Ad Widget

நீதிமன்றிலிருந்து கைதி தப்பியோட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வழக்கு ஒன்றிற்காக அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் 2.20க்கு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச்சென்ற கைதியைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts