Ad Widget

சிறுமியை கொன்ற நபருக்கு அதிஉயர் தண்டனை தாருங்கள் நீதிமன்றில் பெற்றோர் உருக்கம்

நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு அதி உயர் தண்டனை வழங்கும்படி நேற்று நீதிமன்றில் வலியுறுத்தினர் சிறுமியின் பெற்றோர். நீதிமன்றில் நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய், தந்தை மற்றும் சடலத்தை முதற்கண்ட சாட்சி ஆகிய மூன்று பேரினதும் சாட்சியங்கள்...

இலத்திரனியல் காட்சியறையில் இருந்து பணத்தைத் திருடிய நபர் பிடிபட்டார்

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல இலத்திரனியல் காட்சியறையில் இருந்து பணத்தைத் திருடிய நபர் கையும் களவுமாக பிடிபட்டார்.இவர் தற்போது யாழ். காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தெரிய வருவதாவது, இன்று காலை குறித்த இலத்திரனியல் காட்சியறைக்கு வந்த நபர் இலத்திரனியல் பொருள் ஒன்றை கொள்வனவு செய்து விட்டு பணத்தினை செலுத்த போயுள்ளார்....
Ad Widget

படையணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த யாழ்.மாணவர்கள் கைகலப்பு

தேசிய மாணவர் படையணி பயிற்சிக்காக ரந்தம்பை என்னும் இடத்துக்கு கடந்த 7 ம் திகதி அழைத்துச்செல்லப்பட்ட யாழ் மாணவர்கள், அங்கே பயிற்சியில் காட்டிய அதீத திறமையை பார்த்து, சிங்கள மாணவர்களுக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே கடந்த 12 ம் திகதி யாழ் மாணவர்கள் மீது நடத்திய முதலாவது தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது.அதன்பின்னர் கடந்த 14 ம் திகதி...

யாழ். மக்களிடையே விழிப்புணர்வற்ற தன்மையே சிறுமியர் மீதான துஸ்பிரயோகத்திற்கு காரணம்: எஸ்.சிவரூபன்

யாழ்.மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு அருகி வருகின்றமையால் சிறுமியர் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக, யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.2010ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக 110 சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். (more…)

யாழில் முச்சக்கர வண்டி சாரதியாக பெண்கள்

யாழில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட பெண்களுக்கு மகளீர் தினமான நேற்று, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் மானிய அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில், பெண்கள் யாழ் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில், 10 பெண்களுக்கு மானிய அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

ஆரம்பமாகியது வடக்கின் மாபெரும் துடுப்பாட்ட போர்

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 106 ஆவது 03 நாள் கிரிக்கெட் போட்டி மத்திய கல்லூரி மைதானத்தில் 08.03.2012 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது.பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீரர்களை கைகுலுக்கி உற்சாகப்படுத்தி...

யாழில் படைவீரர்கள் மூவர் சுட்டுக்கொலை?

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முருகன் கோவிலுக்கு அண்மையிலுள்ள இராணுவ காவலரணிலே பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த படைவீரர்கள் மூவர் நேற்று வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளதாக இணையத்தள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நெடுந்தீவு முகிலனின் ‘வெள்ளைப் பூக்கள்’

நெடுந்தீவு முகிலனின் வெள்ளைப் பூக்கள் என்ற குறுந்திரைப்படம், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி யாழ் ஞானம்ஸ் உல்லாச விடுதியில் 08-03-2012 வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி விநோதினி சிறீ மேனன் வரவேற்புரையையும், அறிமுக உரையினை ரி.கிருபாகரனும் (இலண்டன்), தலைமை...

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான வழக்கொன்றுக்காக தொடர்ந்து ஐந்து தடவை நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காத கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நிமால் ரத்நாயக்காவுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பகிரங்கப் பிடியாணை பிறப்பித்துள்ளது. (more…)

யாழ்.புங்குடுதீவு- குறிகட்டுவான் பகுதியில் பெளத்த பிக்கு அடாவடி! தாக்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில்

யாழ்.புங்குடுதீவு- குறிகட்டுவான் பகுதியில், பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த நெடுந்தீவைச் சேர்ந்த 19வயது இளைஞர் மீது பௌத்த பிக்கு (நயினாதீவு விகராதிபதி) ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளார்.நேற்று மாலை 3மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த யோ.லோரன்ஸ் (வயது19) என்ற இளைஞர், நெடுந்தீவு சமாசத்திற்குச் சொந்தமான படகில் பொருட்களை ஏற்றிக்...

மின்விநியோகம் துண்டிப்பு

யாழ்ப்பாணத்தில் உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் பராமரிப்பு வேலைகள் செய்யும் பொருட்டும் வீதி அகலிப்புக்காக உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது. (more…)

யாழ். பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபராக கே.ஜி.எல்.பெரகரா நியமனம்

யாழ். பிராந்திய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஜி.எல்.பெரகரா இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.இதன்போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் அவருக்கு விசேட பொலிஸ் அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.அத்துடன் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகராக ஸ்ரீ குணநேசன் பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரும் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றுள்ளார் என யாழ். பொலிஸ் நிலையம்...

வன்புணர்வின் பின் தலையைக் குத்திச் சிதைத்து நெடுந்தீவு சிறுமி லக்சினி கொடூரமாகக் கொலை;

நெடுந்தீவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஜேசுதாசன் லக்சினி, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் குத்தி தலை சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று நேற்று நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் ஒருவரை நேற்றுமுன்தினம் இரவே நெடுந்தீவு மக்கள் மடக்கிப்பிடித்துக் கடுமையாகத் தாக்கியவேளை, கடற்படையினரும் பொலிஸாரும் தலையிட்டு அந்த நபருக்கு உயிராபத்து...

இந்துக்களின் போர் சமனிலையில் முடிவடைந்தது

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த யாழ் இந்துக் கல்லூரி அணியினர் இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே தமது 4வது விக்கட்டினை இழந்தனர். சிந்துஜன் 09 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்திருந்தார். (more…)

அரச கரும செயற்பாடுகளை செய்ய அதிகாரிகள் பலர் ஆர்வமற்றுள்ளனர்: வடமாகாண ஆளுநர்

அரச வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்ட அரச அதிகாரிகள் பலர் பொதுமக்களுக்கு அரச கரும செயற்பாடுகளை செய்வதற்கு ஆர்வமற்றுள்ளனர் என்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.யாழ். வேம்படி மகளிர் பாடசாலையில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வடமாகாண அரச அதிகாரிகளுடன சந்திப்பிலே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)

தமிழ், சிங்களத்தில் வியாழன், ஆங்கிலத்தில் Wednesday: அறிவுறுத்தல் பலகையால் குழப்பம்!

கஸ்தூரியார் வீதியில் வாகன சாரதிகளுக்காக வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகையில் தமிழ் சொல்லிற்குரிய ஆங்கிலப் பதம் ( வியாழன்-wednesday) வேறுபட்டுக் காணப்படுவதனால் தாம் சிரமப்படுவதாக வாகனச் சாரதிகள் தெரிவித்தனர்.கஸ்தூரியார் வீதி ஒருவழிப் போக்குவரத்துப் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வீதியின் இரு மருங்கிலும் வாகனங்கள் நிறுத்துவது தடைசெய்யப்பட்டு ஒரு பக்கம் மட்டும் வாகனங்களை...

பாதுகாப்புச் செயலாளர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். யாழ்ப்பாண குடாநாடு மற்றும் அண்டிய தீவுப் பகுதிகளின் பாதுகாப்பு நிலைமைகளை காண்காணிக்கவும், பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்வதற்கும் இந்த விஜயம் வழியமைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் விசேட புகைப்படக் கண்காட்சி ஒன்றையும் பாதுகாப்புச் செயலாளர் இன்று அங்குரார்ப்பணம் செய்ய உள்ளார்....

அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில்;

சம்பள முரண்பாட்டுக் கோரிக்கை தீர்க்கப்படாததால் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீண்டும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுற்று நிருபத்தில் குறிக்கப்பட்டுள்ள சம்பள நிலுவைகள் வழங்கப்படவில்லை எனவும், 25 வீதமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி கடந்த மாதத்தில் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்....

பணத்தைச் சுருட்டி தமிழ் இளைஞர்களை டோஹோவில் அநாதரவாக்கியவர் கைது;

இலங்கையிலிருந்து 269 பேரை கனடாவுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி பலகோடி ரூபாவைச் சுருட்டிக் கொண்டு ஆபிரிக்க நாடுகளான டோஹோ மற்றும் மாலி முதலான நாடுகளுக்கு கூட்டிச்சென்று அநாதரவான நிலையில் அவர்களைக் கைவிட்ட பிரதான சந்தேக நபரான அருணகிரிநாதன் ஜெயரூபனைக் கைதுசெய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பலகோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவருவதாகவும் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ். கே.கே.எஸ் வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி அகலிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த ஓராண்டு காலமாக காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீதி அகலிப்பு பணிகளின் காரணமாக இந்த வீதியால் பயணம் செய்யும் வாகனங்களும் பொது மக்களும் பாடசாலை மாணவாகளும் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்துள்ளனர். இன்றும் தொடர்ந்து அந் நிலையே காண்படகிறது....
Loading posts...

All posts loaded

No more posts