Ad Widget

கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக கிளி. வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது 524 ஏக்கர் காணிகளை தங்களிடம் கையளிக்க கோரி கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 18ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களின் தார்மீக ஆதரவை வெளியிட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்களும் கேப்பாப்பிலவு மக்களுடன் கைக்கோர்த்துள்ளனர்.

அதன்படி காலை ஒன்பது மணிமுதல் கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்கள் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts