Ad Widget

புலிகளை உருவாக்கவோ, நிகழ்வுகளை நடத்தவோ ஒருபோதும் இடமில்லை: இராணுவம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாகுவதற்கோ அல்லது விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துவதற்கோ இராணுவத்தினர் ஒரு போதும் இடமாளிக்கமாட்டார்கள். (more…)

புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்பிருந்தால் யாழ்.மாணவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்! உயர்கல்வி அமைச்சர்

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது விசாரணைகளின் போது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கான புனர்வாழ்வு தொடரும். இல்லாவிட்டால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். (more…)
Ad Widget

யாழ்.வலிகாமம் வடக்கு இடம்பெயர் மக்களின் 23 வருடமாக தொடரும் அவல வாழ்வு!

யாழ்.வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம் நிலச்சொந்தக்காரர்கள் முகாமை அங்கிருந்து அகற்றுமாறு தீவிரமான அழுத்தங்களை கொடுப்பதாக தெரிவித்துள்ள மக்கள் தாம் சொந்த இடங்களுக்கும் செல்லமுடியாமல், முகாம்களை விட்டும் வெளியேற முடியாமல் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். (more…)

மக்கள் குடியமராத மயிலிட்டியில் படையினரின் யோக்கட் ஆலை

மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலை.மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இணையத்தள மகஜர் போராட்டம் ஆரம்பம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

கெற்பேலியில் இராணுவ முகாம் அமைக்க அனுமதி

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கெற்பேலி பகுதியில் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கான அனுமதியினை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக சுமார் 64 பரப்பு காணியில் இராணுவ முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)

பல்கலை. மாணவர்களை விடுதலை செய்ய கோரி யாழ். நகரில் கையெழுத்து போராட்டம் சமவுரிமை இயக்கத்தின் வாகனம் மீது தாக்குதல்;கழிவு ஒயிலும் வீச்சு

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 10 மணியிலிருந்து நடைபெற்றுவருகிறது. (more…)

கிளிநொச்சி சம்பவம்! அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்!- சிறிதரன் குற்றச்சாட்டு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணினிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். (more…)

பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்க பதவி நீக்கம்

இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.அதன்படி அங்கீகார ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டுள்ளார். (more…)

யாழ் பல்கலை மாணவர்களை எச்சரித்து வீடுகளுக்கு கடிதங்கள்; அச்சத்தில் மாணவர்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். (more…)

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சூடான விவாதங்கள்

திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றம் திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. (more…)

ஜனாதிபதியின் யாழ். விஜயம் ரத்து

தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி அரசாங்க அதிபர் ரூபினி அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

கல்விச் செயற்பாடுகளைஆரம்பிக்க ஒத்துழைக்காவிடில் பதவி விலகுவேன் – துணைவேந்தர் எச்சரிக்கை!

யாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்க முடியாது போனால் துணைவேந்தர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மாணவர் பிரதிநிதிகளிடம் கூறியதாக தெரியவருகின்றது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவர்கள் பிரதிநிதிகள், துணைவேந்தர் ஆகியோர் இன்று கூட்டம் ஒன்றை நடாத்தினார்கள். (more…)

யாழ். பல்கலை நாளை ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் (more…)

கைதான பல்கலை. மாணவர்கள் பொங்கலுக்கு முன் விடுதலை?; உயர்கல்வி அமைச்சர் தகவல்

தைப்பொங்கல் தினத்தன்று யாழ். பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படாவிட்டால் அதனை மூடுவதற்கு தீர்மானித்துள்ளோம். இதேவேளை கைதாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படக் கூடும் என நம்புகிறேன் இவ்வாறு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

வட-இலங்கை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ். பல்கலை கல்வி நடவடிக்கைகள் 16முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே (more…)

வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். (more…)

தைப்பொங்கலுக்கு ஜனாதிபதி யாழ்ப்பணத்திற்கு விஜயம்!

தைப் பொங்கலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் இதன்போது முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கு கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் ஜெய்க்கா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டிடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். (more…)

நல்லூர் கந்தன் ஆலய வளாகத்திலுள்ள காவலரணை அகற்ற படைதரப்பு இணக்கம்

நல்லூர்க் கந்தன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலரணை அகற்றுவதற்கு படைதரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts