வடமாகாண ஆசிரியர்களுக்காக கைவிரல் அடையாள நடைமுறையில் மாற்றம்

பாடசாலைகளில் தற்போது தின வரவிற்காக பயன்படுத்தப்படும் கைவிரல் அடையாள நடைமுறையினால் கடந்த ஆண்டு நூற்றிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டமை கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனால் மாற்று ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தில் தற்போது...

பல்கலைக்கழக அனுமதிக்கான “Z” வெட்டுப்புள்ளி இந்தவாரம் வெளியாகும்!

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையினூடாக தேர்ச்சி பெற்று பல்கலைக்கழக நுழைவிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இந்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. 2017 ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அவர்களுக்கான வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 25 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்நிலையில் தற்போது...
Ad Widget

நாடுதழுவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் சங்கம் போராட்டம்!

கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து யாழ்...

வட்டுக்கோட்டையில் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கல்லூரி வளாகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘கல்லூரியில் வியாபாரம் வேண்டாம்’, ‘மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்’, ‘கல்லூரியின் மேன்மை பேணப்பட வேண்டும்’ என...

பாரிய போராட்டத்துக்கு தயாராகும் கல்வி நிர்வாக சேவை!

கல்வித்துறை அரசியல் இலாப நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க போவதாக கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சேவை சங்கம் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளன. அரசியல் இலாபத்திற்காக 1018 பேருக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையை உடனடினாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன....

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கள் 26ஆம் திகதி மீளவும் பணிப் புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று குற்றஞ்சாட்டி ஆசிரியர் சங்கம் உள்பட கல்விசார் தொழிற்சங்கங்கள் கடந்த 4ஆம் திகதி சுகயீன...

பேராயர் டானியல் தியாகராஜா ஒதுங்கும்வரை யாழ்ப்பாணக் கல்லூரிக்கான நிதி கிடையாது!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குத் தொடர்ந்தும் நிதி வழங்குவதற்கு அமெரிக்காவில் இருக்கும் தர்மகர்த்தா சபையினர் முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துக் கடிதம் ஒன்றினை நேற்று இலங்கையில் இருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபைக்கு அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையிலும் கல்லூரியின் நிருவாகத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் நோக்கில் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜாவும், சபையின் உப...

யாழ்.தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம், கொக்குவில் தொழிநுட்ப கல்லூரியின் பதிவாளர் அதிகார முறைகேட்டில் ஈடுபடுகின்றார் என்றும் அதற்கு பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டி மாணவர்கள் ஒன்றியத்தால் நேற்று கற்றல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொழிநுட்ப கல்லூரியின் பெண் பதிவாளரின் சகோதரர் பொலிஸில் பணியாற்றுகிறார் என்றும் அவரின் வழிநடத்தலில் யாழ்ப்பாணம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் யாழ்ப்பாணம் தொழிநுட்ப கல்லூரி கல்விசார்...

சிறுவர் பாதுகாப்பு அலுவலகரின் பணிக்கு யாழ்ப்பாண கல்லூரி நிர்வாகம் இடையூறு!!

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடத்தும் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களுக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரால் நெருக்குதல்கள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வு நடத்துவதனால் ஆசிரியர்கள் சிலருக்கு எதிராக தேவையற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிடும் அந்தப் பாடசாலையின் அதிபர், இவ்வாறான...

வடக்கில் கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும்: முதலமைச்சர்

வடமாகாணப் பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண கல்வித் திணைக்களத்தால் துரையப்பா விளையாட்டு அரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையேயான தடகளப் போட்டி நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த அறிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இப் பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளன. இந்தப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது....

நாளை கல்வியாளர்கள் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்- பாடசாலைகளை மூடுமாறும் அழைப்பு!!

இலங்கை கல்வித்துறையில் தகுதியற்ற ஆயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை 4 ஆம் திகதி புதன்கிழமை நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்....

ஆரம்ப பிரிவு மாணவர்களை பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவரே அழைத்துச் செல்ல முடியும் – வடமாகாண கல்வி அமைச்சர்

வடக்கு மாகாணத்தின், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்ட வர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும்” இவ்வாறு வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார். மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில்...

கொக்குவில் இந்து ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்!!

கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கல்லூரியின் ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியர் பிரதீபன், நேற்று மாலை தாக்கப்பட்டார். பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர், ஒழுக்கமின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தனர். அதன் பின்னணியிலேயே ஆசிரியர் தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலைக்...

க.பொ.த சாதாரண தரத்தில் சுகாதாரம் கட்டாய பாடம்!

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுகாதாரம் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில் தரம் 6இல் இருந்து தரம் 9வரை கட்டாய பாடமாக சுகாதாரம் உள்ளது. 2023ஆம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாராண தரப் பரீட்சையில் சுகாதாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வீ மறுசீரமைப்புக் குழு...

வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய மாணவர்கள் முன்வர வேண்டும்: அரசாங்க அதிபர்

பாடசாலை மாணவர்களுக்கெதிரான வன்புணர்வுகள் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டுமென்பதுடன், விழிப்புணர்வுகளை அடைய வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அண்மைக்காலமாக பாடசாலை மாணவிகள் மீதான வன்புணர்வுகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்...

பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார். இன்று மற்றும் நாளை, எதிர்வரும்; 26ஆம் மற்றும் ஜூன் 02 ஆம் திகதி ஆகிய நாட்களில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

க.பொ.த. உயர்தர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். www.doe.nev.s.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இதனைப் பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை இந்தப் பரீட்சைக்கு...

சாதாரண தரப் பரீட்சை ழுதும் மாணவர்களுக்கு பாடநூல்கள் இன்னும் கிடைக்கவில்லை!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தரம் 11 மாணவர்களுக்கான பிரதான பாடங்களின் நூல்கள் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நாடுமுழுவதும் அனைத்து தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடநுால்களுக்குப் பெரும் பற்றாக்குறை உள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “இந்த...

யாழில் முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு சென்ற ஆசிரியை!!!

யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , இருபாலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த...
Loading posts...

All posts loaded

No more posts