Ad Widget

மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும்

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பலகலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சி வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நேற்று காலை மகாநாயக்க மற்றும் அஸ்கிரிய பீட தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட...

யாழில் மாணவர்களுக்கு சைவநெறிப் போட்டி

யாழ். கல்விவலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே சைவசமய அறிவை மேம்படுத்தும் வகையில் சைவநெறிப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்கமைய பேச்சு, மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல் மற்றும் பண்ணிசை ஆகிய போட்டிகள் தரம் 6 முதல் க.பொ.த உயர்தர மாணவர்களிடையே, நான்கு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,...
Ad Widget

பேராதனை பல்கலைகழக முதற்கலை வௌிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் தொலைகல்வி நிலையத்தின் முதல்கலைத் வௌிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியாகும். இப்பரீட்சைக்காக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரும் செல்லுபடியான பதிவை மேற்கொண்டோர் பரீட்சைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களையும் மேலதிக விபரங்களையும் www.pdn.ac.lk/edce என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது அலுவலக நேரங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக்கல்வி...

வட்டு. மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது!!

யாழ்.வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் புதிய அதிபரை மாற்றுமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் அதிபரை எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கு தீர்வுகாணுமாறு கோரி...

அதிபர் இடமாற்றத்தால் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து வட்டு. மத்திய கல்லூரிக்கு இரு நாள்கள் விடுமுறை

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று வலிகாம வலயக் கல்விப் பணிப் பாளர் சந்திரராஜா தெரிவித்தார். குறித்த பாடசாலையிலிருந்து இட மாற்றம் செய்யப்பட்ட அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு நிய மிக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலைமையை அடுத்தே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர்...

மூன்றாவது நாளாகத் தொடரும் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி மாணவர்களின் போராட்டம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து மூன்றாவது நாளாக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் மாணவர்களின் போராட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லை. எதிர்வரும் நாட்களில் தமக்கான நீதி கிடைக்கா விட்டால் வீதி மறியல் போராட்டம் செய்யப் போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மாணவர்களின் போராட்டம்...

பாடசாலையிலிருந்து இடை விலகியவர்கள் வடக்கில் அதிகம்

வடமாகாணம் ஒரு காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கியது. ஆனால், இன்று அந்நிலை மாறியுள்ளது. இலங்கையில் வடக்கு மாகாணமே பாடசாலையிலிருந்து விலகியர்கள் அதிகளவானவர்கள் உள்ள மாகாணமாகவுள்ளது. அடுத்தாக கிழக்கு மாகாணம் உள்ளது என யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலை செல்ல ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்...

வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்கள் மீண்டு கல்வியைத் தொடர வணிகர் கழகம் உதவி

யாழ் மாவட்டத்தில் வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மற்றும் இடைவிலகிய மாணவர்கள் தமது கல்வியை இடைவிடாது தொடரும் வகையில் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலகத்தில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படின் அறிவிக்கவும்

நாளையதினம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு முன்னரே பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இம்முறை 2,907 பரீட்சை நிலையங்கiளில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் 3,400,930 மாணவர்கள் பரீட்சைக்கு எழுதவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடைபெறும் போது ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின்...

அலைபேசியை எடுத்துச்சென்ற மாணவர்கள் இருவருக்கு பரீட்சை தடை

கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை நடைபெற்றுகொண்டிருக்கின்ற பரீட்சை மத்தியநிலையத்துக்குள் அலைபேசியை எடுத்துச்சென்ற மாணவர்கள் இருவருக்கு பரீட்சை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை மத்தியநிலையமாக தொழிற்படும் மத்தியநிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருவரே இவ்வாறு அலைபேசியை எடுத்துச்சென்றுள்ளனர். அவ்விருவர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி பரீட்சைகள் சட்டத்தின்...

பொரு­ளியல் வினாப் பத்திரம் எப்­படி வெளி­யா­னது

க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் முதல்நாள் 04 ஆம் திகதி காலை நடை­பெற்ற பொரு­ளியல் 1 வினாப்­பத்­திரம் பரீட்­சார்த்­தி­களின் கைக­ளுக்கு சென்­றது எப்­படி? உண்­மையில் பரீட்­சைத்­தி­ணைக்­கள அறி­வித்­த­லின்­படி இப்­பத்­தி­ரத்­தி­லேயே பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளித்­தி­ருக்­க­வேண்டும். இது தொடர்­பாக அப்­பத்­தி­ரத்­திலே ஆரம்­பத்தில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் குறிப்­பிட்ட நிலை­யத்தில் பத்­தி­ரத்­திற்­குப்­ப­தி­லாக கட்­ட­மி­டப்­பட்ட வேறு பத்­திரம் வழங்­கப்­பட்டு அதில் பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளிக்­கு­மாறு கோரப்­பட்­டதாம். அத­னையே...

மல்லாவி ம.க.யில் ஜீ.சீ.ஈ.உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் சிங்கள மாணவிகள்! முல்லை மாணவர்கள் அதிருப்தி!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும்...

நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி

நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி 2015 அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதற்பரிசு பெறும் கதைக்கு 25,000 ரூபாய்களும் , இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு முறையே 15,000, 10,000 ரூபாய்களும் பரிசாக வழங்கப்படும். பாராட்டுப் பெறும் பத்துக் கதைகளுக்கு, தலா 2000 ரூபாய்கள் வழங்கப்படும். போட்டி முடிவு திகதி 15.10.2015. மேலதிக விவரங்கள்...

க.பொ.த (உ/த) பரீட்சை இன்று ஆரம்பம்! பரீட்சைக்குத் தோற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

க.பொ.த உயர்தர பரீட்சையில் முதலாம் கட்டம் இன்று (04) ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இப்பரீட்சைக்கென பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக சுமார் மூன்றரை இலட்சம் பேர் தோற்றுகின்றனர். இவர்களுக்கென நாடு தழுவிய ரீதியில் 1800 க்கு மேற்பட்ட பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பரீட்சையின் முதலாம் கட்டம்...

பரீட்சை மண்டபத்துக்கு செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை நிலையத்துக்கு செல்ல முன்னர் தனது தகவல்கள் சரியாக உள்ளனவா என மாணவர்கள் ஆராய்ந்து பார்த்தல்...

பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை அதிபர்களுக்கான வேண்டுகோள்

இந்த முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை சுட்டெண் அடங்கிய சுற்றறிக்கை இதுவரை கிடைக்கப் பெறாத பாடசாலை அதிபர்கள் உடனடியக அறியத் தருமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது. இம்முறை பரீட்சை வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி நாடுபூராகவும் உள்ள 2907 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சையில் தோற்றுவதற்காக 340,930...

தேசிய பாடசாலை இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை கோரல்

2016ஆம் ஆண்டில் தேசிய பாடசாலை இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை கோர கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். இவ்விடமாற்றம் விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் தொடர்பில் குறித்த விண்ணப்பங்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பங்களை எதிர்வரும்...

கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

தேசிய அபிவிருத்தி நிலையத்தில் பிராந்திய நிலையங்கள் மூலம் "முதியோர் பராமரிப்பு டிப்ளோமா" "சமூக பராமரிப்பு டிப்ளோமா"கற்கை நெறிகளை பயில்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மேற்படி பாடநெறிக்கான வகுப்புக்கள் வாராந்தம் சனி ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க கூடியதாக பதிவாளர் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் 488A, நாவல...

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகளுக்கு பதிலாக மாற்று செயற்பாடு

பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகளுக்கு பதிலாக மாற்று செயற்பாடொன்றை தயாரிப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயம் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டார். நடைமுறையிலுள்ள முறையினால் தேசிய ரீதியான மதிப்பீடுகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார். பாடசாலைகளின் ஒப்படை செயற்பாடுகளின்...

பல்கலைக்கழகத்திற்கு இணையும் மாணவருக்கான பதிவுகள் மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெறும்

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பதிவுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் போது, மாணவர்களுக்கான பாடத் தெரிவில் சிக்கல் ஏற்படுத்தப்படுவதோடு அவர்களுக்கு அசாதாரனம் இழைக்கப்படுவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹன்த சில்வா தெரிவிக்கின்றார். இந்த விடயம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து, அதனை...
Loading posts...

All posts loaded

No more posts