- Tuesday
- June 10th, 2025

உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் மாகாண சபை அதிகாரத்தில் இல்லை' என ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பில்...

வடமாகாண கடற்பகுதியில் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்தக் கோரி வடமாகாணசபையை முற்றுகையிட்டு மாகாண கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு வடமாகாணத்தின் 4 மாவட்டங்களிலும் இருந்து வந்த கடற்றொழிலாளர்கள் வடமாகாணசபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்தக்...

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த 17 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும் இவர்கள் இலங்கை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கும் பட்சத்தில் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு தரப்பு எந்தவித தகவல்களையும்...

வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக செ. மயூரன், நேற்று சனிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின், சுழற்சி முறை ஆசனத்துக்கான உறுப்பினராக இதுவரை பதவி வகித்து வந்த எம். பி. நடராசா, கடந்த மாதம் முதலாம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் அடுத்த சுழற்சி முறை ஆசனத்துக்காக செ.மயூரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்....

இணைந்த வடக்குக் கிழக்கில் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு மாற்றத்தினையே வட மாகாண மக்கள் கோரி நிற்கின்றனர், என அம் மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா ஆகியோரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சார்பில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தற் குழுவின் முன்...

திடீர் சுகயீனம் காரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர் திடீர் சுகயீனம் அடைந்தார். தற்போது அவர் நலமாக இருக்கிறார் எனத் தெரிவித்த வைத்தியர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அவசியம் தேவை என்றும் தெரிவித்தனர். இதனால் அவர் சில நாள்கள் போதனா வைத்தியசாலையில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு சில மாகாணசபை உறுப்பினர்கள் சபையினைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அதில் ஒரு உறுப்பினரை நீக்குமாறும் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த உறுப்பினர் அல்லாத நான்கு உறுப்பினர்களினால் கை ஒப்பம் இடப்பட்ட தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்று...

மக்கள் மனமுவந்து தரும் கொடைகளை தேவையுள்ள மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான 'உதவிப்பாலம்' என்ற கொடை அலகை உருவாக்கி நடத்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மணிமேகலை உணவுக்கூடத்தை, நேற்று செவ்வாய்க்கிழமை (28) திறந்து வைத்து உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது, 'தமிழ்...

வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை ஓமந்தையில் அமைக்க வலியுறுத்தியும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்துவோம் எனவும் தெரிவித்து வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த பேரணியொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கூடிய விவசாயிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன் மன்னார் வீதி வழியாக...

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும், மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 4...

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை குழு உருவாக்குவது என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்த...

வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இரகசிய முயற்சிகள் நடந்து வருகின்றன. விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் இந்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளார். வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்யை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டுமென கோரியே இவ் உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை வவுனியா றோயல் காடின் மண்டபத்தில்...

வவுனியால் அமைக்கப்படவுள்ள பொருளதார மத்திய நிலையம் வேறு மாவட்டத்திற்கு மாறிச்சென்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் வடக்கு மாகாண முதலமைச்சரே ஏற்றுக்கொள்ளவேண்டுமென வவுனியா மாவட்ட உள்ளூர் உற்பத்திப்பொருள் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தத் திட்டம் வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் முதலமைச்சருக்கெதிரான போராட்டம் வெடிக்கும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உள்ளூர்...

மலையக பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நிவாரண உதவிகளை 15.06.2016 அன்று புதன்கிழமை வழங்கி வைத்தார். இதற்கமைய புசல்லாவ பகுதியில் 23 குடும்பங்களுக்கும், தோரகலவில் 33 குடும்பங்களுக்கும், கலத்தவில பகுதியில் 11 குடும்பங்களுக்கும் தேவையான உலர் உணவு மற்றும்...

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் இடத்தெரிவு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதகமான பதில் தருவார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்தின் இடத்தெரிவு குறித்து பேசப்பட்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “மத்திய...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை எனவும் ஆனால் நாட்டில் நிலையான தீர்வை எட்டுவதற்கு தமிழ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவின் வடக்கிற்குப் பயணம் செய்த ஐ.நாவிற்கான அமெரிக்காவின் தூதுவர்...

சுவிஸர்லாந்து நாட்டின் ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு இன்று முற்பகல் 11 மணியளவில் வடக்கு முதலமைச்சரின் கைதடியிலுள்ள அமைச்சில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது, தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோனுடன் சுவிஸர்லாந்து நாட்டுப் பேராசிரியர் ரட்லரும் கலந்துகொண்டிருந்தார். இந்தச்...

வடக்கு மாகாண சபையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வலம்புரி பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு விளக்கம் அளித்து கடிதம் அனுப்புவது என வடக்கு மாகாண சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஐம்பத்து நான்காவது அமர்வு நேற்றையதினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் காலை ஒன்பது...

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரால் சபையில் கூறப்பட்ட 'பியர் குடிக்கும் காசு' என்னும் விடயம் கன்சாட்டில் பதிவு செய்யப்படாமல் நீக்கப்பட்டது. வடமாகாண சபை நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போது, முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்படும் காசை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் உறுப்பினர்கள் இடையில் விவாதம் நடைபெற்றது. “முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்படும் காசை என்ன தேவைக்கு...

“இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு, அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்” என வட மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,...

All posts loaded
No more posts