Ad Widget

கேப்பாபிலவு போராட்டம் : வீதியில் பிறந்த நாள் கொண்டாடிய சிறுமி!

கேப்பாபிலவு புலக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4வயதுக் குழுந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக்வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருகச்செய்துள்ளது.

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியு்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமது சொந்த நிலத்தில் வாழ்ந்திருந்தால் இவ்வாறு வீதியில் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டியதேவை இருக்காது எனவும் இராணுவமும் அரசும் எம்மை வீதியில் நாய்களாக விட்டு வேடிக்கை பார்த்து வருகின்றது என்னும் இந்த குழந்தை வீதியில் பிறந்ததினத்தை கொண்டாடுவதை பார்த்தாவது ஜனாதிபதி மனமிரங்க வேண்டும் என்றும் சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

Related Posts