Ad Widget

அரியாலையில் கிறிஸ்தவ மதபோதனையில் கலந்துகொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ்.செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்துகொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பாிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூா்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்தக் கோாிக்கையினை விடுத்திருக்கின்றனர்.

கடந்த 15ஆம் திகதி சுவிற்சர்லாந்தில் இருந்துவந்த மதபோதகர் ஒருவர் மதபோதனை நிகழ்வை அரியாலைப் பகுதியில் நடத்தியிருந்தார். இந்த போதனை நிகழ்வை நடத்திய போதகர் திரும்பி சுவிற்சர்லாந்துக்குச் சென்ற நிலையில் அங்கு அவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த மதபோதகர் நடத்திய மதபோதனையில் கலந்துகொண்டிருந்தவா்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும், சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் பாிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த மதபோதகருடன் நெருக்கமாகப் பழகிய ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். இவ்விடயம் அரியாலைப் பகுதியில் உள்ள மருத்துவார் ஒருவர் ஊடாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளல் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், நல்லுார் பிரதேச மருத்துவ அதிகாரி ஜெயக்குமார், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு அதிகாரி மருத்துவர் மோகனகுமார், சுகாதார பாிசோதகர்கள், பொலிஸார் என அதிகாரிகள் குழாம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

அத்துடன், முதற்கட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கின்றனர். மேலும் குறித்த நபர் அவருடைய வீட்டிலேயே 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தாரும் கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, மதபோதகர் நடத்திய ஆராதனையில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இவா்கள் உடனடியாக தமது பெயர் மற்றும் இருப்பிட விலாசம் என்பவற்றை 021 221 7278 என்ற முகவரிக்கு உடனடியாக அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது.

Related Posts