கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டதா? : மாவை விளக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கென சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதே தவிர, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை போல சொந்தத் தேவைக்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்காக, தன்னைத் தவிர கூட்டமைப்பின் ஏனைய...

உங்களால் முடியாவிட்டால் போங்கள்’: கஜேந்திரகுமார் கூட்டமைப்பின் மீது காட்டம்!

கூட்டமைப்பின் தலைமையை ‘உங்களால் முடியாவிட்டால் அரசியலை விட்டுப் போங்கள்’ என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசமாக உரையாற்றியுள்ளார். வவுனியா, பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு உரையாற்றியுள்ளார். இது குறித்து அவர்...
Ad Widget

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை : வடக்கு முதல்வர்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் ஜனநாயக சூழ்நிலை விருத்தியடைந்திருப்பதில் சந்தேகம் இல்லை. வளமிக்க பெருமளவான தனியார் காணிகள் படையினர்...

யாழில் கோடுரம்!!! : 3வயது குழந்தை வெட்டிப் படுகொலை!!!

வண்ணார்பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோயிலடியில் 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டாள். அவளது பேத்தியான குடும்பப் பெண் வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... மன நோயாளி எனத் தெரிவிக்கப்பட்டவரே தனது இளைய சகோதரனின் மகளை வெட்டிக் கொலை செய்ததுடன், தனது தாயையும் வெட்டிச்...

மின்சார சபை ஊழியர்கள் நாடு பூராகவும் பணி நிறுத்தம்

ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டுள்ளனர்....

யாழ். தனியார் வைத்தியசாலையில் நோய்த்தொற்று அபாயம்: குணசீலன்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்...

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சிமன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17.01.2018) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் வெளியிட்டுவைக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரைகளையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளளுமான சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோர் தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை...

அரசாங்கம் தருவதை ஏற்றுக்கொள்ளும் அவசியம் எமக்கில்லை: வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

”தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அரசாங்கம் தருவதனை பெற்றுக்கொள்ள முடியாது. எமக்கு விருப்பமில்லாத தீர்வினை எம்மீது திணிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் இன்னும் 20 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கை சேராதவர்கள் வடக்கு கிழக்கை ஆட்சிசெய்ய, அவர்களின் கீழ் நாம் வாழும் நிலை ஏற்படும்” என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்...

இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் பொய்ப்பிரசாரம்: கஜேந்திரகுமார்

அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில், இடைக்கால அறிக்கையில் இல்லாத விடயங்கள் கூட மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. மக்கள் இடைக்கால அறிக்கையினை முழுமையாக வாசிக்க மாட்டார்கள் என்ற நிலையில், இவ்வாறு பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள்...

யாழில் இருவேறு இடங்களில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்

யாழில் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது...

“சுமந்திரன் ஒரு தேசத்துரோகி“ : மண் தூவி சாபமிட்டு ஒப்பாரி வைத்து அழுத காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு தேசத் துரோகி எனத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்களுக்கு மண்ணை அள்ளித் தூற்றியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறி அழுது ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் கையளித்தும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 324 ஆவது நாளை...

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்: உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்று ஜனாதிபதி செயலகத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆறு வருட காலத்திற்கு ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் அபிப்ராயத்தை வெளிப்படுத்தியிருந்தது. இது கடுமையான வாதப்பிரதி வாதங்களை தோற்று...

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக முக்கிய உத்தரவு!

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக யாழ்.மாநகர சபைக்கு, மல்லாகம் நீதிமன்றமானது மூன்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நேற்றயதினம் (வெள்ளிக்கிழமை) மல்லாகம் நீதிமன்றில் குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் குறித்த உத்தரவிரனை பிறப்பித்தார். இதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் குப்பைமேட்டினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் எனவும்,...

ஐ.நா.வில் இலங்கை மீது அதிருப்தி வெளியிடவுள்ள ஹுசைன்?

ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இதன்போது, இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைந்தால்...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள்!

யாழில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன. யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன. இதேவேளை, புத்தாண்டு வாழ்த்துக்களை விடுதலைப்புலிகள் அமைப்பின் தேசியத்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர் கைது

பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நாகராசா பகிரதன் இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயல்வீட்டு குடும்பத்தினருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் அயல்வீட்டு பெண்ணை வேட்பாளர் தாக்கியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்த...

டான் ரீவி அலுவலகதில் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டணம்!

டான் ரீவி அலுவலகத்தினுள் புகுந்த நபரால் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டணம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. டான் ரீவி அலுவலகத்திற்குள் புகுந்து அதன் செய்தியாசிரியர் தயா மாஸ்டர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது....

ஊடகங்களை அச்சுறுத்தும் சுமந்திரனை கண்டிக்கின்றார் சுரேஸ்!!

தேர்தல் பிரசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன், ‘ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள்’ என குறிப்பிட்டார். இவ்வாறு குறிப்பிட்டமை, ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததென, சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றின்...

கிளிநொச்சியில் கோர விபத்து! : நால்வர் உயிரிழப்பு

கிளிநொச்சி மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொக்காவில் பகுதியில், தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே...

பளை பகுதியில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அதாவது 08.01.2018 இரவு இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற இச்...
Loading posts...

All posts loaded

No more posts