- Wednesday
- June 11th, 2025

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே-18 அன்று வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும் மாகாண சபை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த எழுபதாண்டுகாலமாக எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும்...

மீள் திருத்தம் செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் பரீட்சாத்திகள் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற முகவரியில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சையின் போது பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்த புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார். எதிர்வரக்கூடிய க.பொ.த உயர்தர பரீட்சையில்...

கடந்த வருட உயர்தரப் பெறுபெறுகளின் அடிப்படையில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நுண்மதிப் பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறியத் தந்துள்ளார். யாழ்ப்பாணம் அனுராதபுரம் கண்டி கொழும்பு மாத்தறை பதுளை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 21 பரீட்சை நிலையங்களில் இப் பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்...

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அடுத்த மாதம்...

வடமாகாணத்தில் 246 ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு பாடசாலையில் 5 வருடங்கள், அதற்கு மேல் சேவையாற்றியவர்களுக்கு இவ்வாறு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டில் 246 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி வலயத்தில் 53...

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில்; மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார். வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014ஆம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக பரீட்சை வினாத்தாள்களைக் கோரியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த...

அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு, ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

நள்ளிரவு வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ் மாணவி பெற்றுள்ளார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்...

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இன்று வௌியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. இன்று நள்ளிரவுக்குள் பரீட்சை பெறுபேறுகளை இணையத்தில் வௌியிடுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறினார். இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88,573 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதேவேளை இந்தப் பரீட்சைக்கு தோற்றிய...

கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இறுவெட்டுகளில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை பரீட்சைப் பெறுபேறுகளை இறுவெட்டுகளிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித் தெரிவித்துள்ளார். பரீட்சைப் பெறுபேறுகளை திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்படும். அதேவேளை கொழும்பில் உள்ள...

பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டத்தை மேலும் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆயிரம் பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன்கீழ் சுமார் எண்ணாயிரம் பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மதியபோசனம் வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வடக்கு, கிழக்கில் 100 மாணவர்களை விட குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன் இயங்கும்...

பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தினை ஜனாதிபதி, நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார். இத்தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களாக நிர்மாணப் பணிகள்...

கண்டியில், திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தினால் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், “கண்டியில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படும்” என நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் குறித்த கண்டி பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு ,அதன் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால், கடந்த...

தென்மராட்சி கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அதனால் ஏற்பட்ட பதற்றத்தால் கால்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்றயதினம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் தென்மராட்சி கல்வி வலய...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த முகாமைத்துவ மற்றும் வணிகபீட புதுமுக மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக பதிவாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.மேற்படி கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, விடுதி வசதிகள் வழங்கப்பட்டிருந்த மாணவர்களுக்கும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர்...

முல்லைத்தீவு – அம்பாள்புரம் மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கடந்தவாரம் வழங்கிய பணிப்புரைக்கமைவாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து நேற்று(புதன்கிழமை) முதல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. தினமும் காலையும் மதியமும் இச்சேவை இடம்பெறவுள்ள அதேவேளை இம்மாணவர்களுக்கு தேவையான பேரூந்து பிரவேசப் பத்திரங்களை வன்னிவிளாங்கும் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஊடாக மாணவர்களுக்கு வழங்க விரைவில்...

மாலபே – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள்...

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளநிலையில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் இன்று முதல் வெள்ளிக்கிழமைவரை மூடப்படவுள்ளன....

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 4ஆம் வருட மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கு 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் கடந்த...

All posts loaded
No more posts