- Saturday
- March 21st, 2026
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்களை உட்சேர்ப்புச் செய்வதற்கான திகதி ஜூலை மாதம் முதலாம் திகதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் சைவநெறி புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தரம் 6,10 இலவச பாடநூல் 2015இல் வெயிடப்பட்டிருந்தது. இருந்தும் அப்பாடநூல்களில் பல்வேறு பிழைகள் இருப்பதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். அதற்கிணங்க கல்வி வெளியீட்டுத்திணைக்களம் அப்பிழைகளை ஏற்றுக் கொண்டு தற்போது பாடநூலின் திருத்தங்களை உள்ளடக்கிய இணைப்பு ஒன்று அனுப்பிவைக்கபட்டு வருகின்றது. இருந்தும்...
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது – வயது கட்டுப்பாடும் திருத்தப்பட்டுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற் சங்கத்தினால் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் செய்த வேண்டுகோளுக்கு அமைய கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு...
கடந்த வருடம் நடந்த ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்துப் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு: கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் நாடளாவிய ரீதியில் நடந்த ஜீ.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6...
யாழ் மாவட்டத்தின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் பல்வேறு நிதி உதவிகளை வழங்க தயாராகவுள்ளது என ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்தார். நேற்று (02) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகனுமா வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். வடமாகாணத்தின் அபிவிருத்தி...
யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருத்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு...
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அவ்வகையில் ஜனவரி 31 ஆம் திகதியுடன் காலாவதியாகவிருந்த கால எல்லையானது தற்போது பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரையாக நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தமக்கான சீருடைகளை பெற்றுக் கொள்ள முடியாது போன மாணவர்களின் நலன் கருதியே இத்தீர்மானம்...
2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை www.doenets.lk...
2015ஆம் ஆண்டு க.பொத உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 9 மாகாணங்களில் வட மாகாணம் முதலிடம் பெற்றுள்ளது. 25 மாவட்டங்களில் யாழ் மாவட்டமே முதலிடம் பெற்றுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (27) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் நடைபெற்ற சமுர்தி 'சிப்தொர' புலமை பரிசில் வழங்கல் நிகழ்வில்...
யாழ் பல்கலைகழகத்தில் 20.01.2016 நடைபெற்ற 31ஆவது பட்டமளிப்பு விழாவில் வவுனியாவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவியான செல்வி தணிகை சிவகுமார் (திருமதி.தணிகை சசிகாந்) சிறப்பு வைத்திமானி பட்டத்தை பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். எம்.பி.பி.எஸ் சிறப்பு பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் ஐந்து துறைசார் தங்க பதங்கங்களை பெற்றுக் கொண்டதுடன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்ததை தண்டிக்கொண்ட தமிழ்...
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் செயற்திட்டமொன்றை நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 36 சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கையின் பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் இருந்து பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. தேசிய சிறுவர் அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா இந்த தகவலை, ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது மற்றும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது என்பன கடும் பிரயத்தனமாக இருக்கும் என்று...
2016ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறவுள்ள தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்புவிழா நேற்றயதினம் (19) ஆரம்பமாகியது. யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்றும் (19) இன்றும் (20) ஆக எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 1939 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர். யாழ் பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற நேற்றய முதல் நாள் அமர்வில் யாழ் பல்கலைக்கழக வேந்தர்...
2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன. கடந்த 2013ம் ஆண்டில் சிறந்த மாகாணமாக சபரகமுவ மாகாணமும், சிறந்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டமும்...
பாடசாலைகளில் கல்வி பயிலும் ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டு நிகழ்ச்சியிலாவது பங்குபற்ற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்து பாடசாலைகளிலும் கட்டாய பாடமாக உள்ளடக்கப்படுவதோடு ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டிலேனும் பங்குபற்றி...
தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது பணம் அல்லது நன்கொடை தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களென யாராவது கேட்டால் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணம் அல்லது நன்கொடை ஆகியவற்றின் ஊடாக பெற்றோரிடம் இலஞ்சம் வாங்கும் சகலருக்கும் எதிராக தமது சங்கம், நீதிமன்ற...
கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பிரதான பாடசாலைகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த வெட்டுப் புள்ளிகளை ஒரு புள்ளியால் குறைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் காரணமாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் சேர்வதற்கற்கான வாய்ப்பு கிடைக்கும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த கலைமாணிக் கற்கை நெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க.பொ.த. (உயர்தர) பரீட்சை - 2013 அல்லது அதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்து இருப்பதுடன் பொதுஅறிவுப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 30...
வடமாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள மும்மொழிக் கற்கை நிலையத்தினால் நடாத்தப்படும் இரண்டாம் மொழி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையத்தினால் நடத்தப்படும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் இரண்டாம் மொழி சித்தியடைய வேண்டிய அரச அலுவலர்கள், மூன்றாம் நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள், பாடசாலையில்...
Loading posts...
All posts loaded
No more posts
