- Saturday
- June 21st, 2025

வலியடைப்பு சைவப் பிரகாச வித்தியாலயத்தின் புதிய அதிபரை மாற்றக்கோரி பாடசாலை சமூகத்தினர் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் காலை 7.00 மணிதொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை கல்லூரி வளாகத்திற்கு முன்னால் புதிய அதிபரை மாற்றி பழைய அதிபரை மீண்டும் பாடசாலையில் நியமிக்குமாறு பெற்றோர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு ஆகியன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டதில்...

2016/2017ஆம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதேவேளை உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீளத் திருத்தும் போது முன்பை விட சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் பட்சத்தில் எந்த மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணைக்குழு தயார் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான்...

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 15ம் திகதிக்கு பின்னர் முன்வைக்கப்படும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்கப்பட மாட்டாது என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி 23ம் திகதி உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை...

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி, அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு, நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக மாணவர்கள் கூறினர். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது, “யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம், மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில், பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி,...

கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் ஏழாம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக கல்வியியல் கல்லூரி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டரா தெரிவிக்கையில்: பஸ்துன்ரட்ட மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களின் கல்லூரிகளை தவிர நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஏழாம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது என்றார். கல்வியாண்டுக்கு நான்காயிரத்து 69...

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை அடுத்து, நாட்டில் மேலும் பல வைத்திய கல்லூரிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மனிபால் பல்கலைக்கழகத்தின் இணைப்பாக களுத்துறை பிரதேசத்தில் கொழும்பு மற்றும் கண்டியின் பிரதான தரப்பின் தனியார் வைத்தியசாலைகள் இரண்டினை அடிப்படையாக கொண்டு, புதிய தனியார் வைத்திய...

வகுப்பறையில் சப்பாத்துக்குப் பதிலாக செருப்பு அணியும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்பவர்களாக காணப்படுகின்றார்கள் என பிரித்தானிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் டர்பிஷயர் பிராந்தியத்திலுள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு செருப்பு அணிய வாய்ப்பளித்து பின்னர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ஸ்டீவன் ஹெரல் என்பவர் இது தொடர்பில் கூறும் போது, சப்பாத்து...

பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது பற்றுச்சீட்டு வழங்காமல் பணம் அறவிடப்படுமாயின் , உடனடியாக அது தொடர்பில் அறிவிக்குமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.இவ்வாறு பணம் அறவிடப்படுமாயின் அருகில் அமைந்திருக்கும் வலயக் கல்வி அலுவலகத்தில் அல்லது உள்ளூர் அலுவலகத்தில் அறிவிக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக பணம் அறவிடப்படுவதாக...

மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (சைட்டம்) வழங்கப்படுகின்ற பட்டம் சட்டரீதியானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் அந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவுபெற்று வெளியேறும் மாணவர்கள் மருத்துவப் பேரவையில் தொழிற்துறையினராக பதிவுசெய்துகொள்வது அவசியமாகும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் மருத்துவப் பேரவைக்கு உத்தரவிட்டுள்ளது. மாலம்பே பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற இரண்டு மருத்துவப்பீட மாணவர்கள் தாக்கல் செய்த...

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஐந்நூறு மாணவா்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஆயிரம் ரூபா வீதம் உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதமர் அலுவலகம். சிறுவா் பெண்கள் விவகார அமைச்சு, சிறுவா் நன்னடத்தை திணைக்களம்,கிளிநொச்சி மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் கொழும்பு மயூரபதி அம்மன் நலன்புரிச் சங்கத்தினால் மேற்படி உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாதரவத்தை மற்றும் கொடிகாமத்தை சேர்ந்த கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் இருவரே மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24ஆம்திகதி குறித்த மாணவர்கள் உள்ளிட்ட 8 மாணவர்களை ஏனைய மாணவர்கள் சிலர் பகிடிவதைக்கு உட்படுத்தி கடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இதில்...

முஸ்லீம் ஆசிரியையினால் கிளிநொச்சி அதிபருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் காரியாலயத்தில் முறைபாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு கிளிநொச்சி மகாவித்தியாலய ஆசிரியரினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியை தனது கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட...

க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் தோற்றவுள்ள மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியுள்ளது. விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி கால எல்லை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியாகும். பாடசாலை மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் விண்ணப்பப்படிவங்கள் தபாலிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. தனியார் பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

2016-2017 பல்கலைக்கழக கல்வி ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத ஜிசிஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேமகுமார தெரிவிக்கையில்:...

கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்துமாறு கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வந்தாறுமூலை ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'விடுதி மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்து, சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதிகளைப் பெற்றுக் கொடு' என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் அந்த சுவரொட்டிகளில் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்...

விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துககொள்ளப்படவுள்ளனர். இதற்கான அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது. அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் பணிப்புரைக்கமைய, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்திசெய்யப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்தார். போட்டிப்...

கிளிநொச்சி - உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் (கனிஸ்ர) சேர்த்துக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் செயற்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களின் விடுதி வசதிகள் நீக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதி வசதிகள் நீக்கப்பட்டமைப்கு எதிர்ப்புத் தெரிவித்து...

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை...

நாட்டை சுற்றிப் பார்க்க ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுப்பயணி ஒருவர் தனது செயற்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமொன்று சிகிரியா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. டேவிட் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இவர் ஒருவார காலம் இலங்கையில் தங்கியிருந்து சிகிரியா, கண்டி, நுவரெலியா, மிரிஸ்ஸ மற்றும் சிவனொளிபாதமலை...

All posts loaded
No more posts