணவர்களும் மொட்டையடித்தனர். சிகை ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு 500 ரூபா கேட்ட நிலையில் மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம்...
தீவுப் பகுதியிலிருந்து இறைச்சிக்காக மாடுகளைக் கடத்தும் கும்பல்களை இலக்கு வைத்து நடவடிக்கை எடுத்து வந்த ஊர்காவற்றுறை தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றக் கட்டளை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் அலுவலகருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தீவகத்தில்...
போலி நியமனக் கடிதங்கள் மூலம் வட மாகாணத்திற்குட்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற நியமனக் கடிதத்தினை ஒத்த போலி நியமனக் கடிதங்களை தயாரித்து வட மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 63 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்கான நூலக உதவியாளர்கள், முகாமைத்துவ ஊழியர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் என்ற பதவிகளுக்கே...
வவுனியா மாவட்டச் செயலக அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தமிழர்களுக்கான வீடுகள் பறிபோனதா என வட.மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே...
காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பயனின்றி உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையால் கூறப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை இரண்டு நாள்களின் பின் நேற்று தனியார் வைத்தியசாலையில் மீளவும் சேர்க்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு தனியார் வைத்தியசாலையில்...
கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க, அதனை அவதானித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொந்தளித்தனர். இதனால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் உரிமைப் போராட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வடமராட்சி கிழக்கில் கடலட்டை தொழிலில் ஈடுபடும்...
தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது. சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தச் சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை பலராலும் வியப்பாகப்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிப்புரைவிடுத்துள்ளது. அத்துடன், 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்து சுருக்க முறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் சட்ட மா திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது....
14 வயது சிறுமியை பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரே பொலிஸ் உத்தியோகத்தரிடம் அனுப்பியதாக சிறுமி நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த வழக்கு விசாரணையானது எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது தாயாரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும்...
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில், கடந்த 18ஆம் திகதி அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நினைவேந்தல் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியதை அடுத்து...
இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைக்கு தனது மகனை ஆள்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோரி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த தாயார் ஒருவர் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு யாழ். படைத் தலைமையகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் எழுதிய கடிதம்...
யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , இருபாலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி. தெற்கு பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் வேலாயுதம் செல்வகாந்தன் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர் விளையாட்டுக் கழகமொன்றின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். இவ்விளையாட்டுக்கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக புலம்பெயர் நலன்விரும்பிகளால் ஒரு தொகைப் பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும் விளையாட்டுக்கழகத்தின்...
யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள்...
சிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் நேற்று (07) யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த சம்பவம் நேற்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி வந்த புகையிரத நிலையத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், யாழ்.புகையிரத...
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து இன்று முற்பகல் வாள்வெட்டுக்குள்ளானார் என பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தினார்" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில்...
சின்னஞ்சிறார்களான பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் குடும்பத்தலைவர் ஒருவர். அவர்கள் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவத் துறையினரின் பெரும் போராட்டத்தின் பின் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. தந்தையும் 3 பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்...
சமுர்த்தி அமைச்சினால் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலகங்களில் பெரும்பான்மையின இளைஞர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கும் செயலானது தமிழ் மக்களை மலினப்படுத்தும் செயலாகும் என அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். இந்த நியமனம் குறித்து நேற்றயதினம் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...
யாழ். இணுவில் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் முயற்சியினால் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவிலடியில் இருந்து இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடி வரையிலான இணுவில் – மானிப்பாய் வீதியின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான கொண்டல் மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் வேம்பு மற்றும் இதர நிழல் தரும் மரங்களை எதிர்காலத்தில் நாட்ட அவர்கள் எண்ணியுள்ளனர். இந்த...
யாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்கிய தொழிலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. யாழ்.நகரை எழில் மிகு நகரமாக்கவோம் என்று சொல்லி ஈ.பி.டி.பியின் உதவியுடன் ஆட்சியை பிடித்ததுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரின் தெருக்களை கூட்டுவதற்கு தென்னிலங்கை தனியார் சுத்திகரிப்பு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யும் கைங்கரியத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts