கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி.வடக்கு மக்களின் போராட்டம்

கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம் வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ளது அச்சுறுத்தல்களையும் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம்  வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தகட்டப் போராட்டத்திற்கும் நில ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்...

எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்; மக்கள் போராட்டத்தில் குதிப்பு

வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை8 மணி முதல் மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,எம்.ஏ.சுமந்திரன்,சி.சிறீதரன்,தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வி்.ஆனந்த...
Ad Widget

‘உதயன்’க்கு எதிராக டக்ளஸ் மற்றுமொரு வழக்குத் தாக்கல்!

“உதயன்” பத்திரிகைக்கு எதிராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நான்காவதாக மற்றுமொரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். தன்னை அவமானப்படுத்தும் நோக்கிலும், அவதூறுக்கு உள்ளாக்கும் நோக்கிலும்  ”உதயன்” பத்திரிகை பல தவறான செய்தி அறிக்கைகளை பிரசுரம் செய்துள்ளதென்றும்,  அத்தகைய மூன்று செய்திப் பிரசுரங்கள் தொடர்பாக மேற்படி பத்திரிகை நிறுவனத்துக்க எதிராக...

ஏனைய கட்சிகள் இணைந்து ‘த.தே.கூ’வை பதிவுசெய்ய தீர்மானம்!

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள்...

த.தே.கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் விஜயரட்ணம் எட்வின் டானியல் ஐ.தேக. உறுப்பினராக நியமனம் பெற்றுக் கொண்டார்.யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று(26) மாலை 5.30 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களிடையே சந்திப்பு...

கொழும்பு ஆனந்தாக்கல்லூரியை 8 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது யாழ் இந்துக் கல்லூரி

யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையிலான வி.ரீ.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக்கிண்ணத்துக்கான இரண்டாவது வருடாந்த நட்புறவு கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. இதனடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி இப் போட்டியில் வெற்றி கொண்டது. இப் போட்டி பற்றிய முழு விபரம்...

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் யாழ்ப்பாணத்தில் !

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது, 'அரசாங்கம் உடைத்து உடைத்து தேர்தலை நடத்தினால்...

மக்கள் முன்னணி நடாத்தும் காணி சுவீகரிகப்புக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது! மாவை சேனாதிராஜா அறிவுறுத்தல்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் செயலகத்திற்கு முன்னால் இன்று 24.4.2013 நடாத்தும் காணி சுவீகரிகப்புக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா அறிவுறுத்தல் வழங்கியதாக எமது இணையத்தளத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது எந்தப் போராட்டம் செய்வதானாலும் தமிழரசுக் கட்சி முன்னிலைப்படுதப்பட வேண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால்...

சிறுவர் இல்லங்களில் ஆண்களைப் பணிக்கு அமர்த்த முடியாது: யாழ் அரச அதிபர்

யாழ்.குடாநாட்டில் பெண்கள், சிறுவர்களுடன் இயங்கும் இல்லங்கள், நிறுவனங்கள் எவற்றிலும் ஆண்களைப் பணிக்கு அமர்த்த முடியாது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.கைதடியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் துஷ்பிரயோகம் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவற்றைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன...

தொடர்ந்தும் வீழ்ந்துவரும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது, செவ்வாய் காலை நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 46 ஆயிரம் ரூபாய்க்கும் கீழிறங்கியுள்ளது.அமெரிக்க பொருளாதாரம், வலுவடைந்து உயரும் டாலர் மதிப்பீடு, சைப்ரஸ் பெருமளவில் தங்கத்தை விற்கக்கூடும் என்ற நிலையில் மிக அதிக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்திருந்தமை இவற்றின் ஒட்டுமொத்த விளைவாய் தங்கத்தின் விலை பன்னாட்டு சந்தைகளில் பெரும்...

பொது பல சேனாவுக்கு எதிரான கண்டன நிகழ்வு கலைக்கப்பட்டது

இலங்கையின் தலைநகர் கொழும்பில் தும்முள்ள சந்தியில் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனாவின் தலைமை அலுபலகத்துக்கு முன்பாக, அவர்களது கொள்கைகளை கண்டித்து அமைதி எதிர்ப்பு நிகழ்வு ஒன்றை நடத்த முயன்ற ‘’பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு’’ என்னும் ஃபேஸ்புக் குழு ஒன்றின் உறுப்பினர்களை பொலிஸார் கலைத்ததாகவும், பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் என்று நம்பப்படுபவர்கள்...

பிரபாகரனும் சூசையும் இறுதி வரை போரிட்டே உயிரிழந்தனர்: சரத் பொன்சேகா

கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை நிராகரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, போரின் இறுதிநாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சூசையும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். கொழும்பில்  செய்தியாளர்களிடம் பேசியபோதே சரத் பொன்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,போரின் இறுதி நாளில் பிரபாகரன் மற்றும் 100 போராளிகளுடன்...

உதயன் பத்திரிகையின் இயந்திரப் பகுதி எரித்து நாசம்!

விஜய தமிழ்ப்புத்தாண்டு சுபநேரங்கள் !

பிறக்கும் விஜய தமிழ்ப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 13ஆம் திகதி சனிக்கிழமை முன்னிரவு 11.58 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிக்கிழமை பின்னிரவு 1.29 க்கும் பிறக்கிறது.வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி அன்று இரவு 7.58 மணி முதல் அதிகாலை 3.58 வரை விஷ¤ புண்ணிய காலம் என்றும், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி அன்று இரவு 9.29...

யாழ் செயலகத்தில் இயங்கிய ஆட்பதிவுத்திணைக்கள அலுவலகம் வவுனியாவுக்கு மாற்றம்!

யாழ் செயலகத்தில் இயங்கிய ஆட்பதிவுத்திணைக்கள அலுவலகம்  எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி முதல் வவுனியாவுக்கு மாற்றப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக செய்திகள் கிடைத்துள்ளது.இலங்கை ஆட்பத்திவுத்திணைக்களத்தின் உப அலுவலகம் இதுவரை யாழ் செயலகத்தில் இயங்கிவந்தது. அதன் மூலம் யாழ்மாவட்ட மக்களின் சாதாரண முறையிலான ஆட்பத்திவு விண்ணப்பங்கள் பிரதேசசெயலகங்களுக்கூடாக பெறப்பட்டு கையாளப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒருமாதத்துக்கு சுமார் 1600 விண்ணப்பங்கள்...

‘நாம் இன்று பயிரிடுவோம் நாளை பயன் பெறுவோம்’ – மர நடுகை நிகழ்வு

‘நாம் இன்று பயிரிடுவோம் நாளை பயன் பெறுவோம்’ தொனிப்பொருளுக்கு அமைய கருமங்களை ஆரம்பிக்கும் புத்தாண்டின் சுபவேளையில் நான்கு மில்லியன் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் - 2013 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. விவசாய ஆசிரியர் திரு.க.மகேந்திரன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந் நிகழ்வில் கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்கள் தலைமைதாங்கினார்.'பயன்மிக்க மரங்களை நடுவதன் மூலம் மாணவர்கள்...

நாயாறு சென்ற தமிழர்கள் விரட்டியடிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலில் தமது நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற தமிழ் மக்களை "இங்கே வர வேண்டாம் ஓடிப் போங்கள்'' என்றவாறு இராணுவத்தினர் விரட்டியடித்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். நாயாறுப் பாலத்துக்கும் கொக்குத்தொடு வாய்க்கும் இடையிலுள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலுக்கு பங்குனி உற்சவத்தை...

யாழில் விபச்சார விடுதி முற்றுகை! அதிகாரிகள் அதிரடி!

யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் ”நது ஓய்வு விடுதி” என்ற பெயரில் இயங்கிவந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்று நேற்று(28)முற்றுகையிடப்பட்டுள்ளது.யாழ். பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில் பெண்கள்...

கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல: ஆனந்த சங்கரி

'தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் த.தே.கூ.வினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளா?' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி...

உதயன் செய்தியாளர் கிணற்றில் தவறி வீழ்ந்து அகாலமரணம்

உதயன் ஒன்லைன் செய்தியாளர் புவனேந்திரராசா மயூதரன் (வயது29) நேற்று அதிகாலை வீட்டுக்கிணற்றில் தவறி வீழ்ந்து அகாலமரணமானார்.இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் பலவீனமுற்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மயூதரனின் இறுதிக் கிரியைகள் இன்று தற்காலிக இல்லமான பழைய தபாற்கந்தோர் வீதி, லீலாவத்தை தெல்லிப்பளையில் நடைபெற்றது. மயூரதன் உதயன் இணையத்தள செய்தியாளராக கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts