- Sunday
- June 8th, 2025

இவ்வருடத்துக்கான மூன்றாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் டிசெம்பர் 04 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் (16) வட மாகாண பாடசாலைகளில் மூடப்பட்டமைக்குப்...

கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk மற்றும்...

யாழில் முதற்தடவையாக பாடசலைகளில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக இயங்கவுள்ள மாணவர் பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் நேற்று [11] யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் மாணவர்களிற்கிடையே வன்முறையற்ற, ஜனநாயக முறையில் பிரச்சனைகளை அணுகுவதை ஊக்குவிப்பதை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவர்...

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறி பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தும், இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை என்று அகில இலங்கை மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவிக்கின்றார். அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி பல நாட்கள் கடந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று...

யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று வீசி வருவதால், தீவகம் கல்வி வலயத்துக்குட்பட்ட வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை (09) காலை 10 மணியுடன் இடைநிறுத்தப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடும் காற்றுக்காரணமாக பாடசாலையின் கூரைகள் தூக்கி எறியப்படும் நிலையில் இருந்தமையால் மாணவர்களால் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடிவில்லை என்றும் இதனாலேயே...

தேசிய உயர் கல்வி கணக்கியல் டிப்ளோமாவை பட்டப்படிப்பிற்கு சமப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்த முன்மொழிவிற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த டிப்ளோமாவை பட்டப்படிப்பிற்கு சமமற்றதாக்குவதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில்...

உயர் தேசிய கணக்கியல் கற்கை நெறியை பட்டப்படிப்பாக உயர்த்துவதற்காக வழங்கப்பட்ட பழைய சுற்றுநிருபத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு, அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.உயர்கல்வியமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்க இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். அண்மையில் உயர் தேசிய கணக்காய்வு...

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அநியாயம் இழைக்கப்பட்ட சிறுவர்களுக்காக, கல்வி அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் தொகையை குறைத்தமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அந்த சட்ட நடவடிக்கைக்கும் மேலாக போராட்டத்தினை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக, குறித்த சங்கத்தின்...

நடந்து முடிந்த உயர்தர பரீட்ச்சை பெறுபேறுகளின் படி பல்கலை கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதிச் சான்றிதழ் அண்மையில் கிடைக்கபெற்றிருக்கும். இதன் படி தெரிவான மாணவர்களுக்கு முதற் கண் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை பல்கலைக்கழகத்துக்கான தெரிவானது மிகவும் போட்டி மிக்கது. ஆதலால் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழைவது கடினம். இவ்வாறான மாணவர்களுக்கு அரசு,...

ஒரே பாடசாலையில் ஏழு வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு அவர்களது நியாயமான காரணங்களைக் கருத்தில் எடுக்காது இடமாற்றம் என்னும் பெயரில் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்றங்களால் ஆசிரியர்கள் சாவடைவதும், ஓய்வுபெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்படவும் நேர்கிறது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழர் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-...

பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவால், தமிழக பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆசிரியர்களாக வேலை பார்க்கும் 5 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) உத்தரவின்படி, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் வழிமுறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தது....

ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் 21பேர் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலையில் நேற்று முன்தினம் கற்றல் செயற்பாடுகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஒவ்வாமை நோயால் உடம்பில் ஏற்பட்ட தடிப்பு, கடி, சொறி காரணமாக மாணவர்கள் அவதியுற்றனர். இதனை அடுத்து இவ்வாறு பாதிக்கப்பட்ட 21 மாணவர் கள் வைத்தியசாலையில்...

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்களின் சங்கத்தின் வன்னிப்பிராந்தியக்கிளை ஒன்று இன்று (14.10.2015) கல்லுாரியின் மூத்த பழைய மாணவரும் மகாதேவா ஆச்சிரமத்தின் இயக்குனரும் முன்னாள் அரசாங்க அதிபருமான தி.இராஜநாயகத்தின் தலைமையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ஆரம்ப கூட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதில் பழைமாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர்சங்க தாய்ச்சங்க பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்....

யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி இன்று நடைபெற்றது. கல்லூரியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதன் ஒரு கட்டமாக நடை பவனி இடம்பெற்றது. குறித்த நடை பவனியினை இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் நடராஜா ஆரம்பித்து வைத்தார். யாழ். மத்தியக் கல்லூரி வளாகத்திலிருந்து...

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர் ஊடாக குறித்த விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்...

யாழ்ப்பாண மாவட்டம் 2015 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில், யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர் சோதிநாதன் வசீகரன் 192 புள்ளிகள் பெற்று யாழ். மாவட்ட ரீதியாக முதலிடத்தினை பெற்றுள்ளார். [caption id="attachment_51180" align="aligncenter" width="365"] சோதிநாதன் வசீகரன்[/caption] யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்களான கனகராஜ் கவிலக்ஷன் 188...

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2016ஆம் ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகள் என்னும் வகைக்குள், படவரைவியலுக்கான தேசிய சான்றிதழ், குடிசார் எந்திரவியல், மின்னியல் மற்றும் இலத்திரனியல் எந்திரவியல், கனிய அளவையியல், பொறிமுறை எந்திரவியல் (ஓடோ மொபைல்) ஆகிய கற்கை நெறிகள் உள்ளன. வர்த்தகத்துறை கற்கை நெறிகள் என்னும் வகைக்குள் தேசிய கணக்கீட்டு...

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. http://www.doenets.lk/result/gvexamresult.jsf என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை நீங்கள் அறியந்து கெள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் டயலொக் வாடிக்கையாளர்கள் EXAM இடைவௌி சுட்டெண்ணைக் குறிப்பிட்டு (EXAM__(SPACE) INDEX NUMBER) 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்பி உங்கள் பெறுபேறுகளை அறிய முடியும்.

2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று (05) வௌியிடப்பட்டுள்ளன. குறித்த வெட்டுப்புள்ளிகளைத் தெரிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ள முடியும்.

மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஏழு மாதங்களுக்கு நடைபெறும் இப்பயிற்சிகளில் தேசிய தொழிற் சான்றிதழ் (என்.வி.கியூ) கற்கை நெறிகளான கடற்துறை வெல்டிங் தொழில்நுட்பவியலாளர், கடற் சுழியோடிகள், சமுத்திரவியல் இயந்திர தொழில்நுட்பவியலாளர், வெளிப்புறத்தில் பொருத்தும் என்ஜின் தொழில்நுட்பவியலாளர், கடற்தொழில் தொழில்நுட்பவியலாளர், கப்பல் தலைமைத்துவத்துக்கான பயிற்சி ஆகியன 6 மாதங்களைக் கொண்டதாக நடைபெறுகின்றன....

All posts loaded
No more posts