முல்லை. மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சம்பந்தன் மாங்குளம் பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் நேற்று முல்லைத்தீவு மாவட்ட மக்களை மாங்குளத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

sam

முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று மாங்குளம் வருகைதந்த சம்பந்தன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த அனைத்துப் பிரதேச செயலர் பிரிவு மக்களையும் சந்தித்துக் கலந்துரை யாடியுள்ளார்.

இதன்போது, தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிப்பு, நில அபகரிப்பு போன்ற பல்வேறு பட்ட பிரச்சனைகளை மக்கள் சம்பந்தன் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Related Posts