Ad Widget

முல்லைத்தீவுக்கு மாற்றப்படும் ஆயுதக் களஞ்சியங்கள்!

அண்மையில் இடம்பெற்ற சலாவ வெடிவிபத்தையடுத்து தென்பகுதியில் இருக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் அனைத்தும் தற்போது வடபகுதிக்கு மாற்றப்பட்டுவருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே புதிய ஆயுதக் களஞசியங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சன அடர்த்திகூடிய பிரதேசத்தில் அமைந்திருக்கும் வியாங்கொட ஆயுதக் களஞ்சியத்தையும் வேறு பிரதேசத்திற்கு மாற்றுவதற்கான கேள்வி எழுந்துள்ளது.

சலாவ, வியாங்கொட, வெலிசறை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆயுதக் களஞ்சியங்கள் பாதுகாப்பான பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்று கருதிய நிலையிலேயே அண்மையில் சலாவ ஆயுதக்கிடங்கில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து அனைத்து ஆயுதங்களையும் வெலிசறையில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் சேமிக்கமுடியாது என்ற நிலையில் அவற்றினை அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts