Ad Widget

யாழில் முச்சக்கர வண்டி சாரதியாக பெண்கள்

யாழில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட பெண்களுக்கு மகளீர் தினமான நேற்று, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் மானிய அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில், பெண்கள் யாழ் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில், 10 பெண்களுக்கு மானிய அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கணவன்மாரை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த பெண்கள், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்கள் என கிராம சேவை உத்தியோகத்தர்களின் உதவியுடன் இந்தப் 10 பெண்களும் தெரிவு செய்யப்பட்டதாக, யாழ்மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரட்னம் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 04பேர் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும், 02பேர் யாழ்ப்பாண செயலகப் பிரிவிலிருந்தும், 03பேர் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும், ஒருவர் கோப்பாய் பிரதேச செயலக பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவும் இவர்களுக்கான சாரதிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு சாரதி அனுமதிப் பத்திரமும் பெறுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி செல்வி திருச்சந்திரன் தெரிவிக்கையில்,

பெண்களும் சாதிக்கமுடியும் என்ற ஊக்கத்ததையும், நம்பிக்கையையும் வழங்கும் முகமாகவே தமது நிறுவனம் செயற்பட்டு வருவதாவும் 4 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு, வாரந்தம் 3 ஆயிரம் ரூபா வீதம் 24 மாதங்கள் இரண்டு இலட்சத்து 88ஆயிரம் ரூபா வங்கிக் கடன் பணம் செலுத்தினால் மட்டும் போதும் என்றும் மீதி 1, 12, 000 ரூபா பணத்தை தமது பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி.திருச்சந்திரன், உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் திருமதி ஷிராணிமில்ஸ், யாழ்.மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம், திட்ட உத்தியோகத்தர் மாலதி, சுதாயஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts