முன்னாள் போராளிகளுக்கு கால்களை வழங்கியது இராணுவம்

தங்களுடனான யுத்தத்தின் போது கால்களை இழந்து சிறப்புத் தேவையுடையவர்களாக இருக்கின்ற முன்னாள் போராளிகளுக்கு இலங்கை இராணுவத்தினர் கால்களை வழங்கியுள்ளது. இலங்கை ராணுவத்தினருடனான யுத்தத்தின் போது தங்களது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும், மற்றும் யுத்த காலத்தில் கால்களை இழந்த பொது மக்களுக்கும் செயற்கை கால்களை ராணுவம் வழங்கியுள்ளது. கிளிநொச்சியில் இன்று (07) ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில்...

காணிகளை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்: கேப்பாப்பிலவு மக்கள்

படையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுவிக்காவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அம் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 8ஆவது நாளை எட்டியுள்ளபோதும் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சாதமான...
Ad Widget

முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தமது காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கடந்த 31ம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, காணிகளைப் பொறுப்பேற்கச் சென்ற கேப்பாப்பிலவைச் சேர்ந்த 84 குடும்பங்களுடைய காணிகள் விடுவிக்கப்படாததையடுத்து இந்தப் போராட்டம்...

புதுக்குடியிருப்பில் வலுக்கிறது ஆர்ப்பாட்டம்: பிரதேச செயலகம் முற்றுகை

ராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து கடந்த 4 தினங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வந்த மக்கள், இன்றைய தினம் பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள மக்கள், தமது காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு...

சம்பந்தனும், சுமந்திரனும் பேப்பட்டம் கட்ட முயற்சிக்கின்றனரா?; மக்கள் கடும் விசனம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பேப்பட்டம் கட்டுவதற்கு முயற்சிக்கின்றனரா? என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு புலக்குடியிருப்பு பகுதியிலுள்ள காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தம்மை சம்பந்தனோ? சுமந்திரனோ? தொலைபேசி ஊடாகவேணும் தொடர்பு கொண்டு கலந்துரையாடவில்லை எனவும்...

கேப்பாப்பிலவு மக்களின் மண் மீட்பு போராட்டம் தொடர்கிறது

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் இரவு பகலாக முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், ஆறாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் இப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தி விமானப்படையினரும் ராணுவத்தினரும் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்குச்...

சமய நிறுவனங்கள், கோயில்கள் மக்கள் பணியில் ஈடுபடவும் முன்வர வேண்டும்

சமய நிறுவனங்கள், கோயில்கள் போன்றவை தமது கட்டடங்களைப் புதுப்பித்து சுத்தமாக, சுகாதாரத்துடன் அவற்றைப் பராமரிக்கும் அதே வேளையில், மக்கள் பணியில் ஈடுபடவும் முன்வர வேண்டும். பணமானது மக்களிடையே புழங்க இடமளிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச வைத்தியசாலைில் குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நடைபெற்றது. இதன்போதெ...

சுதந்திரதினத்திலும் மக்கள் போராடவேண்டியுள்ளது!

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார். கேப்பாபுலவு - புலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மக்களின் பிரச்சினை தொடர்பில், விமானப்படையினரிம் கலந்துரையாடுவதற்காக, வட மாகாண...

கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியை தாங்கிய புறாக்கள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியை தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. நேற்று காலை (04) கிளிநொச்சி புகையிரத நிலைய முன்றலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. குறித்த புறாக்கள் சுமார் நான்கு மணித்தியாலயங்களில் கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். சிறிய துண்டு ஒன்றில்...

இராணுவம் வெளியேறாவிடின் தீக்குளிப்போம்; புதுக்குடியிருப்பு மக்கள்

இராணுவத்தினர் தமது காணிகளை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றது....

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள கேப்பாப்பிலவு மக்கள்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை, தமது காணிகளை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி தங்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி...

ராணுவத்தினர் ஜனாதிபதியை அவமானப்படுத்துகின்றனர்: ஆனந்தசங்கரி

ஜனாதிபதியின் உத்தரவை மீறி காணிகளை விடுக்காது இழுத்தடிப்பு செய்யும் ராணுவத்தினரின் செயற்பாடு, ஜனாதிபதியை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே...

பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்று; மற்றுமொரு போராட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் புதுக்குடியிருப்பு பிரசெயலக நுழைவாயிலை வழிமறித்து பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு பிலவுகுடியிருப்பு மக்களின் போராட்டம் 5 ஆவது நாளாகவும் தொடர்கிறது

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள் ஐந்தாவது நாளாகவும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்திகடந்த திங்கட்கிழமையிலிருந்து போராட்டத்தை பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த கிளிநொச்சி மாவட்ட தமிழ் மாணவிகள்

பங்களாதேஷில் இம்மாதம் 17 தொடக்கம் 23 வரை நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனா். கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர். அத்துடன் மிக...

வான்படைத் தளத்தின் நுழைவாயிலை மறித்து முல்லை மக்கள் இரவு பகலாக போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள், தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இரவு பகலாக இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தின் 2ஆவது நுழைவாயிலை மறித்து இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யுத்த...

கொட்டும் பனியிலும் இரவோடுஇரவாக 2 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது பிரதான வாயில் முன்னால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனி இரவையும் தாண்டி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை நேற்று விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது நேற்றைய தினம் விடுவிக்கப்படவில்லை....

எழிலன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின்ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன்...

ஐந்நூறு வன்னி மாணவா்களுக்கு உதவி

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஐந்நூறு மாணவா்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஆயிரம் ரூபா வீதம் உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதமர் அலுவலகம். சிறுவா் பெண்கள் விவகார அமைச்சு, சிறுவா் நன்னடத்தை திணைக்களம்,கிளிநொச்சி மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் கொழும்பு மயூரபதி அம்மன் நலன்புரிச் சங்கத்தினால் மேற்படி உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

மதுபோதையில் வாள்வீச்சு ; ஐவர் வைத்தியசாலையில்

மாங்குளம் 06ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், வாள்வீச்சாக மாறியதில் 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிராமத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த நால்வரே மதுபோதையில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவதானித்த வீதியால் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் விலக்குத்தீர்க்க முற்பட்ட வேளை,...
Loading posts...

All posts loaded

No more posts