வடக்கு விவசாய அமைச்சால் வவுனியாவில் 641பேருக்கு வாழ்வாதார உதவிகள்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மூலம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 641பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (20.04.2016) நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு விவசாய அமைச்சால் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின்...

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் அடாவடி!

கிளிநொச்சி நகரை அண்டிய சில பிரதேசங்களிலுள்ள வியாபார நிலையங்களின் விபரங்களைத் திரட்டிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் வியாபார நிலையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு வியாபார நிலையமாகச் சென்ற இரண்டு இராணுவத்தினர் கடையின் பெயர், கடையின் உரிமையாளர் பெயர், கடையில் எத்தனைபேர் வேலைசெய்கிறார்கள், கடையில் என்ன வியாபாரம் நடக்கின்றது, எந்தக் கிராமசேவையாளர் பிரிவு,...
Ad Widget

மாலைதீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களில் 3 தமிழ் இளைஞர்களும் அடக்கம்!

இலங்கையில் போர் நடைபெற்ற நேரம் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, விசுவமடு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனார்கள் என அவர்களது பெற்றோரால் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை...

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது!

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய மற்றுமொரு தமிழ் இளைஞர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவரே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு...

நீதிமன்றிலிருந்து கைதி தப்பியோட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வழக்கு ஒன்றிற்காக அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் 2.20க்கு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச்சென்ற கைதியைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதிப் போரில் சரணடைந்தோரின் விவரம் சமர்ப்பித்தல் ஒத்திவைப்பு!

இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்கள் தொடர்பான விவரங்கள் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருக்கின்றன எனவும்,...

கிளிநொச்சிக்கு புதிய நீதவான் நியமனம்

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற புதிய நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நீதிவானாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த ஏ.ஜே.பிரபாகரன், இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, புதிய நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நீதிவானாக கடமையாற்றிய இவர், புலமைப்பரிசில் பெற்று, மேலதிக படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குச்...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

ஏ - 9 வீதியில் கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர் கிளிநொச்சி பிரதேசத்தைச்...

முல்லை. மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சம்பந்தன் மாங்குளம் பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் நேற்று முல்லைத்தீவு மாவட்ட மக்களை மாங்குளத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று மாங்குளம் வருகைதந்த சம்பந்தன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த அனைத்துப் பிரதேச செயலர் பிரிவு மக்களையும் சந்தித்துக் கலந்துரை யாடியுள்ளார். இதன்போது, தென்பகுதி...

கத்திமுனையில் துணிகரக் கொள்ளை

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குடப்பட்ட தேவிபுரம் 'அ' பகுதி விக்கி குடியிருப்பில் நான்கு பேர் கொண்ட குழுவினர், இன்று வியாழக்கிழமை (14) அதிகாலை கத்திமுனையில் வீடொன்றைக் கொள்ளையிட்டுள்ளனர். வீட்டின் மின்னிணைப்பை துண்டித்துவிட்டு வீட்டிலிருந்தவர்களை கத்திமுனையில் அச்சுறுத்திய அந்தக்குழு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. சுமார் 15 பவுண் நகைகளையும் 65,000 ரூபாய் பணத்தினையும் இவர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக புதுக்குடியிருப்புப்...

கிளிநொச்சியில் ஊடகவியலாளரைத் தாக்க முயன்ற இராணுவத்தினர்!

கிளிநொச்சி சுதந்திர ஊடகவியலாளர் மீது நேற்று இரவு இராணுவத்தினர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதோடு, அவரது புகைப்பட கருவியையும் சேதமாக்கினர். நேற்று இரவு 09.45 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் குடமுருட்டி பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது, சிவில் உடையில் நின்ற இராணுவ கேணல் என தன்னை அடையாளப்படுத்திய...

கிராமசேவகர்கள் தாக்கப்பட்ட விவகாரம்- கொழும்பிலிருந்து சென்றது இராணுவ விசாரணைக்குழு!

கொக்குத்தொடுவாய் பகுதியில் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து இராணுவ தரப்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று கொழும்பிலிருந்து சென்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் தெரிவித்தார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் முல்லைத்தீவில் கிராம அலுவலர்கள் இணைத்து ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டிருந்தனர்....

இராணுவத்துக்கு எதிராக கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்!

கிராம சேவையாளர்களை அவர்களது கடமையை மேற்கொள்ளவிடாது இடையூறு விளைவித்த இராணுவத்தினரைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட கிராம சேவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் கிராம சேவையாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கில், தென்னிலங்கை மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் வாடிகள் அமைத்து தொழில் நடவடிக்கையில்...

கிராம சேவையாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் நோக்குடன் வாடிகளை அமைக்க வந்த முப்பதுக்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களுக்கும் கொக்கிளாய் கிராம வாசிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்றப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, நேற்று மாலை 5 மணியளவில் இராணுவத்தின் அனுசரணையுடன் தென்னிலங்கையை சேர்ந்த...

அதிக வெப்பநிலையால் சிறுவர்கள் பாதிப்பு

வடமகாணத்தில் தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இன்று காலை 9.00 மணியில் இருந்து 11.00 மணிவரைக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் 100க்கு மேற்பட்ட சிறுவர்கள் வெளிநோயாளர் பிரவில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், வெளிநோயாளர்கள் என பலர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். தொடர்ந்து...

ஒருநாள் கூத்துக்காக பழமையான கோட்டையை உடைத்த இராணுவத்தினர்!

கலாசார நிகழ்வு ஒன்றுக்காக தொன்மை மிக்க பூநகரி கோட்டையின் சில பகுதிகளை இராணுவத்தினர் நேற்று உடைத்துள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து தங்களது நிகழ்வு ஏற்பாட்டு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பூநகரி-வாடியடிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கோட்டையின் சில பகுதிகளே இராணுவத்தினரால் உடைக்கப்பட்டுள்ளது....

தொடர்ச்சியாக நீரை வெளியேற்றிக்கொண்டிருக்கும் கிணறு!

தற்பொழுது வடக்கு மாகாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றபோதிலும் வற்றாப்பளை அம்மன் கோவிலின் நுழைவு வாசலில் இருக்கும் கிணற்றில் நிலமட்டத்திற்கு மேல் இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குழாயால் நீர் வெளியேறிய வண்ணமே உள்ளது. இது பற்றி வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலின் நிர்வாகசபைத் தலைவர் ம.விக்கி தெரிவிக்கையில் இக்கிணற்றுக்கு அண்மையில் எந்தவொரு நீர்நிலைகளும்...

நூறுநாள் வேலைத்திட்டத்தை இந்த ஆண்டிலும் முன்னெடுக்க வேண்டுமேன கூட்டுறவாளர்கள் அமைச்சர் ஐங்கரநேசனிடம் கோரிக்கை

கூட்டுறவு அமைச்சால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டத்தைப்போன்று கூட்டுறவு அமைப்புகளின் அபிவிருத்தி கருதி இந்த ஆண்டும் நூறுநாள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு கூட்டுறவாளர்கள் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (05.04.2016) கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில்...

வட இலங்கை மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு உறுதி

இலங்கையின் வடக்குப் பகுதி மீனவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை முல்லைத்தீவில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அளித்துள்ளார். முல்லைத்தீவில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடி ஆராய்ந்ததன் பின்னர் அதற்கு தீர்வு காணும் நோக்கில் குழு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார். அரசாங்க அனுமதி பெற்ற...

முல்லை. புதுக்குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் உலாவும் மர்ம நபர்கள்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம், வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார்சைக்கிளில் தினமும் இரவில் உலாவுவதாக அறியமுடிகின்றது. புதுக்குடியிருப்பில் இருந்து குறித்த பிரதேசங்கள் நீண்ட தூரம் என்பதினால் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை தாமதமாக இருக்கின்றது. குறித்த மர்ம நபர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பயணிக்கின்றனர். குறித்த பிரதேசத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts