Ad Widget

அரிசியில் கலப்படம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் நிறமூட்டப்பட்ட சிவப்பு பச்சை அரிசி தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளமையினால் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாத்தறை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டன. இதன் மாதிரிகள் ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய...

மீனவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று(திங்கட்கிழமை) மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வட மாகாணத்திலும் (மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும்) வட கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும்) காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு...
Ad Widget

மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணிதிரளுங்கள் – தமிழ் மக்கள் பேரவை அறைகூவல்

செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை... தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தமிழினத்தின் அவலத்தையும் பேரினவாத சக்திகளின் கபடத்தனத்தையும் உலகறியச் செய்கின்ற மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமாகும்....

என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை செப்ரெம்பர் மாதம் யாழில்!!

நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை செப்ரெம்பர் மாதம் யாழில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நிதி அமைச்சினால் இரண்டாவது என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை நேற்று முன்தினம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது . இதன்போதே யாழில் இடம்பெறுவதற்கான அறிவித்தலும் விடப்பட்டதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். இதேநேரம் குறித்த நடமாடும் சேவை இடம்பெறும்...

யாழில் பெற்றோர் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்! – பொலிஸார் எச்சரிக்கை!!

யாழ். குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சூளுரைத்துள்ளார். யாழ். மானிப்பாயில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் ஆவாக் குழுவின் உறுப்பினர் என பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர். இவர் வீடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தனது சகாக்களுடன்...

பலாலி விமான நிலைய வேலைவாய்ப்புக்கள் – விண்ணப்ப முடிவுத்திகதி 26.7.2019

புதிதாக கட்டப்படும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான  பணிநிலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கான முடிவுத்திகதி 26.07.2019  ஆகும் விண்ணப்ப மாதிரிகள் மற்றும் விபரங்களை இங்கே காணலாம் விண்ணப்ப மாதிரிகள்  https://airport.lk/aasl/reach_us/careers.php

12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை!

நாட்டின் வடக்கு, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் எதிர்­வரும் ஐந்து நாட்­க­ளுக்கு மணித்­தி­யா­லத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வுகூறி­யுள்­ளது. அதன்­படி குறித்த மாகா­ணங்­க­ளுக்குள் உள்­ள­டங்­கு­கின்ற 12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், புத்­தளம், திரு­கோ­ண­மலை, பொலன்­ன­றுவை,...

இலங்கையின் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட உள்ளன. அபராத தொகைகள் அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு நேற்றைய தினம் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம்...

முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து மோட்டார் சைக்கிளை செலுத்துவோரை அவசரக்காலச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவ்வாறு பயணிப்போரை கைது செய்து வழக்கு தொடர முடியும் என சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார். நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து...

வங்கிகளால் கடன் மறுக்­கப்­பட்­டால் 1925 க்கு அழை­யுங்­கள் -நிதி அமைச்­சர்

என்­ரப்­பி­றைஸ் சிறி­லங்கா எனும் திட்­டத்­தில் ஒதுக்­கப்­பட்ட வங்­கி­கள் கடன்­தர மறுத்­தால் 1925 என்ற அலை­பேசி இலக்­கத்­துக்கு அழைத்து மக்­கள் முறைப்­பா­டு­க­ளைப் பதிவு செய்­ய­ மு­டி­யும். முறைப்­பாட்­டின் பிர­கா­ரம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வேன் என்று நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர மக்­க­ளி­டம் தெரி­வித்­தார். 2018ஆம் ஆண்­டின் பாதீட்­டின் பிர­கா­ரம் உரு­வாக்­கப்­பட்ட 50 கைத்­தொ­ழிற்­சா­லை­களை பரி­சீ­லிக்­கும் நோக்­கில் நேற்று மங்­கள...

ரயில்களில் இன்று முதல் மீண்டும் பொதிகளைக் கொண்டு செல்ல முடியும்!

ரயில்களில் இன்று முதல் மீண்டும் பொதிகளைக் கொண்டு செல்ல முடியுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, தற்காலிகமாக ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதிகளைப் பொறுப்பேற்கும் ரயில் நிலையங்களில் பொதிகளைச் சோதனையிடுவதற்காக, விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும், ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ் மக்களுக்கு பொலிஸா் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!!

அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர். யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலும் , தீவக பகுதியில் உள்ள அரச வங்கி கிளையிலும்...

பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் மாநாடு தொடர்பான ஊடக அறிக்கை

பாதிக்கப்பட்டோரும், பாதிக்கப்பட்டோரோடு பயணிப்போரும் இணைந்து பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், பயனும் குறித்து சுயமதிப்பீடு செய்யும் நோக்கோடு மாநாடு ஒன்றை றோட்டரிக் கழகம் யாழ்ப்பாணம் DATA அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்கின்றது. இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை காலமும் சந்தித்தவையும், சாதித்தவையும் ஆராயப்படுவதோடு இனிவருங்காலங்களில் அவர்களது வாழ்வுப்பயணம்...

போலி உறுதி முடித்து காணி விற்பனை – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் எச்சரித்துள்ளது. காணிகளுக்கு போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை...

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளைமுதல் புதிய நடைமுறை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாசி மாதம் 14 ஆம் திகதி பிரதமர் ரணி்ல் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (Accident and emergency unit with modern facilities) நாளை சனிக்கிழமை தொடக்கம் பொதுமக்களுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கவுள்ளது. எனவே விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக வருபவர்கள் நாளை புதிதாக திறந்து...

யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு மாநகர சபை முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்!!

யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு தொடர்பில் யாழ் மாநகரசபையினால் புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு யாழ் மாநகர சபை முதல்வர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிவித்தலினை இங்கு இணைக்கின்றோம். இந்த புதிய திண்மக்கழிவகற்றல் பொறிமுறையை முறையாக ஒழுங்குபடுத்தும்...

நாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற யாழில் வசதி

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும்...

அன்னதான சமையலில் ஈடுபடுவோருக்கு மருத்துவச்சான்றிதழ் அவசியம்!

கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவ அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை அறிக்கை கைவசம் வைத்திருக்காமல் சமையலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாவகச்சேரி சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பெருமளவு கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பொங்கல் உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றன. திருவிழாக்களை...

குண்டுத் தாக்குதல்: சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு உதவி கோரியுள்ளது பொலிஸ்

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். ஈஸ்ட்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். இந்நிலையில் அதன் அடுத்த நாள் கொழும்பு, கொச்சக்கடை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றும் வெடித்து சிதறியது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய...

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்தே முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts