- Monday
- March 2nd, 2026
யாழ்ப்பாணத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர்கள், இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான்...
சிறுப்பிட்டி பகுதியில் இரு தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 14 இராணுவத்தினருக்கும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை நேற்று யாழ் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவருவதாவது, மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம்...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து பொலிஸாரையும், தொடர்ந்தும் எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ரீ.ஐ.டி என அழைக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரே இந்தக் கைதுகளை மேற்கொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் பொறியியல் பிரிவில் கடமையாற்றும் தமிழ் சிப்பாய் ஒருவரும்...
யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 6பேரைக் கைதுசெய்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொக்குவில், சில்லாலை, சுன்னாகம் போன்ற பிரதேசங்களில் நேற்று முன்தினம் நான்குபேரும், உடுவிலில் இரண்டுபேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் எனவும், அவர்களை வீட்டில் வைத்துக் கைதுசெய்ததுடன், அவர்களுக்குச் சொந்தமான கயஸ் வாகமொன்றையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வுப்...
ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் போரில் உடுவில் பகுதியில் சகோதரர்கள் இருவரை பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் கைதுசெய்ததினால் அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் வீட்டில் இருந்த சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்த வேளையில், வீட்டில்...
அச்சுவேலி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவு உற்பத்தியில் ஈடுபட்டமை மற்றும் சுகாதார நலன்பேணாத உணவக, வெதுப்பக மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் தீரப்பளித்தார். அச்சுவேலி இராச வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தமை,...
கிளிநொச்சியில் பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் மோதல் ஏற்படக் காரணமாக செயற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் கட்டைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவநீதராசா என்பவருக்கே எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர்கள்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த 20ஆம் திகதி...
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத மரக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்தின் உதவி காவல்துறை அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – அக்கராயன் காட்டுப் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பதினாறு முதிரை மரக்குற்றிகளை கிளிநொச்சி நகருக்குக் கொண்டு செல்வதற்கு...
யாழ்ப்பாண மாநகர சபையில் திட்டமிடல் கிளையில் பணிபுரியும் பெண்ணொருவர் 17 இலட்சம் நிதிமோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாணக் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாநகர சபையின் திட்டமிடல் கிளையின்கீழ் புதிய கட்டிட அனுமதி மற்றும் பல்வேறு அனுமதிகளிற்காக வழங்கப்படும் படிவங்கள் மற்றும் அறவீடுகளின்போதே குறித்த பண மோசடி இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடி இடம்பெற்றமை தொடர்பாக கண்டறியப்பட்டதன்பின்னரே நிர்வாக ரீதியில்...
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பு ஊடாக கடத்தபட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனைக் கடத்தி வந்த சந்தேகநபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஏ.ஆர் மாசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து மாதகல் கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக இளவாளை பொலிஸாருக்கு இரகசிய தகவலைன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து காங்கேசன்துறை விஷேட பொலிஸ் குழு...
ஆபத்தான முறையிலும் கவனக்குறைவாகவும் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி, கிராம சேவகருக்கு காயத்தை ஏற்படுத்தினார் என்று குற்றச்சாட்டுக்கு இலக்கான இராணுவ வீரருக்கு 9ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், விபத்தில் பாதிக்கப்பட்ட கிராம சேவகருக்கு 1 இலட்சம் ரூபாயை, நட்டஈடாகச் செலுத்துமாறும் உத்தரவிட்டார். கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதியன்று,...
ஹெரோய்ன் கொள்வனவு செய்வதற்காக, தனது சிறுநீரகத்தை 500,000 ரூபாய்க்கு விற்பனை செய்த போதைக்கு அடிமையான நபரொருவரை, 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன், காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி, தன்கெதர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், தனது சிறுநீரகத்தை விற்பனைச் செய்த பின்னர், கொழும்புக்குச் சென்றுள்ளதாகவும்...
புங்குடுதீவு மாணவியான வித்யாவின் படுகொலைக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரை, விடுவிக்குமாறு ஆலோசனை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை கைதுசெய்வதற்கான ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவந்த அனைத்து விசாரணைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.முடிவுற்ற விசாரணை அறிக்கைகள் அனைத்தும் சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வித்தியா என்னும் மாணவி...
துன்னாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் மற்றும் வாள்வெட்டில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீளவும் வெட்டுவதற்கு வாள்களுடன் வைத்தியசாலையில் புகுந்தவர்களால் பெரும் பதற்றம் நிலவியிருந்தது. துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்காகி அண்ணன், தம்பி உட்பட மூவர் படுகாயமடைந்தனர். இதில் அதேயிடத்தினைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கமலேஸ்வரன் (வயது33),...
யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் வீடொன்றின் மேல் ஏறி நின்ற நிலையில் அயல் விட்டார் இதனை பார்த்து வீட்டாருக்கு கூறியுள்ளனர். இதனையடுத்து அயலில் உள்ளவர்களும் சேர்ந்து சந்தேகநபரை சுற்றிவளைத்துள்ளனர்....
நெடுந்தீவு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 இலங்கை மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை (31) மாலை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்களிடமிருந்து 80 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டடுள்ளதாகவும் காரைநகர் மற்றும் வேலணை பகுதியைச் சேர்ந்வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
