30 வருடங்களின் பின்னர் இரணைமடுவில் இருந்து குடியிருப்பு நோக்கி நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி

30 வருடங்களின் பின்னர் இரணைமடு குளத்திலிருந்து நீர், குடியிருப்பு பகுதிகள் நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஏற்று நீர்பாசண திட்டம் யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் அதன் புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரணைமடு குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியில் குறித்த ஏற்று நீர்பாசண...

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதம் 3 ஆயிரம் பேருக்கு மலேரியா இரத்தப் பரிசோதனைகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்த 3 ஆயிரம் பேருக்கு மலேரியா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம.ஜெயராஜா தெரிவித்துள்ளார். மலேரியாவை முற்றாக தடைசெய்யும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகளை...
Ad Widget

கொழும்பு தாமரை கோபுர பணியில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி இளைஞர் மரணம்!!

இரண்டாம் இணைப்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த மாணவன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தர பிரிவில் உயிரியல் பிாிவில் கல்வி கற்க்கும் கோனேஸ்வரன் நிதர்சன் 19 ஆவார். நண்பர்களுடன் இணைந்து மின் இணைப்பு பணிக்குச் சென்ற மாணவன் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக...

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் கண்டுபிடிப்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போதே இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் காணப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், புதையல் தோண்டிய விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற...

கேப்பாபுலவுக் காணி உரிமையாளர்களுடன் விசேட கூட்டம்!

கேப்பாபுலவில் காணி விடுவிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றும் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளதுடன், இக்கூட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச காணிப்பகுதி அதிகாரி சோ.சேந்தனும்...

14 வயது சிறுமி மீது வன்புணர்வு – பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

14 வயது சிறுமியை பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரே பொலிஸ் உத்தியோகத்தரிடம் அனுப்பியதாக சிறுமி நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த வழக்கு விசாரணையானது எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது தாயாரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும்...

இளைஞன் வெட்டிக் கொலை: சுன்னாகத்தில் ஒருவர் கைது

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கள்ளபாடு வடக்கினை சேர்ந்த 27 வயதுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் சுன்னாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் உள்ள பனங்கூடல் ஒன்றுக்குள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த இளைஞனின்...

முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிக்கொலை! – குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து சென்ற விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுத்தனர். கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்....

விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த தாயார் மகனுக்கு அரச வேலை கேட்டு யாழ்.தளபதிக்கு கடிதம்!!

இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைக்கு தனது மகனை ஆள்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோரி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த தாயார் ஒருவர் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு யாழ். படைத் தலைமையகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் எழுதிய கடிதம்...

கிளிநொச்சி மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று நேற்று (புதன்கிழமை) முன்னெடு்கப்பட்டது. குறித்த போராட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கூடிய பிரதேச மக்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர். அதனைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபைக்கு சென்று அங்கு...

காணி சுவீகரிப்பிற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி அளவீடு மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்!!

முல்லைத்தீவு மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக அளவீடு மேற்கொள்ளும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த முகாம் அமைந்துள்ள இந்த காணிகளை விடுவிக்குமாறு பலதடவைகள் மக்கள் கோரியும் இந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை அளவீடு செய்வதற்காக சென்ற போது, மக்கள்...

10 மணித்தியாலத்திற்கு மேல் வேலை : அவதிப்படும் இளைஞர் யுவதிகள்

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளை 10 மணித்தியாலங்களுக்கு மேல் பணியில் ஈடுபடுத்த பணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விடையம் தொடர்பில் முறைப்பாடு செய்யவதற்கு அங்கு பணிபுரிபவர்கள் முன்வருவதில்லை என நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள ஆடை...

கிளிநொச்சி அரச நிர்வாகத்திற்கு எதிராக இரணைதீவு மக்கள் நடவடிக்கை

கிளிநொச்சி – இரணைதீவில் கிராம மக்களது போரட்டம் தொடர்பில் அரச நிர்வாகத்திற்கு எதிராக யாழ். மனித உரிமை ஆணைகுழுவிடம் முறை பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது சொந்த கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்களே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பிரச்சினைகளுடன் சம்மந்தப்பட்ட...

முல்லைத்தீவில் மினி சூறாவளி

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மழையுடன் கூடியகடும் காற்று வீசியதன் காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்த மினி சூறாவளியால் மாங்குளம், துணுக்காய் வீதியில் அமைந்துள்ள சுமார் 10 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில வீடுகள் சிறிதளவு...

கிளிநொச்சியில் 13.5 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்டுவரும் அம்மாச்சி உணவகம்!

கிளிநொச்சியில் 13.5 மில்லியன் ரூபாய் நிதியில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டு வருகின்றது. விவசாய திணைக்களத்தினால் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில், கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் குறித்த உணவகம், அமைக்கப்பட்டுவருகின்றது. கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் யாழ் பல்லைக்ககழகத்தின் இரு பிரிவுகள் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையம் என்பன இயங்கி வருவதுடன், தனியார் துறையின் கீழ்...

பழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்?

ஒட்டுசுட்டான், கற்சிலைமடுப் பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இராணுவம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளதாக அக்காணி உரிமையாளரான சமாதான நீதவான் கந்தையா சிவராசா தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள சான்றுப் பொருட்களை அழித்துவிட்டு அவ்விடத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்க இராணுவத்தினர் முயன்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, “எனது காணிக்குள் மிகவும்...

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

கிளிநொச்சி – பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியொன்று நேற்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது. சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கினார். அக்காணியில் நிலமட்டத்திலிருந்து சுமார் 35 அடி கீழ்நோக்கிச்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 68 மில்லியன் நிதி முதற்கட்டமான கிடைக்கப்பெற்றுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான வசதிகள்...

கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் கொழும்பில் மாயம்!

கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி, ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 46 வயதுடைய வேலாயுதம் விக்கினேஸ்வரன் என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில்...
Loading posts...

All posts loaded

No more posts