Ad Widget

பல்கலைக்கழக Z புள்ளிகளை அடுத்தமாத நடுப்பகுதியில் வெளியிட நடவடிக்கை

Z புள்ளிகளை அடுத்த மாதநடுப்பகுதியில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் 2016/2017 கல்வியாண்டுகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் குறுப்பிட்டார்.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 29 ஆயிரம் மாணவர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் , எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Posts