- Friday
- November 21st, 2025
கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பரந்தன் பகுதியிலிருந்து புளியம்பொக்கணையில் அமைந்துள்ள இளைஞனின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது, எதிர் திசையில் மணல் ஏற்றி வந்த லொறி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பணித்த இளைஞன் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவர்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பெருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறன. அந்த வகையில் கிளிநொச்சி...
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. யாழ். நல்லூரில் நேற்றுமாலை ஆயிரக்கணக்கான...
'அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால், வடக்குக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது' என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான, இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், வட்டக்கச்சியில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'அரசியல்வாதிகளுக்குள் இருக்கும்...
கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) , இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அங்கஜன் ராமநாதன், வடமாகாண பதில் முதலமைச்சர் பொ.ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம அறிமுக உரையுடன் ஆரம்பமான இந்த கூட்டத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் மாவட்டத்தின் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் வயல்கள் அழிவடைந்துள்ள...
முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதி படைத் தேவைக்கு அவசியமென குறிப்பிட்டுள்ள ராணுவம் குறித்த பகுதி விடுவிக்கப்பட மாட்டாதென தெரிவித்துள்ளது. படைத் தேவைக்காக இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிப்பதாக ராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும்...
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழா நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘யுத்தத்திற்கு பின்னரான...
ஒட்டுசுட்டானில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட இரண்டு நீர்ப்பாசனக் குளங்களை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (16.01.2017) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு விவசாய அமைப்புகளின் தலைவர்களிடம் துருசுக் கதவுகளின் சாவிகளைச் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்துள்ளார். ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள வெளிவயல் குளம் மற்றும் துவரமோட்டைக் குளம் ஆகிய இரண்டு...
மர்மமான முறையில் கணவன், மனைவி ஆகிய இருவர் காணாமல் போகச் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கணவர் மட்டும் கை, கால்ககள் கட்டப்பட்டு, வாயில் பிளஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ஓமந் தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை, 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓமந்தை பொலிஸாருக்கு வீதியால் சென்ற...
கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோகத்தில் செய்கைபண்ணப்பட்ட 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் அழிவை எதிர்கொள்ளும் 40 ஆயிரம் நெல்லை பாதுகாக்க நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் உடனடியாக 25 குழாய் கிணறுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் சுமார் 20 ஆயிரம் நெல்லுக்கு ஓரளவு நீர்ப்பாசன வசதியினை ஏற்படுத்தக்கூடிய வாய்புக்கள்...
கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்தவர்கள் தாம் காவல்துறையினர் எனத் தெரிவித்ததுடன் வவுனியாவில் இருந்து வருவதாகவும்...
கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவாமியறையிலிருந்து, 16 வயது சிறுவனின் சடலத்தை பொலிஸார மீட்டுள்ளனர். அதேபகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் கஜேந்திரன் என்ற சிறுவனே, கடந்த வௌ்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர், க.பொ.சா/த பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சிறுவனது நண்பன், அண்மையில் உயிரிழந்து விட்டதன் பின்னர், இந்தச் சிறுவன் வெகுநாட்களாக...
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இன்மையால், உரிய நேரத்துக்கு முறைப்பாடுகளை செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும்...
கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன்ன, நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக இதுவரை செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பட்டலந்த பயிற்சி முகாமின் புதிய கட்டளைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்....
பரந்தன் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் இன்மையால், தருமபுரம் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஏ-9 வீதியில் பரந்தன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், பூநகரி வாவியடி பகுதியில் இருந்து, பரந்தன் பகுதி வரையான 23 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரே எரிபொருள் நிரப்பு நிலையமாகும். தருமபுரம் விவசாயிகள்,...
வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டமோன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, தமிழ் தேசிய...
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாய நிலை அவதானிக்கப்பட்டுள்ளது எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடாபில் அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது. 2017ம் வருடத்தின் முதல்...
துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில நேர்த்திக் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் நபரொருவர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று தெரிவித்தார். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து 275கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேகநபர், கிளிநொச்சிப் பொலிஸாரால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்...
ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்த காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை நகரில் (தற்போதைய மாவட்ட செயலக வளாகம்) ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில்...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது. இவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
