- Friday
- December 19th, 2025
வட மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரதும் வரவைப் பதிவு செய்வதற்குப் பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பத்தில் இருந்து நேரக்கணிப்பு இயந்திரத்தை கட்டாயம் பயன்படுத்துமாறு, வடமாகான கல்விப் பண்பாட்டலுவல்கள். விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளாளர் இ.இரவீந்திரன் அறிவித்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத் தடையை எதிர்க்கொண்டிருந்த மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததையடுத்து, நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மாணவர்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்தே இம் மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும்...
உண்மையான அறத்தின் பாற்பட்டு மேற்கொள்ளப்படவேண்டிய உணவு தவிர்ப்பு போரட்டம், மாணவர்கள் சிலரின் ஒழுக்கமீறல்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது, கலைப்பீடமாணவர்கள் இச்சமூகம் தொடர்பில் காட்டிவரும் பொது அக்கறைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாகும்.என கலைப்பீடச் சபை வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் விதிக்கப்பட்ட வகுப்புத்...
பாடசாலை மாணவர்களுக்கான வெள்ளை நிறச் சீருடைக்கு பதிலாக, வர்ணத்திலான சீருடையொன்றை அறிமுகப்படுத்த, கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்குள்ள விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதற்காக, நான்கு அல்லது ஐந்து நிறங்களை அறிமுகப்படுத்தி, அதில் விரும்பிய நிறத்தை, தனது பாடசாலை மாணவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான அனுமதியினை,...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களால் வியாழக்கிழமை (30) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்ணாவிரத போராட்டத்தில், இரண்டு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (31), யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்காம், மூன்றாம் வருடங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு மயக்கமடைந்தவர்களாவர். முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வின் போது நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனத் தெரிவித்து...
நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை முடிவுகளை மீள் பரிசீலனை செய்யக் கோருபவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ட்பளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை பரீட்சாத்திகள் பாடசாலை அதிபருடாக விண்ணப்பிக்குமாறும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தேசிய பத்திரிகைகளில் விரைவில் வெளியிடப்படவுள்ள மாதிரி விண்ணப்பப்படிவங்களுக்கு அமைவாக...
நேற்றைய தினம் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 8,224 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 6,102 மாணவர்களே 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்ததாகவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கணித பாடத்தில் சித்தியடைந்தோர் 7.63...
கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள், 1,75,000 பேருக்கு டெப் கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு முதலாவதாக டெப் கணனிகளை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்படும் போது சாதாரண தர பரீட்சையில் சித்திபெறும்...
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் வழமைபோல் நடைபெறும். மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகும். முதலாம் வருட மாணவர்களின் வரவேற்புபசார நிகழ்வில் (10.03.2017 மற்றும் 11.03.2017) ஏற்பட்ட அசாதாரண நிலமைகளின் காரணத்தினால் மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றற்செயற்பாடுகள் தற்காலிகமாக...
2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பெறுபேறுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தவிர டயலொக் கையடக்க தெலைபேசி ஊடாகவும் மாணவர்கள் தங்கள்...
அளவுக்கு மீறி மது அருந்திய 7 பாடசாலை மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிஹிந்தலையிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களே அளவுக்கு மீறிய மது போதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடியதாகவும் இதன்போது மதுபானத்தை பாடசாலையில் வைத்து அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அளவுக்கு மீறி மதுபானம், அருந்தியமையால் அவர்கள் போதையில் நிலை...
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர், பொரளை பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அத்துடன், அங்குள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பீதியுறும் வண்ணம் செயற்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு ஊழியர் ஒருவரையும்...
அரச பல்கலைக்கழகங்களிலுள்ள விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களுக்கு இம்முறை கல்வியாண்டுக்கு மாணவர்களின் விண்ணப்பங்கள் போதியளவு கிடைக்கப் பெறாதுள்ளதாகவும், இதனால் மீண்டும் அவற்றுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான பீடாதிபதிகள் இதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, அறிவித்தல் ஒன்றை பதிவாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் நேற்று (17) வெளியிட்டுள்ளார். யாழ். பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன் இது தொடர்பாக தெரிவிக்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014, 2015 கல்வியாண்டுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள்...
யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத் துறை தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முறைகேடான நடவடிக்கையின் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, விடுமுறை வழங்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
இவ் வருடத்தில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள், இவ் வருடம் மார்ச் 28ம் திகதியும், இம்முறை இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வௌியிடப்படவுள்ளன. அத்துடன், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை...
அரச பாடசாலைகளில் கடமை புரியும் அதிபர்களுக்கு இராணுவக் கல்லூரியில் பயிற்சிச் செயலமர்வை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது எதிர்ப்பு வௌியிட்டுள்ளது. மாத்தறை வலயத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களும் ஊவா குடாஓய கமாண்டோ ரெஜிமேன் பயிற்சிக் கல்லூரிக்கு, எதிர்வரும் 22 ஆம் திகதி பயிற்சிக்கு வருமாறு தென் மாகாண கல்வித் திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
பாடசாலை மாணவர்களுக்குப் பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், அவர்களின் காதுகளில், ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை மருத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் சந்த்ரா ஜயசூரிய தெரிவித்தார். இது தொடர்பில், கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் , "ஒருவரின் காதில், இன்னொருவர்...
கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் பஞ்சாட்சரம் கணேசனை மாற்ற வேண்டாம் எனக்கூறி பாடசாலை சமூகத்தினரால் இன்று காலை 7 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. “சீ.வீ.கே உறவினருக்காக பாடசாலையை சீரழிக்காதே”, ” வடமாகாண முதல்தர பாடசாலையை சீரழிக்காதே”, “வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கொக்குவில் இந்துவின் வளர்ச்சி பிடிக்கவில்லை”, “வேண்டும் வேண்டும் இந்த அதிபர் எமக்கு வேண்டும்...
தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும் 22ஆம் திகதியன்று, இவ்வாறான பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்று ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது, அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டதுடன் அவர் கேர்ணல் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டனர். இந்தச் செயற்பாட்டுக்கு ஐக்கிய...
Loading posts...
All posts loaded
No more posts
