Ad Widget

வவுனியாவில் அடுத்தடுத்து விசம் வைக்­கப்­பட்­ட 6 பசுக்­கள் சாவு!! சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் சிங்­கள பெண் கைது

வவு­னியா தட்­டாங்­கு­ளம் பகு­தி­யில் விசம் கலந்த நீரை பரு­கி­ய­தால் நான்கு பசு­மா­டு­கள் நேற்­று­முன்­தி­னம் இறந்­தி­ருந்த நிலை­யில் நேற்­றும் இரு மாடு­கள் இறந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த மாடு­கள் நேற்று வீடு திரும்­பாத நிலை­யில் உரி­மை­யா­ளர்­கள் தேடி­யுள்­ள­னர். அவை காட்­டுப் பகு­தி­யில் இறந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வாழ்­வாதா­ரத்­துக்கு வழங்­கப்­பட்ட பசு­மா­டு­கள் விசம் வைக்­கப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டுள்­ளன என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போது 6 பசு­மா­டு­கள் இறந்­துள்­ளன. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது­செய்­ய­பட்ட அயற்­கி­ரா­மத்தை சேர்ந்த சிங்­கள பெண் செட்­டி­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­க­பட்­டுள்­ளார்.

Related Posts