கோமாளித்தன அரசியலுக்காவா 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன? : மணிவண்ணன் கேள்வி

இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு கோமாளித்தன அரசியல் செய்வதற்கா கடந்த 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில்...

காணாமல் போனவர்கள் கடலில் வீசப்பட்டனரா?

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்,யுவதிகளின் உடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளமை மீண்டும் உறுதியாகியுள்ளது.குறிப்பாக கடற்படையினரது வசமிருந்த கட்டுப்பாட்டு பகுதிகளினில் இந்நடவடிக்கைகள் துல்லியமாக கடற்படையின் விசேட பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. தீவத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள வணபிதா ஜிம்பிறவுண் அடிகளாரது என நம்பப்படும் உடல துண்டங்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த...
Ad Widget

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேட கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் : கஜேந்திரகுமார்

தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எவ்வாறு சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதே போல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய...

சுதந்திர தினத்தன்று பருத்தித்துறை- பொன்னாலை வீதி விடுவிப்பு!!

இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திரதினத்தன்று முற்றாக விடுவிக்கப்படவுள்ளது. இவ்வீதி மயிலிட்டித்துறைமுகத்தினை அண்டிய பகுதியில் இதுவரை காலமும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 3 கிலோ மீற்றர் வரையான பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்ததுடன் இராணுவத்தினரின் போக்குவரத்து மட்டுமே இடம்பெற்று வந்தது. இதனால் பருத்தித்துறையில் வசிக்கும் மயிலிட்டி மீனவர்கள் கடந்த...

அரசியல் கைதிகளுக்கு சிறையிலுள்ளவர்களால் ஆபத்து! : முதல்வருக்கு அவசர மனு

தமிழ் அரசியல் கைதிகளை பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுடன் தடுத்து வைத்துள்ளதால் அவர்கள் பாரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வரை நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் சந்தித்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், குறித்த மகஜரை கையளித்துள்ளனர். குறிப்பாக கொலை, கொள்ளை, போதைவஸ்துடன் தொடர்புடையவர்கள்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்து பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் மற்றும் ரயில்வே இயந்திர பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிமுதல் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதோடு, காலை 9 மணிமுதல் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். ரயில்வே இயந்திர பொறியியலாளர்கள் ஏற்கனவே கடந்த...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு 2கோடி!! முன்னாள் போராளிகளோ ஒரு சைக்கிள்கூட இல்லாத நிலையில்!!

இனத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் இன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா ஆதங்கம் வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், முன்னாள் போராளிகளோ ஒரு சைக்கிள்கூட இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என அவர்...

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு : ஐ.நா. அதிகாரி

தமிழர் தாயக பிரதேசங்களில் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தற்போதும் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார். ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி பென்ஜமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜெயப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு...

கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள் இனத்தின் விடுதலைக்கு பொருத்தமற்றவர்கள்: மாவை

அரசாங்கத்திடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள், தமிழினத்தின் விடுதலைக்கோ தேசத்தை கட்டியெழுப்புவதற்கோ பொருத்தமற்றவர்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் விஞ்ஞாபனத்தினை...

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் : சுகாஸ்

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (26.01.2018) கரவெட்டியில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அவர், “எங்கள் தலைவன் பிறந்த வரலாற்றுப் பெருமைவாய்ந்த இந்த...

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான அணியை உருவாக்க அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் : அங்கஜன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது, அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி...

இந்தியாவினது அழுத்தமே எமது நிலை சீரடைய உதவும் :முதலமைச்சர்

இந்தியா மற்றும் சர்வதேசத்தினது அழுத்தத்தின் விளைவாகவே எமது நிலை சீரடையக்கூடும் என வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்திய குடியரசு தின விசேட நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து கூறுகையில், “பல்வேறு சிற்றரசுகளாகச் சிதறிக் கிடந்த இந்தியா சுதந்திரத்தின் பின்...

போலி வாக்குச் சீட்டுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் கைது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான கிருஸ்வேணி விக்ரர்லோகநாதன் ( விக்கரர்சாந்தி) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன்...

ஊர்காவற்துறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அச்சுறுத்திய கடற்படையினர்

பொது மக்களின் காணிகளை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை கடற்படையினரும், புலனாய்வாளர்களும் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவகத்தின் ஊர்காவற்துறை பருத்தியடைப்பில் பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர். இதனால் முகாம் அமைந்துள்ள காணி உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அச்சம் காரணமாக வேறு இடங்களில் தங்கியுள்ளனர். இந் நிலையில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக அமைச்சர் அனந்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை 4ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராகவே நேற்று முன்தினம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வேட்பாளர் முகநூலில் தன்னை விமர்சித்ததாக குற்றஞ்சாட்டியே அவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இதனையடுத்து...

கடற்படையின் வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி பலி!!!

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் கடற்படையின் பவல் வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் இன்று(24) காலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி புங்குடுதீவு பகுதியினை சேர்ந்த திருவானந்தன் கேசனா வயது(09) என பொலிஸார் கூறினர். உயிரிழந்த இந்த சிறுமி தனது...

ஒரு வருடமாக வீதியில் தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்!

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நேற்றயதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையிலான இந்த உண்ணாவிரதப்போராட்டம் 334 ஆவது நாளாக தொடரும்நிலையில், சாகும்வரையிலான உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை...

தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு: 10 தொடரூந்து சேவைகள் இரத்து

தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதனால், 10 தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் தொடரூந்து இயந்திர சாரதிகளின் சேவை காலம் நீடிக்கப்படாமை மற்றும் புதிய தொடரூந்து இயந்திர சாரதிகள் இணைத்து கொள்ளப்படாமை உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் நேற்று...

வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்க திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் : வடக்கு முதல்வர் குற்றச்சாட்டு

இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். முதலமைச்சர் வாரந்தோறும் வழங்கிவரும் கேள்வி பதில் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கை வருமாறு, வாரத்திற்கொரு கேள்வி இவ்வாரம் கொழும்பில் இருந்து கிடைத்திருக்கும் கேள்விக்குப் பதில் தரப்படுகின்றது. கேள்வி – தமிழ்க்...

தேர்தல் வன்முறைகளில் ஈடுபடும் வேட்பாளர்களை கைதுசெய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

தேர்தல் காலத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள ஒருவரின் பிணை மனு மீதான விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற போது...
Loading posts...

All posts loaded

No more posts