வித்தியா கொலை வழக்கு: விரைவில் தமிழ்மாறனும் காவல்துறை அதிகாரியும் கைதாகலாம்!

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என்பவரைத் தப்பவைக்க முயன்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் இருவரும் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் எனத் தெரியவருகின்றது. வித்தியாவின் கொலைச் சம்பவம் நடைபெற்றபோது யாழ். மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகராக லலித் ஜெயசிங்க கடமையிலிருந்தார். இவர் சட்டவிரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறனின் மாணவர் எனத் தெரியவருகின்றது. சந்தேகத்தின்பேரில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட...

புதிய கட்சி தேவையற்றது: வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் உறவு சிறப்பாக உள்ளதாகவும் தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்கவேண்டுமெனவும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் புதிய கட்சியொன்றை உருவாக்கப்போகின்றார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும்,...
Ad Widget

யுத்தத்தின் கொடூரம் கிளிநொச்சியில் 282 போ் கண்களை இழந்துள்ளனா்.

நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவால் தமிழ் மக்கள் அதிகளவுக்கு பல இழப்புக்களைச் சந்தித்துள்ள நிலையில் 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்ளமை பதிவாகியுள்ளது. யுத்தம் பலரை பலியெடுத்துள்ள நிலையில் மிஞ்சியிருப்பவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அங்கத்தை இழந்தவா்களாவும் காணப்படுகின்றனா். அத்தோடு பெரும்பாலானவா்கள் இரும்புத் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் வாழ்ந்து வருகின்றனா். இந்த...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது குறித்து புதிய வழிகாட்டல்கள் அறிமுகம்?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் புதிய சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலங்களில் கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில்...

யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பொருத்துவீடுகள் தகுதியானவை

வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீடுகள் யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு பொருத்தமானவையாக அமையும் என்று பேராதனை பல்கலைகழகம் உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.   மீள்குடியேற்றத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.   உலோகங்களினால் அமைக்கப்படும் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளன.   இந்த வீடுகள்...

கந்தரோடையில் கைக்குண்டுத் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கந்தரோடைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று கைக்குண்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரவு 8.30 மணியளவில் கந்தரோடை உடுவில் வீதி ஞான வைரவர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது, முரளி என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாள் வெட்டுக்கு இலக்காகியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் குறித்த நபர்...

புதிய கட்சி தொடங்குகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போல் தோன்றுகின்றது என்றும், அந்தக் கட்சி கடும்போக்கு கொள்கைகளைப் பின்பற்றும் என்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் விக்னேஸ்வரனை சமாளிக்கமுடியாத நிலை காணப்படுவதால் கூட்டமைப்பு...

பொருத்து வீடுகள் இல்லை! வடக்கில் கல் வீடுகளே அமைக்கப்படும் அமைச்சர் விஜயகலா உறுதி

வடக்கு மாகாணத்துக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படமாட்டாது என்றும், கல் வீடுகளே வழங்கப்படும் என்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றில் உறுதியளித்தார். இயற்கை அனர்த்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு உறுதியளித்தார். விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக்...

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணையால் திணறுகின்றது பரணகம குழு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வரான பாலச்சந்திரன், தமிழீழ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா ஆகியோர் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் பரணகம ஆணைக்குழுவுக்குச் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது. "இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை இருவரிடம் மாத்திரமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆணைக்குழுவைக் கலைப்பதற்குரிய நடவடிக்கையும்...

மூன்று மாதங்களுக்கு மழை நீடிக்கும்! உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளான மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். வெள்ளநீர் வழிந்தோடும் நிலையில் வீடுகளைத் துப்புரவாக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் தமது தொண்டர்களை...

வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகளின் விபரம்!!!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு: ஆதவா ( செயற்பாடு தெரியாது) அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),...

செனல் 4 காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை!

செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட யுத்தக்குற்ற காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை இராணுவத்தினரின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நான்கு காணொளிகளை வெளியிட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட இக்காணொளிகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கை கடும் இராஜதந்திர நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. எனினும்...

மேலும் 3 அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வசம்

வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன. இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் நேற்று பொறுப்பேற்றுள்ளார். குறித்த...

வடமாகாண சபையின் அமைச்சுப் பொறுப்புக்களில் அதிரடி மாற்றம்

வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பொறுப்புக்களில் இன்று அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிய வருகின்றது. வடமாகாண அமைச்சர்களுக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்புக்கள் முதலமைச்சரால் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் சில பொறுப்புக்களை முதலமைச்சர் எடுத்து தனக்கு கீழேயும், சில பொறுப்புக்களை வேறு வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 6.00...

வெள்ளம் பாதிப்பு; யாழ். மாவட்ட செயலகத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

அனர்த்தப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலுக்குமான பொறிமுறை யாழ். மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ். மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, நன்கொடைகளை வழங்க முன்வரும்...

வெள்ளக்காடாகக் காணப்படும் கொழும்பு! பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சம் மக்கள் முகாம்களுக்குள் முடக்கம்!!

தலைநகர் கொழும்பை மூழ்கடித்துள்ள வெள்ள நீர்மட்டம் குறையாத காரணத்தால் கொழும்பு வெள்ளக்காடாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களுக்குள் அடைபட்டு பெரும் அவலத்துடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வெள்ளப்பாதிப்பு இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் கவலையை ஏற்படுத்தும் வகையில் திருட்டு மற்றும் மோசடிச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், சுமார் 5 ஆயிரம் பேரளவில் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ள நீர்மட்டம்...

கொழும்பில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை – மக்கள் மத்தியில் அச்சம்!

கொழும்பில் சிலநாட்களாகத் தொடர்ந்துவந்த சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வானம் சற்று வெளித்திருந்தது. இன்று மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. வங்களா விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘ரோனு’ சூறாவளி தற்போது காங்கேசன்துறையிலிருந்து 1000 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள நிலையில் அது தற்போது நாட்டைவிட்டு நகர்ந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் நாட்டில் தொடர்கின்ற...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கப்படவேண்டும்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரிய நிவாரணத்தை உடன் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன காரணமாக உயிரிழந்த, பொருட்கள் சேதமடைந்த மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களைச்...

காங்கேசன்துறைக்கு வடக்கே தாழமுக்க சூறாவளி!

தென்னிந்தியாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறி காங்கேசன்துறைக்கு வடக்கே 400 கிலோமீ்ற்றர தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இது மேலும் உக்கிரமடைந்து நாடு முழுவதும் பரவலாம். ஆயினும் நாட்டின் வடபகுதிகளில் மழைவீழ்ச்சியின் அளவு வெகுவாக குறைவடைந்தே காணப்படும். எனினும் இச்சூறாவளியால் இலங்கையில் பெரிதளவான பாதிப்புக்கள் ஏற்படுத்தப்படா விடினும் காற்றின் பாதிப்புக்கள் காணப்படுமெனவும்...

எச்சரிக்கை!!..குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்துள்ளது!!!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ள இந்த சூறாவளிக்கு 'ரோனு" என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை...
Loading posts...

All posts loaded

No more posts