- Sunday
- July 5th, 2026
எகிப்த்தின் உள்நாட்டு பயணிகள் விமானம் MS181 கடத்தப்பட்டுள்ளது. அலக்சாண்டிரா வில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானமே கடத்தப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்ட விமானம் தற்போது சைப்பிரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாக தெரியவருகின்றது. இந்த Airbus 320 ரக விமானத்தில் 81 பயணிகள் இருந்ததாக எகிப்தியன் ஏயார் நிறுவனம் கூறுகின்றது. விமானியிடமிருந்து கட்டுப்பாட்டறைக்கு கிடைத்த தகவலின் படி வெடிக்கும் பட்டியணிந்த பயணி...
இலங்கை இராணுவத்தினரால் பிரபாகரனின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போதிலும், தமிழர் தரப்பை வெற்றிக் கொள்ள முடியாதுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்திலுள்ள பெரும்பான்மை சமூகத்தின் காணிகளை, சிறுபான்மை மக்கள் சுவீகரித்து...
தகவலறியும் உரிமை தொடர்பான சட்ட மூலத்தை இன்று(8) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். இந்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த சட்டமூலம் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண சபைகளினதும் அனுமதியைப் பெற்றுள்ளதாக, கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். வட...
2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைப்படி தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை 2 வீதத்தில் இருந்து 4 வீதமாக அதிகரிப்பதனால் அனைத்து துறைகளிலும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் ஏற்படலம். ஆகவே தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்பட மாட்டாது.என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். இன்று நாடாளுமன்றத்தில் விஷேட உரை நிகழ்த்திய பிரதமர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து...
யாழ்.தனியார் பஸ் நிலையம் அருகில் 14 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரு இளைஞர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் காலை பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலொன்றையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து 8.கிலோவும் 400கிராமும் பெறுமதியான கேரள கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும்...
புதிதாக பதவிஏற்றுள்ள யாழ் கட்டளைத்தளபதி ஏற்பாட்டில் மகா சிவராத்திரிக்காக கோயில் துப்பரவு செயற்பாடுகளும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கும் பணியும் இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக, தமது படை வீரர்களைக் கொண்டு குடாநாட்டில் உள்ள முக்கிய ஆலயங்கள், உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை புனிதமாக்கும் பணிகளில் ஈடுபட வைத்துள்ளார்....
மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி முகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு...
எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினைத் தொடர்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத் தெரிவிக்கையில், 'இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல்...
கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் சைவநெறி புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தரம் 6,10 இலவச பாடநூல் 2015இல் வெயிடப்பட்டிருந்தது. இருந்தும் அப்பாடநூல்களில் பல்வேறு பிழைகள் இருப்பதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். அதற்கிணங்க கல்வி வெளியீட்டுத்திணைக்களம் அப்பிழைகளை ஏற்றுக் கொண்டு தற்போது பாடநூலின் திருத்தங்களை உள்ளடக்கிய இணைப்பு ஒன்று அனுப்பிவைக்கபட்டு வருகின்றது. இருந்தும்...
''சித்திரைப் புத்தாண்டுக்குள் எம்மை எமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யாவிடின், வெள்ளைக் கொடிகளுடன் எமது பகுதிக்குள் அத்துமீறி பிரவேசிப்போம்'' என வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் சூளுரைத்துள்ளனர். வலி.வடக்கு நலன்புரி நிலைய பொது நிர்வாக அமைப்பினரின் ஏற்பாட்டில்இ யாழ். சபாபதிபிள்ளை மற்றும் கண்ணகி நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி...
அரசுக்கு எதிராக நேர்த்திக்கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொது எதிர்க்கட்சியினர் நேற்று நான்காம் கட்ட தேங்காய் உடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கமைய கொழும்பு முகத்துவாரம் காளி அம்மன் கோயிலில் பந்துல குணவர்தன எம்.பி. தலைமையில் நேர்த்திக் கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டம் இடம்பெற்றது. ஒடுக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், அரசியல் சுதந்திரத்தையும்...
ejaffna இணையத்தளம் இன்று முதல் Anroid Mobile Apps ஆக Google Play Store இல் பெற்றுக்கொள்ள முடியும்.இதன்மூலம் ஒவ்வொரு தடவையும் தள முகவரியினை தேடிக்கொண்டிராமல் யாழ் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். இணைப்பு இதோ https://play.google.com/store/apps/details?id=com.weJaffna
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை டெல்லியில் உள்ள தலைமை...
மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுடைய பேச்சு இனரீதியான பிரச்சினையைத் தோற்றுவிக்கக்கூடியது. அவரது பேச்சு நூறு விகிதம் பிழையானது. அவர் இவ்வாறு தொடர்ந்து பேசினால் நாங்களும் அரசியல் கதைக்கவேண்டிவரும் என எச்சரித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி.ஒரு அரச அதிகாரியை சபையில் வைத்துச் சாடுவது ஏற்றுக்கொள்ள முடியாத மிக மோசமான செயல் எனவும் குறிப்பிட்டார். யாழ் மாவட்ட...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினதும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினதும் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று நல்லுாரில் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையிமுக்கிய பொழிப்பு வருமாறு *தமிழ் தேசத்தின் முடிவு 2009 இல் நடைபெறவில்லை அதன் முடிவு 2016 இல்தான் எழுதப்படுகிறது! அதுகுறித்து அக்கறைகொள்ளவேண்டும் *எண்ணிக்கை முக்கியமில்லை...
இனி பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சையின் மூலமே வேலை என இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது . இலங்கையில் அரசாங்க சேவைக்கு ஆரம்ப காலத்தில் பட்டதாரிகள் நேரடியாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அதேவேளையில், அதன் பிரகாரம், 1964 ஆம் ஆண்டு வரை பட்டதாரிகள் சகலருக்கும் அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்காக பட்டதாரிப் பயிலுநர் முன்மொழிவுத்...
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக விசாரணை கோரி மாகாண சபையில் கூட்டமைப்பின் புளட் உறுப்பினர் லிங்கநாதனால் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று (9) நடைபெற்றது. அதன்போது, இரணைமடு நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பார்த்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் , பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான...
இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016 காலை யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காலை 9.30 மணியளவில் முதலமைச்சரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ் விசேட சந்திப்பில் வடக்கு முதல்வரால் தமிழ்...
நேற்று நடந்த சம்பவம் மகிழ்ச்சி தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சந்தோசம் சிறிய விடயமாக இருந்தாலும் சிங்கள தமிழ் சகோதரத்துவத்தில் வேறுபாடுகளுக்குள்ளும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது சிங்கள சகோதரர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் பத்து அடி எடுத்து வைக்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று(5) பௌத்த விகாரையில் வழிபாடுகளை...
தமிழ் மக்கள் பேரவையுடனான வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையில் தாம் கையெழுத்திடவில்லையென 11 உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாதென வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றை மாகாண...
Loading posts...
All posts loaded
No more posts
