நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம்;

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் உற்வசம் நடைபெறவுள்ளது. இவ் உற்சவத்தை முன்னிட்டு ஆலய நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உற்வசத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா...

வவுனியாவிலிருந்து புகையிரதம் கிளிநொச்சி வரை வந்தது

வடபகுதிக்கான புகையிரதப் பா தையை அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள் நேற்று முன்தினம் கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதிக்கு புகையிரதத்தில்கொண்டு வரப்பட்டுள்ளது.பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற புகையிரதமொன்றிலேயே இப் பொருட்கள் கிளிநொச்சிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கிளிநொச்சி மக்களுக்கு புகையிரதசேவையை விரைவாக வழங்குவதற்காக இப் பாதை அமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன. இவ் வருட இறுதிக்குள் கிளிநொச்சிக்கு...
Ad Widget

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா. – வேட்பாளர் பட்டியல் வெளியாகியது

வடமாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈ.பி.டி.பி) முதன்மை வேட்பாளராக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசகர் சின்னத்துரை தவராசா போட்டியிடவுள்ளார்.ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், சீறிரெலோ கட்சியும் போட்டியிடுகின்றன. இதன்பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள்...

கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் யாழ்.வேட்பாளர் விபரம்

வடக்கு மாகாகண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியாகியுள்ளது. (more…)

தமிழரசுக்கட்சியின் ஆசனப்பங்கீட்டில் இழுபறி 2 பிரதேசசபை உறுப்பினர்கள் இராஜினாமா மிரட்டல்?

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுகட்சியின் சார்பில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பிலான இறுபறிகளின் தொடராக தமிழரசுக்கட்சியின் மூத்த தூண்களாக கருதப்படுகின்றவர்களில் ஒருவர் கட்சிஅங்கத்துவத்திலிருந்து விலகியிருப்பதாகவும் மற்றொருவர் விலகுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.அவ்வகையில் தனக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் வழங்கப்படவில்லை என்பதன் பின்னணியில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் பொ.கனகசபாபதி தமது அங்கத்துவம் மற்றும் தற்போது வகித்து...

தமிழீழப் பிரகடனத்தை வரதர் ஒருபோதும் செய்திருக்கவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன் !

வட கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தனித் தமிழீழ பிரகடனத்தை ஒருபோதும் செயிதிருக்கவில்லை, ஏழு அம்சக் கோரிக்கையினையே அவர் முன்வைத்திருந்தார் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழான அதிகாரங்களான நடைமுறைப்படுத்த வட மாகாண சபைக்கு அனுமதியளிக்கப்படா...

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பெயரில் அறிக்கை

வடமாகாண தேர்தல் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.ஆயினும் கையொப்பமிட்டவரின் பதவிநிலையோ அல்லது பெயரோ அதி்காணப்படவில்லை.அறிக்கை ஒன்றியத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டதா என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. அறிக்கை வருமாறு. மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசத்திடமிருந்து விஸ்வரூபம்...

இணக்க அரசியலுக்கு விக்கினேஸ்வரனே பொருத்தம் என்கிறார் பஸில்

"அரசுடன் இணக்க அரசியல் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனே பொருத்தமானவர். ஏனெனில் அவர் எமது அமைச்சர் ஒருவரின் உறவினர். இவரின் நியமனத்தை நாம் வரவேற்கிறோம். இந்த விடயத்தில் கூட்டமைப்பின் முடிவு எமக்குச் சாதகமானது.'' இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான...

யாழ் மாவட்டம் அண்மைக்காலத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.-அரச அதிபர் கூறுகிறார்

யாழ் மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த யாழ் மாவட்டத்தின் நிலமை அண்மைக்காலத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.மேற்க்கண்டவாறு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அபிவிருத்திப் பணிகளை அறிகையிடல் சம்பந்தமான ஒரு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர்...

சுயேட்சையாக போட்டியிடுங்கள் சட்டத்தரணி குருபரன் கூறும் ஆலோசனை!

சிவில் சமூகத்தினுடைய நிலைப்பாடு வட மாகாண சபை தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் எங்களுடைய கொள்கை நிலைப்பாடு தமிழ் தேசிய அரசியலில் இருக்கும் எந்தவொரு கட்சியும் நேரடியாக மாகாண சபை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதாகும். இந்த நிலைபாட்டை நாம் 2010 முதலே எடுத்து வந்துள்ளோம். 13ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தீர்வை...

வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக முஸ்லிம் ஒருவர் போட்டியிடவுள்ளார் !

முஸ்லிம் புத்திஜீவிகள் குழுவினருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் ஒருவரை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் களமிறக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பில் தமிழ்...

முன்னாள் தளபதி எழிலனின் மனைவி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கம்?

வடமாகாண தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. யாழ் மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டிற்கான தெரிவுக்கூட்டத்தின் அடிப்படையில் மொத்தமுள்ள 19 இடங்களில் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18 ஆசனங்களில்...

கந்தன் ஆலயத்தின் உள்ளே காலணியுடன் காவல்துறை

வரலாற்றுச்சிறப்பு மிக்க நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்மண்டபத்தில் அரசியல்வாதி ஒருவரின் பாதுகாப்புக்காக வந்த ஆயுதம் தரித்த சிறப்பு காவல்துறையினர் காலணியுடன் பிரவேசித்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை ஊடகவியலாளர்களின் கமெராவில் சிக்கி நியு யப்னா இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. காலணியுடன் சர்வசாதாரணமாக காணப்படும் அந்த காவல்துறையினரின் செய்கை இந்துக்களின் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதே தெய்வ...

பழைய தட்டச்சு பொறிகளைத் தேடுகிறது ரஷ்யா

ரஷ்யாவில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப் பொறிகளையே (டைப்ரைட்டர்ஸ்) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது. இஸ்வேஸ்டியா (Izvestia) என்ற ரஷ்ய அரசுக்கு மிக நெருக்கமான நாளிதழ் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் லட்சக் கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டமையும், மிக...

ஜனாதிபதி – சம்பந்தன் சந்திப்பு

இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் இன்று காலை அவரை சந்தித்துப் பேசினார். பிரிபடாத- ஐக்கிய இலங்கைக்குள்...

‘மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது’ -அமைச்சரவை

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மாகாணசபைகளுக்கான...

மகாசேனுக்காக மன்னிப்புக் கோரிய இலங்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு மகாசேன் என்று சூட்டிய பெயரை சிறிலங்கா விலக்கிக் கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புயலுக்கு மகாசேன் என்று பெயரிடப்பட்டது. அது தற்போது திருகோணமலையில் இருந்து 650 கி.மீ தொலைவில் உள்ளது. இது மியான்மர் - பங்களாதேஸ் நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும் இதன் தாக்கம் சிறிலங்காவிலும் காணப்படுகிறது. அங்காங்கே சிறியளவிலான...

யாழ் இளையவர்களால் அன்னையர் தின பாடல் வெளியீடு

யாழ் இளையவர்களால் அன்னையர் தின பாடல் ஒன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மனதை உருக்கும் காட்சிகள் மற்றும் இளைமைக்காலத்தினை நினைவுக்கு கொண்டுவருகின்ற அழகிய காட்சிகள் அடங்கியதாக அழகிய கவி வரிகளுடன் இந்த பாடல் அமைந்துள்ளது. தினேஸ் ஏகாம்பரத்தின் பாடல்வரிகளிலும் இசையிலும் இயக்கத்திலும் வெளிவந்த இப்பாடலை நெடுந்தீவு யோகேஸ்,அம்மு,பிரின்ஸி ,தினேஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.ஒலிப்பதிவு சுதர்சனாலும் ஒளிப்பதிவு எஸ்.கௌரீசன் ,சஞ்சைய்...

தீர்வுத் திட்டம் தயாரிக்க சட்டவாளர்களின் மூவர் குழு; 2 வாரத்தில் வரைவு தயாரிக்கப்படும்.மன்னார் கூட்டத்தில் முடிவு!

தமிழர்களுக்கான ஆகக் குறைந்த தீர்வுத் திட்ட வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்காக மூவர் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று இடம் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் போதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று மன்னார்...

த.தே.கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக முடிவுகள் ஏதுமில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான அவசரகலந்துரையாடல் ஒன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இன்று காலை மன்னார் ஞானோதய மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான...
Loading posts...

All posts loaded

No more posts