கிளிநொச்சிக்கு அமைச்சை வழங்குவதை மீள் பரிசீலிக்கவும் : முதல்வருக்கு சிறிதரன் கடிதம்!

வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, அக்கடிதத்தில் மேலும்,...

கிளிநொச்சியில் 11 வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமான சாரதி கைது

கிளிநொச்சியில் கடந்த 17ம் திகதி விபத்துக்குள்ளான சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய நபருடையது என சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் முழங்காவில் பொலிஸாரால் கைபற்றப்பட்டுள்ளது. அத்துடன் வாகனத்தின் சாரதியையும்கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முழங்காவில் நாகபடுவான் பகுதியை சேர்ந்த அ.அபினேஸ் என்ற11 வயது சிறுவன் முழங்காவில் தேவாலய திருவிழாவை...
Ad Widget

மல்லாவியில் பண்டாரவன்னியன் சிலை உடைப்பு?

முல்லைத்தீவு மல்லாவி நகரப்பகுதியில் பண்டாரவன்னியன் சிலை ஒன்று நிறுவப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. எனினும் திறந்து வைக்கப்பட்ட சில வாரங்களிலேயே அச்சிலையின் ஒரு பக்க கை மற்றும் வாள் என்பன உடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிலையானது சேதமடைந்த நிலையில் தொடர்ந்தும் காணப்படுவதுடன், இது மாவீரன் பண்டாரவன்னியனை கொச்சைப்டுத்தும் செயல் என மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழரின் வீரத்தை...

இரணைதீவை விடுவிக்க கோரி ஏ-32 வீதியில் மறியல் போராட்டம்

பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்;தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்pல் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட பகுதியாகக் காணப்படும் இரணைதீவில் வாழ்ந்த மக்கள் கடந்த 1992ம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து...

பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை : முழங்காவில் பெரும் பதற்றம்

சுமார் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக்...

வள்ளுவர் சிலையில் இருந்த ஈழம் என்ற சொல் அழிப்பு

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை (17) கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் உலக தமிழ் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவர் சிலை...

தர்மபுரத்தில் கொள்ளை; கொள்ளை கோஷ்டி கைது

தர்மபுரம் கல்லாறு பகுதியில், கடந்த 11ஆம் திகதி அதிகாலை 60 பவுன் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஐவரை, தர்மபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, ஒருதொகை நகைகள், ஒருதொகை பணம், மூன்று வாள்கள் மற்றும் கொள்ளை அடித்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...

கிளிநொச்சியில் விபத்து இரு இளைஞர்கள் அவசர சிகிச்சை பிரிவில்

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு இளைஞனின் கால் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது டிப்போ சந்தியில் இருந்து கனகபுரம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம்...

வடக்கில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பசுபதிபிள்ளை

எமது மக்களை அழிக்கும் நோக்குடனேயே கடன் வழங்கும் நிறுவனங்கள் எமது பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கின்றன அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக வடக்கு மாகாணசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு. பசுபதிபிள்ளை தெரிவித்தார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பொதுச் சந்தை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்...

இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பேரணி

தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தலைமையில் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாவட்ட செயலகம் ஊடாக கிளிநொச்சி கிருஸ்ணர் கோவில் வரை பேரணியாக சென்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்து கலாச்சார...

நியாய விலையில் மணலை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலயகம் முன் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நியாய விலையில் மணலைத்தா, நியாய விலையில் மணல் வேண்டும், மணலுக்கு விலையா? மலைக்கு விலையா?...

காலையில் திறக்கப்பட்ட கதவு பகல்வேளையில் மூடப்பட்டது

வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்றுத் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது. வருடாந்த பொங்கல் உற்சவம் வழமைபோன்று இம்முறையும் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வருகைதரும் பக்தர்களுக்குரிய போக்குவரத்துச்சேவைகள் உரிய முறையில் ஒழுங்குபடுத்த ப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன....

ஆயுத முனையில் அதிகாலை கொள்ளை

கிளிநொச்சி, கல்லாறு பகுதியில் ஆயுத முனையில் நாற்பது பவுண் தங்க நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபாய் பணம் என்பன, கொள்ளையிடப்பட்டுள்ளன இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து கொண்டு, நேற்று (11) அதிகாலை உட்புகுந்த, இனந்தெரியாத குழுவொன்று, அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு...

கிளிநொச்சியில் நீடிக்கும் வரட்சிநிலை: பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் வரட்சிநிலை காரணமாக பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச சபைகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாகவும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கரைச்சிப்பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் கோணாவில், மாலையாளபுரம், சாந்தபுரம், ஆகிய பகுதிகளிலும், பூநகரி பிரதேச...

பல அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்தார் வடக்கு முதல்வர்

வடக்கு முதல்வர் சி.வி.விக்ணேஸ்வரன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நகர், தண்நீரூற்று உள்ளிட்ட பகுதிகளில் பல அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளார். இதற்கிணங்க குறித்த பகுதிகளில் அமைக்கப்பட்ட நூல் நிலையம், பொதுச்சந்தைகள், குடி நீர்விநியோக திட்டம் உள்ளிட்டவைகளை வடமாகாண முதலமைச்சர் நேற்று(வெள்ளிக்கழமை) திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

அதிபரின் தண்டனையால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு தண்டனை வழங்கியமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த ஏழாம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அலுவலகத்திற்கு அழைத்து தண்டனை வழங்கியுள்ளார். இதனால் கை எலும்பில் ஏற்பட்ட...

மீன்கள் இறந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது

கடந்த தினங்களில் நந்திக்கடல் களப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வட்டுவாகல் களப்பில் பல்வேறு வகையான மீனினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பிரதேசங்களில் நிலவிய கடும் வறட்சியே அதற்கான காரணம் என மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாரா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, வறட்சியான காலநிலையில் களப்பு மற்றும் கடலுக்கு இடையிலான தொடர்பு...

கருத்தமர்வு எனக்கூறி மாணவியை அழைத்துசென்ற ஆசிரியரால் பரபரப்பு!

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரம் கல்வி பயிலுகின்ற மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்ற...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களை நியமிக்க அனுமதி

இலங்கை மருத்துவ சபை கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலைக்கு உள்ளகப்பயிற்சி மருத்துவர்களை நியமிப்பதற்கான அனுமதியினை மத்திய சுகாதார அமைச்சுக்கு கடந்த வாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாணத்தில் தற்போது யாழ்போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே மருத்துவர்கள் உள்ளகப் பயிற்சிக்காக (Internship) நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், எதிர்வரும் நவம்பர்...

இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திராதிகள் உதவியுடன் அந்த பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல்...
Loading posts...

All posts loaded

No more posts